– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி..22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்!.காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளும் ஒலிம்பிக் போலவே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இம்முறை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் 2022 ஜூலை 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்பு ஜோதி ஓட்டம் நடைபெறுவதுபோல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கும்முன்பு, 'குயின்'ஸ் ரிலே (ராணியின் தண்ட ஓட்டம்) நிகழ்வது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பேட்டன் ரிலே நவம்பர் 7, 2021 அன்று தொடங்க உள்ளது. அதன் பயணம், வடிவமைப்பு பேட்டனின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று பார்ப்போம்..காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டிஷ் பேரரசில் இருந்து உருவானதால் எப்போதுமே அதன் தொடக்கத்தில் காமன்வெல்த்தின் தலைமைக்கு, அதாவது இங்கிலாந்து ராணிக்கு முக்கியப் பங்கு உண்டு. 'குயின்ஸ் பேட்டன் ரிலே' என்ற பெயரிலேயே அது தெளிவாகத் தெரியும். அந்த வகையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து காமன்வெல்த்துக்கான தனது செய்தியை ராணி 2ஆம் எலிசபெத் வழங்கிய பிறகு குயின்ஸ் பேட்டன் ரிலே அங்கிருந்து தொடங்கும்..குயின்ஸ் பேட்டன் ரிலே இந்தியாவில் வரும் 2022 ஜனவரி 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு முக்கிய நகரங்களில் வலம் வரவுள்ளது.காமன்வெல்த் நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து, இறுதியாக 2022 ஜூலை 4ல் இங்கிலாந்து வரும் குயின்ஸ் பேட்டன் ரிலே, அங்கு நாடு முழுவதுமாக இரண்டாயிரம் பேர் மூலம் ஏந்திச் செல்லப்பட இருக்கிறது. பேட்டன் ரிலேவை ஒட்டி இருக்கும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் இதுவரை ரிலே மேற்கொள்ளப்பட்ட தூரத்தில் பாதியளவுக்கே இந்த முறை ரிலேவை மேற்கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட பேட்டனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை, 'ரேமண்ட் ஆஸ்மேன் புராடக்ட் டிசைன்' என்ற நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.பேட்டன் ரிலே நடைபெற இருக்கும் நாள்கள் 269. ரிலேவின்போது பேட்டனை ஏந்திச் செல்ல இருக்கும் நபர்கள் 7,500. பேட்டன் ரிலே கடந்து செல்ல இருக்கும் நாடுகள் 72 மற்றும் காமன்வெல்த் பிரதேசங்கள். ஒவ்வொரு நாட்டின் பிரதேசங்களில் பேட்டன் ரிலே நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை 2 – 4.பேட்டன் ரிலே 1,40,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க இருக்கிறது. பேட்டன் ரிலே தொடங்கும்போது ராணி தனது அரண்மனையில் வைத்து அந்த பேட்டனில் காமன்வெல்த்துக்கான தனது செய்தியை வைப்பார். ரிலே நிறைவடைந்த பிறகு, போட்டியின் தொடக்க நாளில் நிகழ்ச்சி நடைபெறும்போதும் பேட்டனில் வைக்கப்பட்டுள்ள ராணியின் செய்தி அதிலிருந்து வெளியே எடுத்து வாசிக்கப்படும். ராணியின் அந்தச் செய்தியை வைப்பதற்காகவே இந்த பேட்டன் உள்ளதாக நவீன முறையில் ஒரு இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பேட்டனில் கேமராவுக்கு மேலாக மூன்று அடையாளக் குறிகள் கொண்ட இடத்தில், 'லங்ஸ்' என்ற தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் உணரிகள் (சென்சார்ஸ்) லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேட்டன் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழல் தன்மை, காற்றின் தரம் போன்றவற்றைக் கண்டறிந்து பதிவு செய்து கொள்ளும். அத்துடன் பேட்டனை ஏந்திச் செல்லும் நபர்களின் இதயத் துடிப்பை அறிந்து அதைக் காட்டும் சென்சார்களும் இதில் உள்ளன..ரிலேவின்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வகையில் இந்தப் பேட்டனில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கக்கூடிய நுண்ணிய கேமராவும், அதன் பதிவுகளை சேகரிக்கும் அமைப்பும் உள்ளாகவே பொருத்தப்பட்டுள்ளன.ராணி 2ஆம் எலிசபெத் முடிசூட்டிக்கொண்டதன் 75ஆம் ஆண்டை (பிளாட்டினம் ஜுப்லி) கொண்டாடும் வகையில் இந்தப் பேட்டனில் வரக்கூடிய வளைவு விளிம்புகள் பிளாட்டினத்தால் செய்யப்பட்டுள்ளன.பிர்மிங்ஹாம் நகரில் விலை உயர்ந்த உலோக மற்றும் கற்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, 'ஜுவெல்லரி குவார்டர்' என்ற இடத்திலிருந்து இந்தப் பேட்டன் வடிவமைப்புக்கான அன்றாடப் பயன்பாட்டு உலோகங்களான செம்பு, அலுமினியம், பித்தளை ஆகிய உலோகங்கள் பெறப்பட்டுள்ளன.இந்தப் பேட்டனில் பல வண்ணங்களில் ஒளிரக்கூடிய எல்.இ.