கவிதைகள்: -பி.சி. ரகு, விழுப்புரம்.எங்கண்ணே?அண்ணே அண்ணே!நாம ஓடி ஆடிவிளையாடியஆற்றங்கரை எங்கண்ணே?.அம்பது பேருக்கு நிழல் தரும்ஆலமரம்அதில் பாட்டு கட்டிப் பாடும்பறவை கூட்டம் எங்கண்ணே?.கரும்பு கொல்லையிலமடைய போட்டுநெல்லு கொல்லையிலகதிர் அடிச்சுஅசதியா வரப்பு மேல உட்காந்துவெங்காயம் கடிச்சுகூழ் குடிச்சஅந்த விளைநிலமெல்லாம் எங்கண்ணே?.விழிச்சிருந்த நேரத்துலகளவுபோன கோவணமாகாணாம போயிடுச்சேநம்ம வயக்காட்டு கிராமம்எங்கண்ணே?***********************************************.ஏமாற்றம்.வருவதைப் போலில்லைஆனாலும்,வந்துவிட்டது மழை!.வருவதைப் போலில்லைஆனாலும்,வந்துவிட்டது புயல்!.வருவதாய்சொல்லிவிட்டுச் சென்றநீ மட்டும்தான்வரவேயில்லைகடைசி வரையில்!***********************************************.மிதியடி!.மனிதர்களைதலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறதுமிதியடி…அதைத் தூக்கிவாசலில் வீசிவிட்டுப்போகிறார்கள்மனிதர்கள்!***********************************************.காரணம்.ஏழை என்பதால்உனக்கும்ஏளனமா?எங்களிடம் வர மறுக்கிறாயேபணமே!***********************************************.நம்பிக்கை.யார் மீதும்நம்பிக்கையில்லை…தன் வீட்டைதானே சுமக்கும் நத்தை!
கவிதைகள்: -பி.சி. ரகு, விழுப்புரம்.எங்கண்ணே?அண்ணே அண்ணே!நாம ஓடி ஆடிவிளையாடியஆற்றங்கரை எங்கண்ணே?.அம்பது பேருக்கு நிழல் தரும்ஆலமரம்அதில் பாட்டு கட்டிப் பாடும்பறவை கூட்டம் எங்கண்ணே?.கரும்பு கொல்லையிலமடைய போட்டுநெல்லு கொல்லையிலகதிர் அடிச்சுஅசதியா வரப்பு மேல உட்காந்துவெங்காயம் கடிச்சுகூழ் குடிச்சஅந்த விளைநிலமெல்லாம் எங்கண்ணே?.விழிச்சிருந்த நேரத்துலகளவுபோன கோவணமாகாணாம போயிடுச்சேநம்ம வயக்காட்டு கிராமம்எங்கண்ணே?***********************************************.ஏமாற்றம்.வருவதைப் போலில்லைஆனாலும்,வந்துவிட்டது மழை!.வருவதைப் போலில்லைஆனாலும்,வந்துவிட்டது புயல்!.வருவதாய்சொல்லிவிட்டுச் சென்றநீ மட்டும்தான்வரவேயில்லைகடைசி வரையில்!***********************************************.மிதியடி!.மனிதர்களைதலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறதுமிதியடி…அதைத் தூக்கிவாசலில் வீசிவிட்டுப்போகிறார்கள்மனிதர்கள்!***********************************************.காரணம்.ஏழை என்பதால்உனக்கும்ஏளனமா?எங்களிடம் வர மறுக்கிறாயேபணமே!***********************************************.நம்பிக்கை.யார் மீதும்நம்பிக்கையில்லை…தன் வீட்டைதானே சுமக்கும் நத்தை!