-ராஜி ரகுநாதன்.'ஸ்ரீ த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமி' என்ற பெயர் நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், சின்ன ஜீயர் சுவாமிஜி என்றால் உடனே அறிந்து கொள்வார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் சின்ன ஜீயர் சுவாமிஜியைத் தெரியாதவர்களே கிடையாது. இவர் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஆன்மீக பிரவசனங்கள் செய்து மக்களுக்கு ஆன்மிக அறிவை போதித்து வருகிறார்..அண்மையில் ஹைதராபாத் அருகில் முச்சிந்தல் என்ற இடத்தில் 'ஸ்ரீராமானுஜ சஹஸ்ராப்தி' கொண்டாட்டங்களை அவர் நடத்தி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். இங்கு 'சமத்துவ மூர்த்தி' ராமானுஜாசாரியாரின் பஞ்ச லோக விக்ரகத்தை நிறுவியுள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு பாரதப் பிரதமர் திரு மோடிஜி வருகை தந்தார். இந்த மிகப் பெரும் சிலை மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, இந்த மாபெரும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் இந்த 'சின்ன ஜீயர்' யார்? என்று அறிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது..யார் இந்த சின்ன ஜீயர் சுவாமி? வேலை தேடி ஹைதராபாத் வந்தவர் துறவியாக ஏன் மாறினார்?.சின்ன ஜீயர் சுவாமி கிழக்கு கோதாவரி மாவட்டம் அர்த்தமூரு என்ற கிராமத்தில், ஒரு சாதாரண வைணவ பிராமண குடும்பத்தில் 1956 நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று பிறந்தார். தாயார் அலமேலு மங்கை, தந்தை வேங்கடாசார்யுலு. இவரது பெற்றோர் வைத்த பெயர் 'ஸ்ரீமன் நாராயணாசார்யுலு.' இவர் கௌதம வித்யாபீடத்தில், வைணவ சம்பிரதாயமும் வேத நூற்கல்வியும் கற்றார். அதோடு நல்லான் சக்ரவர்த்துல ரகுநாதாசார்யா ஸ்வாமியிடம் சம்ஸ்க்ருதமும் தர்க்க சாஸ்திரமும் பயின்றார். ராஜமகேந்திரவரம் ஓரியண்டல் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். ஆனால் அந்த சமயத்தில் அவருடைய தந்தையார் காலமானார். இவர் தோளின் மேல் குடும்பச் சுமை விழுந்தது..அதனால் ஏதாவது வேலை தேடிக் கொள்ள எண்ணி ஒரு சிறு கைப்பையுடன் ஹைதராபாத் வந்தார். முதலில் பல இடங்களில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார். பின்னர் ஒரு சிறிய வேலை கிடைத்தது. இங்குதான் டைப்பிங், ஷார்ட் ஹாண்ட் கற்றார். அதன் பின்னர் வேலையில் அடுத்த உயரத்தை எட்டினர்..அந்த நேரத்தில், அதாவது 1975ல் பெரிய ஜீயர் சுவாமிஜி காகிநாடாவுக்கு வருகைதந்து யாகங்கள் செய்தார். எதிர்பாராமல் பெத்த ஜீயர் சுவாமியுடன் ஸ்ரீமன் நாராயணாசார்யுலுவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது தனக்கு ஒரு ஸ்டெனோ கிராபர் தேவை என்று பெத்த ஜீயர் சுவாமி தெரிவித்தார். அந்த வேலையை தானே செய்வதாக இவர் குறிப்பிட்டார். அவரும் இணங்கினார்..