அத்தியாயம் – 2.– நிரஞ்சன் பாரதி.ஒரு மனித இதயத்துக்கு ஏற்றம் தருவது, அது கொண்டிருக்கும் இலட்சியமே ஆகும். தான் கொண்ட கனவை நனவாக்குவதற்காகவே அந்த இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செலவிடப்பட வேண்டும். அத்தகைய வாழ்வே ஒரு சிறந்த வாழ்வு!.பாரதியைப் பொறுத்தவரை, நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே அவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை அரண்மனைப் பணியிலிருந்து வெளியேறுமாறு உந்தித் தள்ளியது. நாட்டை அவர் தனது நீட்சியாகத்தான் பார்த்தார். நாட்டுக்கு ஒரு கேடு என்றால், அது தனக்கும் கேடு என்றுணர்ந்து துடிதுடித்துப் போனார். நாட்டுச் சிந்தனை என்னும் எரிபொருளே அவரது உயிர்ப்பொருள் இயங்கக் காரணமாக அமைந்தது..இந்தக் கனல், ஒவ்வொரு கணமும் மனதில் சுடர்ந்தபடி இருக்க, அரண்மனைப் பணியிலிருந்து விலகிய பாரதியார், 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை, 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சிறந்த தேசபக்தரான ஜி.சுப்பிரமணிய ஐயர் இதன் ஆசிரியராக இருந்தார்..பாரதியாருக்கு அரண்மனை, ஓர் அலுவலகமாகத் தெரியவில்லை. ஆனால், சுதேசமித்திரன் அலுவலகம் அரண்மனையாகக் காட்சியளித்தது. இங்கேதான் அவரால் சுதந்திரக் காற்றைச் சிறிதளவேனும் சுவாசிக்க முடிந்தது. சின்னஞ்சிறிய சிறகே முளைத்திருந்தாலும் அதில் பறத்தல் சுகம்தானே?!.ராய்ட்டர்ஸ் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. ஜி.சுப்பிரமணிய ஐயர் மிதவாதத்தின் பக்கம் சற்று சாய்ந்திருந்தது, பாரதியாருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. ஆனாலும், மிகுந்த ஊக்கத்தோடுதான் அவர் பணியாற்றினார்..ஓராண்டு கழிந்தது. பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பி.வைத்தியநாத ஐயர் என்பவர், 'சக்கரவர்த்தினி' என்னும் மாத இதழைத் தொடங்க முன் வந்தார். ஆனால், யாரை ஆசிரியாகப் பணியமர்த்துவது என அவருக்குத் தெரியவில்லை. தன் நண்பரான ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் ஆலோசனை கேட்டார்..பாரதியாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஜி.சுப்பிரமணிய ஐயர், ஆசிரியப் பொறுப்பேற்க பாரதியே முழுத்தகுதி படைத்தவர் என்று சான்றளித்தார். இதன் விளைவாக, 1905ஆம் ஆண்டு ஆகஸ்டில், 'சக்கரவர்த்தினி'யின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. அதேசமயம், அவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..நெஞ்சில் தீரத்தோடு மட்டும் போர்க்களத்துக்கு வந்த ஒருவனுக்குக் கையில் ஓர் ஆயுதம் கிடைத்தால் எப்பேர்ப்பட்ட பலம் வரும்?! சக்கரவர்த்தினி ஆசிரியரான பிறகு பாரதியாருக்கும் அப்படித்தான் இருந்தது..தமிழகத்தில் அப்போது ஏற்கெனவே மாதர் மனோ ரஞ்சனி, தமிழ் மாது உள்ளிட்ட மகளிர் முன்னேற்ற இதழ்கள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆனாலும், சக்கரவர்த்தினியை அவர் தேவையற்றதாகக் கருதவில்லை. பெண் விடுதலை என்னும் பெருந்தேரைத் தமிழென்னும் வடம்பிடித்து இழுக்கும் மற்றுமொரு வலிமையான கரமாகவே அதை அவர் கருதினார்..ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து போராடினால் ஒழிய, சுதந்திரம் சாத்தியமாகாது என்பதில் அவர் அசையாத உறுதி கொண்டிருந்தார். ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பெண்களுக்குப் போதிய கல்வி உரிமை வழங்கப்படாததுதான் என்பதைக் கண்டறிந்து, மிகவும் கலங்கிப் போனார். அதிலும், பழங்காலத்தில் படிப்பறிவில் சிறந்த பெண்களைக் கொண்டிருந்த பாரத தேசத்தில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது, அவரது கலக்கத்தை இன்னும் கனக்க வைத்தது..இந்த அவலத்தைக் கீழ்க்கண்டவாறு அவர் சக்கரவர்த்தினியில் பகிர்ந்து கொண்டார் :'கிருத, திரேதா, துவாபர யுகங்களில் கல்வி கற்று இக பர ஞானத்திற் சிறப்படைந்திருந்த இத்தேச மாதர் கலி புருஷனால் கல்வியின்மை என்னும் இருட்சிறையில் அடைபட்டிருக்கின்றார்கள்.'.1901ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட பெண்கள் கல்வி கணக்கெடுப்பு விவரத்தைச் சக்கரவர்த்தினியில் அவர் பதிப்பித்தார். அதில் 10,000 பெண்களுக்கு 94 பெண்கள்தான் படித்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக்கோடிட்டுக் காட்டி, மிகவும் வருத்தப்பட்டார். பெண் கல்வியின் பெருஞ்சிறப்பை எந்த அளவுக்கு அவர் உணர்ந்திருந்தால் இத்துணை மெனக்கெட்டு கணக்கெடுப்பு விவரத்தைப் பிரசுரம் செய்திருப்பார்?.மாதர் கல்விக் கணக்கெடுப்பு பற்றிய கட்டுரையை பாரதியார் இப்படி முடித்திருந்தார்:'….எனினும், இங்ஙனம் பேரிருள் மீறிக் கிடக்கும் வானத்திலே நம்பிக்கைத்தாரகைகள் சிற்சில திகழ்வது பற்றி ஒருவாறு மன ஆறுதல் அடைகின்றோம்.'.சிக்கல்களை மட்டும் வெளிச்சம் இட்டுக் காட்டி ஓர் இதழாளர் ஓய்ந்து விட முடியாது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். அதுவே, ஓர் இதழாளருக்குரிய இலக்கணம். பாரதியாரும் இதை அறிந்திருந்தார்..கட்டுரையை எழுதி முடித்ததும் ஒரு புதுமையான எண்ணம் அவருக்கு உதித்தது. 'ஏன் இந்தத் தாரகைகளையே நாம் நம் தமிழகத்தின் வருங்காலத் தாரகைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது? புதுமைப்பெண் என்பவள் எங்கோ தொலைதூரத்தில், கண்ணுக்கெட்டாத உலகத்தில் வாழும் வெறும் கற்பனைச்சித்திரம் அல்லவே! அவள் நம் பெண்களில் ஒருத்தி. உயிரும் உயிர்ப்பும் கொண்டு நம் முன்னே நடமாடும் ஒரு நங்கை! நம்மில் ஒருத்தியே. ஏன் நமது நம்பிக்கைத் தாரகையாய், உந்தாற்றலாய் இருத்தல் கூடாது என முன்னேறத் துடிக்கும் எல்லாப் பெண்களும் நினைக்க வேண்டும்! அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்?!'.இந்தச் சிந்தனை பாரதியாரை முடுக்கிவிட்டது. பாரதத்தில் எங்கெல்லாம் புதுமைப்பெண்கள் தோன்றுகிறார்களோ அவர்களையெல்லாம் தேடிப் பிடித்து சக்கரவர்த்தினியில் பதிவு செய்தார்..நாட்டில் சுதேசி இயக்கம் எழுச்சி பெறத் தொடங்கியிருந்த வேளை அது. வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களை ஊக்குவிப்பதில் வங்காளம், இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கியது. அங்கே ஆண்களோடு பெண்களும் மும்முரமாக ஈடுபட்டதைப் பாரதியார் பெருமிதத்தோடு எழுதினார். இவர்களுக்கு, 'சுதேசினிகள்' என்று அழகான பெயரையும் சூட்டினார்..'