இது மங்கையர்மலரின் விவிதபாரதி….பகுதி-9."ஹே… ராசாத்தி ரோசாப்பூ .வா வா வா .அடியே சீமாட்டி பூச்சூட்டி .வா வா வா. தேவதையே திருமகளே .மாங்கனியே மணமகளே.மாலை சூடும் குணமகளே .வா வா வா " .நேர்மறையான விமர்சனங்கள் பெற்ற அருமையான படம். 'என் உயிர் தோழன்'….டைரக்க்ஷன்: இயக்குனர் இமயம் பாரதிராஜா, வருடம்: 1990, பாடலாசிரியர்: கங்கை அமரன், இசை: இசைஞானி இளையராஜா, பாடியவர்: மலேசியா வாசுதேவன்..புதுப்பேட்டை, மெட்ராஸ் படங்களுக்கெல்லாம் "என்உயிர்த் தோழன்"தான் அகராதி. அந்த அளவுக்கு இந்தக் கால அரசியல் துரோகங்களை 32 வருடங்களுக்கு முன்பே எடுத்துக்காட்டிய நல்ல படம் இது. குயில் குப்பத்து தர்மவாக பாபுவும், விளாத்திகுளம் கிராமத்தில் வாழும் கூத்து நடிகனாக தென்னவனும், (படத்தில் இவருக்கு குரல் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா) படித்த கிராமத்து பெண்ணாக ரமாவும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பர்..(ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதுகிறார். பாடகனின் குரலைக் கேட்டு நாயகி காதலில் விழுவதாகக் கதை. தொடர் பாதியில் கைவிடப்பட்டு படமாகியது)… ஒளிப்பதிவு பாரதிராஜாவின் ஆஸ்தானபி. கண்ணன். (இவர் இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகன் / திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது) பாரதிராஜா மனதில் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் விஷுவலாக கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்..இவர் பாரதிராஜாவுக்காக ஒளிப்பதிவு செய்த படங்கள் ஏராளம் ஏராளம்...2001ல் "கடல் பூக்கள்" படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாராம் விருது இவருக்கு கிடைத்தது..என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் இடம் பெறும் மேற்படிப் பாடலின் ஒளிப்பதிவு கண்ணை விட்டுஅகலாது.."ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் .நீயாட அதில் நானாட நேரம் வந்தாட" .என்ற வரிகளில் நீர் அலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி ஹீரோயின் ஆடிக்கொண்டே இருப்பது போல் ஒரு காட்சியை அவ்வளவு அழகாக எடுத்திருப்பார் பி கண்ணன். மலேசியா வாசுதேவனை இருமுறை பாட வைத்து அதை ஒன்றாக்கி இந்த பாடலை வெளியிட்டு இருப்பார் இசைஞானி. கேட்கும்போது 2 "டிராக்குகள்" ஒலிப்பது தெரியும் (கூர்ந்து கவனித்தால்).. பாடகரின் மெல்லிய எதிரொலியையும் பாட்டுடன் இணைத்திருப்பார். இது இசைஞானியின்பல புதுமைகளில் ஒன்று. இதை இரண்டு முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாடி அசத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். அதிலும் குறிப்பாக பாடலின் இரு இடையிசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம் வரும்… அந்த மௌனத்தை ஒளிப்பதிவின் மூலம் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் நம்மிடம் கடத்திவிடும் அழகே அழகு.."கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும். மஞ்சம் இரண்டான போதும். நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும் .தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ".கங்கை அமரனின் வரிகள் நம்மை அந்தசூழலுக்குள்ளே அழைத்துச் செல்லும். பாடலைக் கேட்கும்போது நாமும் அந்த பாடலைகூடவே பாடுவதைத் தவிர்க்க முடியாது..உங்களுக்கும் உடனடியா இந்தப் பாடலை கேட்கணும்னு தோணுதா! கண்டிப்பா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே பாடுங்க….என்றென்றும் அன்புடன்ஆதிரை வேணுகோபால்.