வீட்டில் தாயாரின் அனுமதி பெற்று ஸ்ரீமன் நாராயாணாசார்யுலு, பெத்த ஜீயர் சுவாமிஜியுடன் தன் பயணத்தைத் தொடங்கினார். அதன்பின் தன் 23வது வயதில் தாயின் அனுமதியோடு சன்யாச ஆசிரமத்தை ஏற்று த்ரிதண்டி சின்னஜீயர் ஸ்வாமியானார். சில ஆண்டுகள் கழித்து 'கீதா ஜோதி' இயக்கத்தை தொடங்கினார். பகவத் கீதையை பிரசாரம் செய்வதோடு சமுதாயத்தில் சோம்பலை நீக்கி மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தொடு இந்த இயக்கத்தை தொடங்கினார்..சின்ன ஜீயர் ஸ்வாமிஜி அதோடு நிற்கவில்லை. பார்வை அற்றோருக்காக கல்லூரிகளை நிறுவினர். அவர்களுக்கு கம்ப்யூடர் பயிற்சி அளிப்பதற்கு நிபுணர்களை நியமித்தார். அதுமட்டுமல்ல… சகல ஜீவ கோடிக்கும் ஞானத்தை அளிக்கும் வேதக் கல்வியின் சாரத்தை அனைவரும் பெறுவதற்காக பல ஆசிரமங்களை ஸ்தாபித்தார். வேத பாடசாலைகளை குருகுல பள்ளிகளாக செம்மைப்படுத்தினார். அங்கு கல்வி கற்பதற்கான அனைத்துவித வசதிகளையும் ஏற்பாடு செய்தார்..சின்ன ஜீயர் சுவாமிஜி 12 மாதங்களில் 12 மொழிகளைக் கற்றறிந்தார். ஹைதராபாதில் உள்ள சம்ஷாபத் ஸ்ரீராமநகரில் ஜிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முறையை நடைமுறைப்படுத்தி அருளினார்..சென்ற ஆண்டு சின்ன ஜீயர் சுவாமியின் தாயார் ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது இறுதிச் சடங்கில் தாயாரின் உடலுக்கு சுவாமிஜி அக்னியிட்டார்..வயிற்றுப் பிழைப்புக்காக இளைஞராக ஹைதராபாத் வந்த த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிஜி இன்று சமத்துவ மூர்த்தியை அளித்து தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
-ராஜி ரகுநாதன்.'ஸ்ரீ த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமி' என்ற பெயர் நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், சின்ன ஜீயர் சுவாமிஜி என்றால் உடனே அறிந்து கொள்வார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் சின்ன ஜீயர் சுவாமிஜியைத் தெரியாதவர்களே கிடையாது. இவர் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஆன்மீக பிரவசனங்கள் செய்து மக்களுக்கு ஆன்மிக அறிவை போதித்து வருகிறார்..அண்மையில் ஹைதராபாத் அருகில் முச்சிந்தல் என்ற இடத்தில் 'ஸ்ரீராமானுஜ சஹஸ்ராப்தி' கொண்டாட்டங்களை அவர் நடத்தி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். இங்கு 'சமத்துவ மூர்த்தி' ராமானுஜாசாரியாரின் பஞ்ச லோக விக்ரகத்தை நிறுவியுள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு பாரதப் பிரதமர் திரு மோடிஜி வருகை தந்தார். இந்த மிகப் பெரும் சிலை மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, இந்த மாபெரும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் இந்த 'சின்ன ஜீயர்' யார்? என்று அறிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது..யார் இந்த சின்ன ஜீயர் சுவாமி? வேலை தேடி ஹைதராபாத் வந்தவர் துறவியாக ஏன் மாறினார்?.