ஓர் பஞ்சாபி மாது' என்ற தலைப்பில் கல்வி அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய ஓர் இளம் பஞ்சாப் பாவையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான நிலையிலும் அறிவழகியாக விளங்கிய இந்தப் பெண்மணியை பாரதியார் போற்றினார். இந்தப் பெண்ணின் கணவர் எப்படி அவளுக்குச் சிறந்த துணையாகிக் கல்வி கற்க ஊக்குவிக்கிறார் என்பதையும் பதிவு செய்தார். இப்பெண் பெரும் புகழோ, செல்வாக்கோ படைத்தவர் கிடையாது. ஆனாலும், தன் அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கிய ஒரே காரணத்துக்காக பாரதியார் அப்பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்தார். பஞ்சாபிய பெண்ணைத் தமிழ்ப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம், பெண்ணீயத்தின் ஊடே தேசியத்தையும் வளர்த்தார். பாரதியாரின் இந்தக் கட்டுரையை, 'இந்துநேசன்' பத்திரிகை பாராட்டி எழுதியது..எல்லாவற்றுக்கும் மேலாக, பல பெண் படைப்பாளர்களின் படைப்புகளை பாரதி, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார்.வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தபோது,அவரை வரவேற்று வாசகர்கள் கவிதை எழுதுமாறு, சக்கரவர்த்தினியில் ஓர் அறிவிப்புவெளியிட்டார்..வந்த கவிதைகளில், பண்டிதை அசலாம்பிகை எழுதிய கவிதையைச் சிறந்ததாகத் தெரிவு செய்து, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார். பண்டிதை அசலாம்பிகையைப் புகழ்ந்து இப்படி ஒரு துணுக்கையும் வரைந்தார் :.'இளவரசர் வரவைப் பற்றி அநேகர்களால் இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பூவை ஸ்ரீ கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்டராமையங்கார், இப்பத்திரிகை ஆசிரியர் முதலிய அநேகர் செய்யுள் எழுதி இருக்கிறார்கள்.இவையனைத்தினும் பண்டிதை அசலாம்பிகை எழுதி இருக்கும் பாடல் எளிதாயும் சுவையுடைத்தாயும் இருப்பது பற்றியும் பெண்மணி எழுதியிருக்கும் சிறப்புப் பற்றியும் அதனைப் பதிப்பிக்கின்றோம்.'.வேல்ஸ் இளவரசருக்கு, தானெழுதிய நல்வரவுக் கவிதையைச் சுதேசமித்திரனில் வெளியிட்டார். ஓர் உண்மையான ஆண் மகன், திறமை வாய்ந்த பெண்ணை மதித்துப் போற்ற வேண்டும் என்னும் கருத்தை இதன் வழியே உணர்த்தினார்..சக்கரவர்த்தினியில் எழுதிய மற்றொரு முக்கியப் பெண் எழுத்தாளர் சகோதரி சுப்புலட்சுமி. 12 வயதில் கைம்பெண்ணான இவர், பின்னர் கடுமையாக உழைத்து கல்வி பயின்று தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி ஆனார். பெண்ணீயப் போராளியான இவர், கைம்பெண் மறுவாழ்வுக்காகப் பெருந்தொண்டாற்றினார். சாரதா இல்லம், சாரதா வித்யாலயா எனப் பல கல்வி நிலையங்களை நிறுவி, பெண் கல்வியைப் பெருகச் செய்தார்..ஒருபுறம், சக்கரவர்த்தினி மூலம் பல சக்கரவர்த்தினிகளை உருவாக்கிக் கொண்டிருந்த பாரதியார், மறுபுறம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்..1906ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். மாநாடு முடிந்து திரும்புகையில் நடந்த ஒரு நிகழ்வு பாரதியாரை அடியோடு புரட்டிப்போட்டது. அந்த நிகழ்வு…?!(அறிவோம் … )
