
''என் மனைவி ஒரு சீரியல் பைத்தியம்!"
"அதுக்காக ஓடாத டிவியைப் பார்த்துகூட அழுவது நல்லவா இருக்கு?"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………….
''கைதியின் பெயரை சத்தமில்லாமல் மெதுவாக
டவாலி கூப்பிடுகிறாரே, அவ்வளவு பயமா?"
"இல்லீங்க… ஜட்ஜ் பெயரும் அதுதானாம்!"
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………….
"நம்ம கட்சி தோற்றதற்கு தலைவரே காரணமாயிட்டாரே…"
"என்ன சொல்றீங்க?"
"நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று
மக்களுக்குத் தேர்தல் அறிக்கையில் அவர் கோரிக்கை
விடுத்ததைத்தான் சொல்றேன்!"
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………….
"ஒரு பறவை உனக்குச் சோறு போடும்னு
ஒரு சாமியார் சின்ன வயசில் என்னிடம் சொன்னார்!"
"இப்போ என்ன பண்றீங்க?"
"கிளி ஜோஸ்யம் பார்த்து பலன் சொல்றேன்!"
– ஆர்.யோகமித்ரா, சென்னை
…………………………………….
"நேத்து செஞ்ச பொங்கலை விட,
இன்னிக்கு ருசி கூடுதலா இருக்கே?"
"இது மாட்டுக்குச் செஞ்ச பொங்கலுங்க!"
– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்
…………………………………….
"ஊழலைப் பற்றிப் பேச அவருக்கு
எந்தத் தகுதியும் இல்லை!"
"ஏன் தலைவரே…?"
"ஊழலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?"
– ஆர்.உமா, ஈரோடு
…………………………………….
"நீ அதிர்ஷ்டக்காரன்யா! உன் பெண்டாட்டி
நம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவரா ஆயிட்டாங்களே!"
"அடப் போய்யா… சும்மாவே வீட்ல பாத்திரமெல்லாம்
கழுவச் சொல்லுவா. இனி, என்னென்ன சொல்வாளோ?"
– ஆர்.உமா, ஈரோடு
…………………………………….
"இந்த இடுப்பளவு வெள்ளத்திலே பஸ் வருமா?"
" பஸ் வராது… ஆனா, படகு வரும்!"
– ஆர்.உமா, ஈரோடு