சின்ன ஜீயர் சுவாமி கிழக்கு கோதாவரி மாவட்டம் அர்த்தமூரு என்ற கிராமத்தில், ஒரு சாதாரண வைணவ பிராமண குடும்பத்தில் 1956 நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று பிறந்தார். தாயார் அலமேலு மங்கை, தந்தை வேங்கடாசார்யுலு. இவரது பெற்றோர் வைத்த பெயர் 'ஸ்ரீமன் நாராயணாசார்யுலு.' இவர் கௌதம வித்யாபீடத்தில், வைணவ சம்பிரதாயமும் வேத நூற்கல்வியும் கற்றார். அதோடு நல்லான் சக்ரவர்த்துல ரகுநாதாசார்யா ஸ்வாமியிடம் சம்ஸ்க்ருதமும் தர்க்க சாஸ்திரமும் பயின்றார். ராஜமகேந்திரவரம் ஓரியண்டல் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். ஆனால் அந்த சமயத்தில் அவருடைய தந்தையார் காலமானார். இவர் தோளின் மேல் குடும்பச் சுமை விழுந்தது..அதனால் ஏதாவது வேலை தேடிக் கொள்ள எண்ணி ஒரு சிறு கைப்பையுடன் ஹைதராபாத் வந்தார். முதலில் பல இடங்களில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார். பின்னர் ஒரு சிறிய வேலை கிடைத்தது. இங்குதான் டைப்பிங், ஷார்ட் ஹாண்ட் கற்றார். அதன் பின்னர் வேலையில் அடுத்த உயரத்தை எட்டினர்..அந்த நேரத்தில், அதாவது 1975ல் பெரிய ஜீயர் சுவாமிஜி காகிநாடாவுக்கு வருகைதந்து யாகங்கள் செய்தார். எதிர்பாராமல் பெத்த ஜீயர் சுவாமியுடன் ஸ்ரீமன் நாராயணாசார்யுலுவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது தனக்கு ஒரு ஸ்டெனோ கிராபர் தேவை என்று பெத்த ஜீயர் சுவாமி தெரிவித்தார். அந்த வேலையை தானே செய்வதாக இவர் குறிப்பிட்டார். அவரும் இணங்கினார்..வீட்டில் தாயாரின் அனுமதி பெற்று ஸ்ரீமன் நாராயாணாசார்யுலு, பெத்த ஜீயர் சுவாமிஜியுடன் தன் பயணத்தைத் தொடங்கினார். அதன்பின் தன் 23வது வயதில் தாயின் அனுமதியோடு சன்யாச ஆசிரமத்தை ஏற்று த்ரிதண்டி சின்னஜீயர் ஸ்வாமியானார். சில ஆண்டுகள் கழித்து 'கீதா ஜோதி' இயக்கத்தை தொடங்கினார். பகவத் கீதையை பிரசாரம் செய்வதோடு சமுதாயத்தில் சோம்பலை நீக்கி மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தொடு இந்த இயக்கத்தை தொடங்கினார்..சின்ன ஜீயர் ஸ்வாமிஜி அதோடு நிற்கவில்லை. பார்வை அற்றோருக்காக கல்லூரிகளை நிறுவினர். அவர்களுக்கு கம்ப்யூடர் பயிற்சி அளிப்பதற்கு நிபுணர்களை நியமித்தார். அதுமட்டுமல்ல… சகல ஜீவ கோடிக்கும் ஞானத்தை அளிக்கும் வேதக் கல்வியின் சாரத்தை அனைவரும் பெறுவதற்காக பல ஆசிரமங்களை ஸ்தாபித்தார். வேத பாடசாலைகளை குருகுல பள்ளிகளாக செம்மைப்படுத்தினார். அங்கு கல்வி கற்பதற்கான அனைத்துவித வசதிகளையும் ஏற்பாடு செய்தார்..சின்ன ஜீயர் சுவாமிஜி 12 மாதங்களில் 12 மொழிகளைக் கற்றறிந்தார். ஹைதராபாதில் உள்ள சம்ஷாபத் ஸ்ரீராமநகரில் ஜிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முறையை நடைமுறைப்படுத்தி அருளினார்..சென்ற ஆண்டு சின்ன ஜீயர் சுவாமியின் தாயார் ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது இறுதிச் சடங்கில் தாயாரின் உடலுக்கு சுவாமிஜி அக்னியிட்டார்..வயிற்றுப் பிழைப்புக்காக இளைஞராக ஹைதராபாத் வந்த த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிஜி இன்று சமத்துவ மூர்த்தியை அளித்து தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.