அத்தியாயம் – 2.– நிரஞ்சன் பாரதி.ஒரு மனித இதயத்துக்கு ஏற்றம் தருவது, அது கொண்டிருக்கும் இலட்சியமே ஆகும். தான் கொண்ட கனவை நனவாக்குவதற்காகவே அந்த இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செலவிடப்பட வேண்டும். அத்தகைய வாழ்வே ஒரு சிறந்த வாழ்வு!.பாரதியைப் பொறுத்தவரை, நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே அவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை அரண்மனைப் பணியிலிருந்து வெளியேறுமாறு உந்தித் தள்ளியது. நாட்டை அவர் தனது நீட்சியாகத்தான் பார்த்தார். நாட்டுக்கு ஒரு கேடு என்றால், அது தனக்கும் கேடு என்றுணர்ந்து துடிதுடித்துப் போனார். நாட்டுச் சிந்தனை என்னும் எரிபொருளே அவரது உயிர்ப்பொருள் இயங்கக் காரணமாக அமைந்தது..இந்தக் கனல், ஒவ்வொரு கணமும் மனதில் சுடர்ந்தபடி இருக்க, அரண்மனைப் பணியிலிருந்து விலகிய பாரதியார், 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை, 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சிறந்த தேசபக்தரான ஜி.சுப்பிரமணிய ஐயர் இதன் ஆசிரியராக இருந்தார்..பாரதியாருக்கு அரண்மனை, ஓர் அலுவலகமாகத் தெரியவில்லை. ஆனால், சுதேசமித்திரன் அலுவலகம் அரண்மனையாகக் காட்சியளித்தது. இங்கேதான் அவரால் சுதந்திரக் காற்றைச் சிறிதளவேனும் சுவாசிக்க முடிந்தது. சின்னஞ்சிறிய சிறகே முளைத்திருந்தாலும் அதில் பறத்தல் சுகம்தானே?!.ராய்ட்டர்ஸ் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. ஜி.சுப்பிரமணிய ஐயர் மிதவாதத்தின் பக்கம் சற்று சாய்ந்திருந்தது, பாரதியாருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. ஆனாலும், மிகுந்த ஊக்கத்தோடுதான் அவர் பணியாற்றினார்..ஓராண்டு கழிந்தது. பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பி.வைத்தியநாத ஐயர் என்பவர், 'சக்கரவர்த்தினி' என்னும் மாத இதழைத் தொடங்க முன் வந்தார். ஆனால், யாரை ஆசிரியாகப் பணியமர்த்துவது என அவருக்குத் தெரியவில்லை. தன் நண்பரான ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் ஆலோசனை கேட்டார்..பாரதியாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஜி.சுப்பிரமணிய ஐயர், ஆசிரியப் பொறுப்பேற்க பாரதியே முழுத்தகுதி படைத்தவர் என்று சான்றளித்தார். இதன் விளைவாக, 1905ஆம் ஆண்டு ஆகஸ்டில், 'சக்கரவர்த்தினி'யின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. அதேசமயம், அவர் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..நெஞ்சில் தீரத்தோடு மட்டும் போர்க்களத்துக்கு வந்த ஒருவனுக்குக் கையில் ஓர் ஆயுதம் கிடைத்தால் எப்பேர்ப்பட்ட பலம் வரும்?! சக்கரவர்த்தினி ஆசிரியரான பிறகு பாரதியாருக்கும் அப்படித்தான் இருந்தது..தமிழகத்தில் அப்போது ஏற்கெனவே மாதர் மனோ ரஞ்சனி, தமிழ் மாது உள்ளிட்ட மகளிர் முன்னேற்ற இதழ்கள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆனாலும், சக்கரவர்த்தினியை அவர் தேவையற்றதாகக் கருதவில்லை. பெண் விடுதலை என்னும் பெருந்தேரைத் தமிழென்னும் வடம்பிடித்து இழுக்கும் மற்றுமொரு வலிமையான கரமாகவே அதை அவர் கருதினார்..ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்து போராடினால் ஒழிய, சுதந்திரம் சாத்தியமாகாது என்பதில் அவர் அசையாத உறுதி கொண்டிருந்தார். ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பெண்களுக்குப் போதிய கல்வி உரிமை வழங்கப்படாததுதான் என்பதைக் கண்டறிந்து, மிகவும் கலங்கிப் போனார். அதிலும், பழங்காலத்தில் படிப்பறிவில் சிறந்த பெண்களைக் கொண்டிருந்த பாரத தேசத்தில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது, அவரது கலக்கத்தை இன்னும் கனக்க வைத்தது..இந்த அவலத்தைக் கீழ்க்கண்டவாறு அவர் சக்கரவர்த்தினியில் பகிர்ந்து கொண்டார் :'கிருத, திரேதா, துவாபர யுகங்களில் கல்வி கற்று இக பர ஞானத்திற் சிறப்படைந்திருந்த இத்தேச மாதர் கலி புருஷனால் கல்வியின்மை என்னும் இருட்சிறையில் அடைபட்டிருக்கின்றார்கள்.'.1901ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட பெண்கள் கல்வி கணக்கெடுப்பு விவரத்தைச் சக்கரவர்த்தினியில் அவர் பதிப்பித்தார். அதில் 10,000 பெண்களுக்கு 94 பெண்கள்தான் படித்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக்கோடிட்டுக் காட்டி, மிகவும் வருத்தப்பட்டார். பெண் கல்வியின் பெருஞ்சிறப்பை எந்த அளவுக்கு அவர் உணர்ந்திருந்தால் இத்துணை மெனக்கெட்டு கணக்கெடுப்பு விவரத்தைப் பிரசுரம் செய்திருப்பார்?.மாதர் கல்விக் கணக்கெடுப்பு பற்றிய கட்டுரையை பாரதியார் இப்படி முடித்திருந்தார்:'….எனினும், இங்ஙனம் பேரிருள் மீறிக் கிடக்கும் வானத்திலே நம்பிக்கைத்தாரகைகள் சிற்சில திகழ்வது பற்றி ஒருவாறு மன ஆறுதல் அடைகின்றோம்.'.சிக்கல்களை மட்டும் வெளிச்சம் இட்டுக் காட்டி ஓர் இதழாளர் ஓய்ந்து விட முடியாது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். அதுவே, ஓர் இதழாளருக்குரிய இலக்கணம். பாரதியாரும் இதை அறிந்திருந்தார்..கட்டுரையை எழுதி முடித்ததும் ஒரு புதுமையான எண்ணம் அவருக்கு உதித்தது. 'ஏன் இந்தத் தாரகைகளையே நாம் நம் தமிழகத்தின் வருங்காலத் தாரகைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது? புதுமைப்பெண் என்பவள் எங்கோ தொலைதூரத்தில், கண்ணுக்கெட்டாத உலகத்தில் வாழும் வெறும் கற்பனைச்சித்திரம் அல்லவே! அவள் நம் பெண்களில் ஒருத்தி. உயிரும் உயிர்ப்பும் கொண்டு நம் முன்னே நடமாடும் ஒரு நங்கை! நம்மில் ஒருத்தியே. ஏன் நமது நம்பிக்கைத் தாரகையாய், உந்தாற்றலாய் இருத்தல் கூடாது என முன்னேறத் துடிக்கும் எல்லாப் பெண்களும் நினைக்க வேண்டும்! அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்?!'.இந்தச் சிந்தனை பாரதியாரை முடுக்கிவிட்டது. பாரதத்தில் எங்கெல்லாம் புதுமைப்பெண்கள் தோன்றுகிறார்களோ அவர்களையெல்லாம் தேடிப் பிடித்து சக்கரவர்த்தினியில் பதிவு செய்தார்..நாட்டில் சுதேசி இயக்கம் எழுச்சி பெறத் தொடங்கியிருந்த வேளை அது. வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களை ஊக்குவிப்பதில் வங்காளம், இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கியது. அங்கே ஆண்களோடு பெண்களும் மும்முரமாக ஈடுபட்டதைப் பாரதியார் பெருமிதத்தோடு எழுதினார். இவர்களுக்கு, 'சுதேசினிகள்' என்று அழகான பெயரையும் சூட்டினார்..'