இது மங்கையர்மலரின் விவிதபாரதி….பகுதி-9."ஹே… ராசாத்தி ரோசாப்பூ .வா வா வா .அடியே சீமாட்டி பூச்சூட்டி .வா வா வா. தேவதையே திருமகளே .மாங்கனியே மணமகளே.மாலை சூடும் குணமகளே .வா வா வா " .நேர்மறையான விமர்சனங்கள் பெற்ற அருமையான படம். 'என் உயிர் தோழன்'….டைரக்க்ஷன்: இயக்குனர் இமயம் பாரதிராஜா, வருடம்: 1990, பாடலாசிரியர்: கங்கை அமரன், இசை: இசைஞானி இளையராஜா, பாடியவர்: மலேசியா வாசுதேவன்..புதுப்பேட்டை, மெட்ராஸ் படங்களுக்கெல்லாம் "என்உயிர்த் தோழன்"தான் அகராதி. அந்த அளவுக்கு இந்தக் கால அரசியல் துரோகங்களை 32 வருடங்களுக்கு முன்பே எடுத்துக்காட்டிய நல்ல படம் இது. குயில் குப்பத்து தர்மவாக பாபுவும், விளாத்திகுளம் கிராமத்தில் வாழும் கூத்து நடிகனாக தென்னவனும், (படத்தில் இவருக்கு குரல் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா) படித்த கிராமத்து பெண்ணாக ரமாவும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பர்..(ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதுகிறார். பாடகனின் குரலைக் கேட்டு நாயகி காதலில் விழுவதாகக் கதை. தொடர் பாதியில் கைவிடப்பட்டு படமாகியது)… ஒளிப்பதிவு பாரதிராஜாவின் ஆஸ்தானபி. கண்ணன். (இவர் இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகன் / திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது) பாரதிராஜா மனதில் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் விஷுவலாக கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்..இவர் பாரதிராஜாவுக்காக ஒளிப்பதிவு செய்த படங்கள் ஏராளம் ஏராளம்...2001ல் "கடல் பூக்கள்" படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாராம் விருது இவருக்கு கிடைத்தது..என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் இடம் பெறும் மேற்படிப் பாடலின் ஒளிப்பதிவு கண்ணை விட்டுஅகலாது.."ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் .நீயாட அதில் நானாட நேரம் வந்தாட" .என்ற வரிகளில் நீர் அலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி ஹீரோயின் ஆடிக்கொண்டே இருப்பது போல் ஒரு காட்சியை அவ்வளவு அழகாக எடுத்திருப்பார் பி கண்ணன். மலேசியா வாசுதேவனை இருமுறை பாட வைத்து அதை ஒன்றாக்கி இந்த பாடலை வெளியிட்டு இருப்பார் இசைஞானி. கேட்கும்போது 2 "டிராக்குகள்" ஒலிப்பது தெரியும் (கூர்ந்து கவனித்தால்).. பாடகரின் மெல்லிய எதிரொலியையும் பாட்டுடன் இணைத்திருப்பார். இது இசைஞானியின்பல புதுமைகளில் ஒன்று. இதை இரண்டு முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாடி அசத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். அதிலும் குறிப்பாக பாடலின் இரு இடையிசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம் வரும்… அந்த மௌனத்தை ஒளிப்பதிவின் மூலம் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் நம்மிடம் கடத்திவிடும் அழகே அழகு.."கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும். மஞ்சம் இரண்டான போதும். நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும் .தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ".கங்கை அமரனின் வரிகள் நம்மை அந்தசூழலுக்குள்ளே அழைத்துச் செல்லும். பாடலைக் கேட்கும்போது நாமும் அந்த பாடலைகூடவே பாடுவதைத் தவிர்க்க முடியாது..உங்களுக்கும் உடனடியா இந்தப் பாடலை கேட்கணும்னு தோணுதா! கண்டிப்பா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே பாடுங்க….என்றென்றும் அன்புடன்ஆதிரை வேணுகோபால்.