கேக் படுத்திய பாடு!.தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்..ஒரு அலுவலகத்தில் நிர்வாகம், கணினி, நிதி, மார்கெட்டிங், விற்பனை என்று எந்தப் பொறுப்பில் இருந்தாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் பணிகளை திறமையாக செய்வதில் இன்று பெண்கள் தூள் கிளப்பு கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இன்றைய பெண்களின் பங்கு மகத்தானது. தொழில் முனைவோராகவும் பலர் வெற்றிகரமாக உலா வருகிறார்கள்..இருந்தாலும் பணிகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். சொந்தப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னைகள் என்று நிறையவே. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..தொழில் முனைவர் ,வங்கிகள், அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரிவோர் இவர்களுக்கெல்லாம், அவர்களைத் தேடிவரும் வாடிக்கையாளர் அல்லது திருவாளர் பொதுஜனம் வாயிலாக ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வந்திருக்கும். அவர்களை மீட்க நேரிடும். அல்லது அவர்களாலும் சிக்கல் வந்து அவற்றைத் தீர்க்க வேண்டிய தருணங்களும் ஏற்படும். அவை எரிச்சலூட்டும், நகைக்க வைக்கும் அல்லது பரிதாபப் பட வைக்கும்..சில மற்றவர்களுக்கு பாடமாகவும் அமையும்..வெவ்வேறு துறைசார் பெண் ஆளுமைகள் அத்தகைய சம்பவங்களை மங்கையர் மலர் வாசகிகளுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது….சவாலே சமாளி!.ஆன்லைனில் பேக்கரி நடத்தும் இளம் பெண் மகேஸ்வரி சித்ரவேல் அவர்களை சந்திப்போம். மகேஸ்வரி சென்னை மாம்பாக்கத்தில் கேக் அண்ட் க்ரஷ் (Cake & Crush) என்ற பெயரில் இயங்கி வரும் கேக் கடைக்கு சொந்தக்காரர். இந்த வருடம்தான் எம்.பி.ஏ முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருப்பவர்..இவருக்கு ஒரு ஆன்லைன் ஆர்டர் வந்திருக்கிறது. ஒரு பெண்மணி தனக்கு திருமண நாள் என்று பெரிய கேக் ஆர்டர் செய்திருக்கிறார். மகேஸ்வரியும் தனது இடத்தில் தயார் செய்து டெலிவரி பாய்ஸ் மூலம் கேக்கை அனுப்பி விட்டார்..அவர்களும் ஜாக்கிரதையாக பிரித்து, கஸ்டமரை சரிபார்க்கச் சொல்லி ஒகே செய்த பின் கிளம்பி வந்து விட்டனர்..மாலையில் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து ஃபோன். உடனே வரச் சொல்லி அழைப்பு. போனால் கேக் ஆர்டர் செய்த அந்த பெண்மணி அமர்ந்து கொண்டிருக்கிறார்..கேக்கை அவர்கள் எப்படி ஹேண்டில் செய்தார்களோ தெரியவில்லை. ஆனால், கேக் முழுவதும் விருந்தினர் வரும் முன்பே, சரிந்து கலைந்து விட்டதாகவும், தனது திருமண நாள் கொண்டாட்டம் பாழாகி விட்டதாகவும், கேக் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்றும் புகார் கொடுக்க, நேரே போலீஸ் கமிஷனர் ஆஃபீசுக்கே சென்று விட்டார் அந்த கஸ்டமர்.."மேடம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…" என்று மகேஸ்வரி கேட்க, "நான் கால் பண்ணினேன் யாரும் எடுக்கவில்லை" என்று பதில் வந்தது; தனக்கு மிஸ்ட் கால் எதுவும் வரவில்லையே என்று குழம்பினார் மகேஸ்வரி. டெலிவரி செய்த ஊழியர்களுக்கு ஃபோன் செய்தார்..வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கிய ரசீது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உடனே வரச் சொன்னார். அதற்குள் அந்த பெண்மணி வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றும், புகாரை போலீஸ் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவசரப்படுத்த ஆரம்பித்தார். பேக்கரிக்கு ஃபோன் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்திருந்த ஆர்டர், பில் இவற்றையெல்லாம் ப்ரிண்ட் போட்டு கொண்டு வரச் சொன்னார் மகேஸ்வரி. எல்லாம் வந்து சேர ஒரு மணி நேரம் ஆயிற்று..பிறகு, கேக் டெலிவரி செய்த ஊழியர்களும் வந்து ரசீதையெல்லாம் காட்டி, தாங்கள் சரியாகவே பாக்ஸைப் பிரித்துக் காட்டி அவர்கள் செக் செய்ததாகச் சொல்ல அந்தப் பெண்மணி கோபத்தோடு எழுந்து போய் விட்டார். முன்னாலேயே என்னிடம் டிஸ்கஸ் செய்திருந்தால் நமக்கு கஸ்டமர்தான் முக்கியம் என்று நான் பணத்தில் ஒரு பகுதியை ரீஃபண்ட் ஆவது செய்திருப்பேன்" என்கிறார் மகேஸ்வரி..ஆர்டர், பில், ரசீதுகள் எல்லாம் பத்திரமாக இருந்ததால், சிறந்த சாட்சியங்களாக இருந்து மகேஸ்வரியை இக்கட்டிலிருந்து காப்பாற்றின!. வாசகீஸ்….தொழில் முனைவோர் அல்லது அலுவலகப் பணியில் இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் அல்லது பிரச்னை குறித்தும், சவாலை எதிர்கொண்டு சமாளித்தது குறித்தும் www.kalkionline.com மென்பேனா பகுதி வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம்..mangayarmalar@kalkiweekly.com என்ற மின்னஞ்சல்முகவரிக்கும் அனுப்பலாம்.