ஓர் பஞ்சாபி மாது' என்ற தலைப்பில் கல்வி அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய ஓர் இளம் பஞ்சாப் பாவையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான நிலையிலும் அறிவழகியாக விளங்கிய இந்தப் பெண்மணியை பாரதியார் போற்றினார். இந்தப் பெண்ணின் கணவர் எப்படி அவளுக்குச் சிறந்த துணையாகிக் கல்வி கற்க ஊக்குவிக்கிறார் என்பதையும் பதிவு செய்தார். இப்பெண் பெரும் புகழோ, செல்வாக்கோ படைத்தவர் கிடையாது. ஆனாலும், தன் அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கிய ஒரே காரணத்துக்காக பாரதியார் அப்பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்தார். பஞ்சாபிய பெண்ணைத் தமிழ்ப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம், பெண்ணீயத்தின் ஊடே தேசியத்தையும் வளர்த்தார். பாரதியாரின் இந்தக் கட்டுரையை, 'இந்துநேசன்' பத்திரிகை பாராட்டி எழுதியது..எல்லாவற்றுக்கும் மேலாக, பல பெண் படைப்பாளர்களின் படைப்புகளை பாரதி, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார்.வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தபோது,அவரை வரவேற்று வாசகர்கள் கவிதை எழுதுமாறு, சக்கரவர்த்தினியில் ஓர் அறிவிப்புவெளியிட்டார்..வந்த கவிதைகளில், பண்டிதை அசலாம்பிகை எழுதிய கவிதையைச் சிறந்ததாகத் தெரிவு செய்து, சக்கரவர்த்தினியில் பிரசுரம் செய்தார். பண்டிதை அசலாம்பிகையைப் புகழ்ந்து இப்படி ஒரு துணுக்கையும் வரைந்தார் :.'இளவரசர் வரவைப் பற்றி அநேகர்களால் இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பூவை ஸ்ரீ கலியாண சுந்தர முதலியார், பண்டித வெங்கட்டராமையங்கார், இப்பத்திரிகை ஆசிரியர் முதலிய அநேகர் செய்யுள் எழுதி இருக்கிறார்கள்.இவையனைத்தினும் பண்டிதை அசலாம்பிகை எழுதி இருக்கும் பாடல் எளிதாயும் சுவையுடைத்தாயும் இருப்பது பற்றியும் பெண்மணி எழுதியிருக்கும் சிறப்புப் பற்றியும் அதனைப் பதிப்பிக்கின்றோம்.'.வேல்ஸ் இளவரசருக்கு, தானெழுதிய நல்வரவுக் கவிதையைச் சுதேசமித்திரனில் வெளியிட்டார். ஓர் உண்மையான ஆண் மகன், திறமை வாய்ந்த பெண்ணை மதித்துப் போற்ற வேண்டும் என்னும் கருத்தை இதன் வழியே உணர்த்தினார்..சக்கரவர்த்தினியில் எழுதிய மற்றொரு முக்கியப் பெண் எழுத்தாளர் சகோதரி சுப்புலட்சுமி. 12 வயதில் கைம்பெண்ணான இவர், பின்னர் கடுமையாக உழைத்து கல்வி பயின்று தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி ஆனார். பெண்ணீயப் போராளியான இவர், கைம்பெண் மறுவாழ்வுக்காகப் பெருந்தொண்டாற்றினார். சாரதா இல்லம், சாரதா வித்யாலயா எனப் பல கல்வி நிலையங்களை நிறுவி, பெண் கல்வியைப் பெருகச் செய்தார்..ஒருபுறம், சக்கரவர்த்தினி மூலம் பல சக்கரவர்த்தினிகளை உருவாக்கிக் கொண்டிருந்த பாரதியார், மறுபுறம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருந்தார்..1906ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். மாநாடு முடிந்து திரும்புகையில் நடந்த ஒரு நிகழ்வு பாரதியாரை அடியோடு புரட்டிப்போட்டது. அந்த நிகழ்வு…?!(அறிவோம் … )