கேக் படுத்திய பாடு!.தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்..ஒரு அலுவலகத்தில் நிர்வாகம், கணினி, நிதி, மார்கெட்டிங், விற்பனை என்று எந்தப் பொறுப்பில் இருந்தாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் பணிகளை திறமையாக செய்வதில் இன்று பெண்கள் தூள் கிளப்பு கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இன்றைய பெண்களின் பங்கு மகத்தானது. தொழில் முனைவோராகவும் பலர் வெற்றிகரமாக உலா வருகிறார்கள்..இருந்தாலும் பணிகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். சொந்தப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னைகள் என்று நிறையவே. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..தொழில் முனைவர் ,வங்கிகள், அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரிவோர் இவர்களுக்கெல்லாம், அவர்களைத் தேடிவரும் வாடிக்கையாளர் அல்லது திருவாளர் பொதுஜனம் வாயிலாக ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வந்திருக்கும். அவர்களை மீட்க நேரிடும். அல்லது அவர்களாலும் சிக்கல் வந்து அவற்றைத் தீர்க்க வேண்டிய தருணங்களும் ஏற்படும். அவை எரிச்சலூட்டும், நகைக்க வைக்கும் அல்லது பரிதாபப் பட வைக்கும்..சில மற்றவர்களுக்கு பாடமாகவும் அமையும்..வெவ்வேறு துறைசார் பெண் ஆளுமைகள் அத்தகைய சம்பவங்களை மங்கையர் மலர் வாசகிகளுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது….சவாலே சமாளி!.ஆன்லைனில் பேக்கரி நடத்தும் இளம் பெண் மகேஸ்வரி சித்ரவேல் அவர்களை சந்திப்போம். மகேஸ்வரி சென்னை மாம்பாக்கத்தில் கேக் அண்ட் க்ரஷ் (Cake & Crush) என்ற பெயரில் இயங்கி வரும் கேக் கடைக்கு சொந்தக்காரர். இந்த வருடம்தான் எம்.பி.ஏ முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருப்பவர்..இவருக்கு ஒரு ஆன்லைன் ஆர்டர் வந்திருக்கிறது. ஒரு பெண்மணி தனக்கு திருமண நாள் என்று பெரிய கேக் ஆர்டர் செய்திருக்கிறார். மகேஸ்வரியும் தனது இடத்தில் தயார் செய்து டெலிவரி பாய்ஸ் மூலம் கேக்கை அனுப்பி விட்டார்..அவர்களும் ஜாக்கிரதையாக பிரித்து, கஸ்டமரை சரிபார்க்கச் சொல்லி ஒகே செய்த பின் கிளம்பி வந்து விட்டனர்..மாலையில் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து ஃபோன். உடனே வரச் சொல்லி அழைப்பு. போனால் கேக் ஆர்டர் செய்த அந்த பெண்மணி அமர்ந்து கொண்டிருக்கிறார்..கேக்கை அவர்கள் எப்படி ஹேண்டில் செய்தார்களோ தெரியவில்லை. ஆனால், கேக் முழுவதும் விருந்தினர் வரும் முன்பே, சரிந்து கலைந்து விட்டதாகவும், தனது திருமண நாள் கொண்டாட்டம் பாழாகி விட்டதாகவும், கேக் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்றும் புகார் கொடுக்க, நேரே போலீஸ் கமிஷனர் ஆஃபீசுக்கே சென்று விட்டார் அந்த கஸ்டமர்.."மேடம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…" என்று மகேஸ்வரி கேட்க, "நான் கால் பண்ணினேன் யாரும் எடுக்கவில்லை" என்று பதில் வந்தது; தனக்கு மிஸ்ட் கால் எதுவும் வரவில்லையே என்று குழம்பினார் மகேஸ்வரி. டெலிவரி செய்த ஊழியர்களுக்கு ஃபோன் செய்தார்..வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கிய ரசீது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உடனே வரச் சொன்னார். அதற்குள் அந்த பெண்மணி வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றும், புகாரை போலீஸ் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவசரப்படுத்த ஆரம்பித்தார். பேக்கரிக்கு ஃபோன் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்திருந்த ஆர்டர், பில் இவற்றையெல்லாம் ப்ரிண்ட் போட்டு கொண்டு வரச் சொன்னார் மகேஸ்வரி. எல்லாம் வந்து சேர ஒரு மணி நேரம் ஆயிற்று..பிறகு, கேக் டெலிவரி செய்த ஊழியர்களும் வந்து ரசீதையெல்லாம் காட்டி, தாங்கள் சரியாகவே பாக்ஸைப் பிரித்துக் காட்டி அவர்கள் செக் செய்ததாகச் சொல்ல அந்தப் பெண்மணி கோபத்தோடு எழுந்து போய் விட்டார். முன்னாலேயே என்னிடம் டிஸ்கஸ் செய்திருந்தால் நமக்கு கஸ்டமர்தான் முக்கியம் என்று நான் பணத்தில் ஒரு பகுதியை ரீஃபண்ட் ஆவது செய்திருப்பேன்" என்கிறார் மகேஸ்வரி..ஆர்டர், பில், ரசீதுகள் எல்லாம் பத்திரமாக இருந்ததால், சிறந்த சாட்சியங்களாக இருந்து மகேஸ்வரியை இக்கட்டிலிருந்து காப்பாற்றின!. வாசகீஸ்….தொழில் முனைவோர் அல்லது அலுவலகப் பணியில் இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் அல்லது பிரச்னை குறித்தும், சவாலை எதிர்கொண்டு சமாளித்தது குறித்தும் www.kalkionline.com மென்பேனா பகுதி வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம்..mangayarmalar@kalkiweekly.com என்ற மின்னஞ்சல்முகவரிக்கும் அனுப்பலாம்.