டி. விளக்குகள் ஊடாகப் பொருத்தப்பட்டுள்ளன. ரிலேவின்போது ஒரு நபரின் கைகளில் இருந்து இன்னொருவரின் கைக்கு மாற்றப்படும்போது, அவை ஒளிரும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி..22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்!.காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளும் ஒலிம்பிக் போலவே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இம்முறை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் 2022 ஜூலை 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்பு ஜோதி ஓட்டம் நடைபெறுவதுபோல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடங்கும்முன்பு, 'குயின்'ஸ் ரிலே (ராணியின் தண்ட ஓட்டம்) நிகழ்வது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பேட்டன் ரிலே நவம்பர் 7, 2021 அன்று தொடங்க உள்ளது. அதன் பயணம், வடிவமைப்பு பேட்டனின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று பார்ப்போம்..காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டிஷ் பேரரசில் இருந்து உருவானதால் எப்போதுமே அதன் தொடக்கத்தில் காமன்வெல்த்தின் தலைமைக்கு, அதாவது இங்கிலாந்து ராணிக்கு முக்கியப் பங்கு உண்டு. 'குயின்ஸ் பேட்டன் ரிலே' என்ற பெயரிலேயே அது தெளிவாகத் தெரியும். அந்த வகையில் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து காமன்வெல்த்துக்கான தனது செய்தியை ராணி 2ஆம் எலிசபெத் வழங்கிய பிறகு குயின்ஸ் பேட்டன் ரிலே அங்கிருந்து தொடங்கும்..குயின்ஸ் பேட்டன் ரிலே இந்தியாவில் வரும் 2022 ஜனவரி 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு முக்கிய நகரங்களில் வலம் வரவுள்ளது.காமன்வெல்த் நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து, இறுதியாக 2022 ஜூலை 4ல் இங்கிலாந்து வரும் குயின்ஸ் பேட்டன் ரிலே, அங்கு நாடு முழுவதுமாக இரண்டாயிரம் பேர் மூலம் ஏந்திச் செல்லப்பட இருக்கிறது. பேட்டன் ரிலேவை ஒட்டி இருக்கும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் இதுவரை ரிலே மேற்கொள்ளப்பட்ட தூரத்தில் பாதியளவுக்கே இந்த முறை ரிலேவை மேற்கொள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட பேட்டனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை, 'ரேமண்ட் ஆஸ்மேன் புராடக்ட் டிசைன்' என்ற நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.பேட்டன் ரிலே நடைபெற இருக்கும் நாள்கள் 269. ரிலேவின்போது பேட்டனை ஏந்திச் செல்ல இருக்கும் நபர்கள் 7,500. பேட்டன் ரிலே கடந்து செல்ல இருக்கும் நாடுகள் 72 மற்றும் காமன்வெல்த் பிரதேசங்கள். ஒவ்வொரு நாட்டின் பிரதேசங்களில் பேட்டன் ரிலே நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை 2 – 4.பேட்டன் ரிலே 1,40,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க இருக்கிறது. பேட்டன் ரிலே தொடங்கும்போது ராணி தனது அரண்மனையில் வைத்து அந்த பேட்டனில் காமன்வெல்த்துக்கான தனது செய்தியை வைப்பார். ரிலே நிறைவடைந்த பிறகு, போட்டியின் தொடக்க நாளில் நிகழ்ச்சி நடைபெறும்போதும் பேட்டனில் வைக்கப்பட்டுள்ள ராணியின் செய்தி அதிலிருந்து வெளியே எடுத்து வாசிக்கப்படும். ராணியின் அந்தச் செய்தியை வைப்பதற்காகவே இந்த பேட்டன் உள்ளதாக நவீன முறையில் ஒரு இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பேட்டனில் கேமராவுக்கு மேலாக மூன்று அடையாளக் குறிகள் கொண்ட இடத்தில், 'லங்ஸ்' என்ற தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் உணரிகள் (சென்சார்ஸ்) லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேட்டன் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழல் தன்மை, காற்றின் தரம் போன்றவற்றைக் கண்டறிந்து பதிவு செய்து கொள்ளும். அத்துடன் பேட்டனை ஏந்திச் செல்லும் நபர்களின் இதயத் துடிப்பை அறிந்து அதைக் காட்டும் சென்சார்களும் இதில் உள்ளன..ரிலேவின்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வகையில் இந்தப் பேட்டனில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கக்கூடிய நுண்ணிய கேமராவும், அதன் பதிவுகளை சேகரிக்கும் அமைப்பும் உள்ளாகவே பொருத்தப்பட்டுள்ளன.ராணி 2ஆம் எலிசபெத் முடிசூட்டிக்கொண்டதன் 75ஆம் ஆண்டை (பிளாட்டினம் ஜுப்லி) கொண்டாடும் வகையில் இந்தப் பேட்டனில் வரக்கூடிய வளைவு விளிம்புகள் பிளாட்டினத்தால் செய்யப்பட்டுள்ளன.பிர்மிங்ஹாம் நகரில் விலை உயர்ந்த உலோக மற்றும் கற்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, 'ஜுவெல்லரி குவார்டர்' என்ற இடத்திலிருந்து இந்தப் பேட்டன் வடிவமைப்புக்கான அன்றாடப் பயன்பாட்டு உலோகங்களான செம்பு, அலுமினியம், பித்தளை ஆகிய உலோகங்கள் பெறப்பட்டுள்ளன.இந்தப் பேட்டனில் பல வண்ணங்களில் ஒளிரக்கூடிய எல்.இ.டி. விளக்குகள் ஊடாகப் பொருத்தப்பட்டுள்ளன. ரிலேவின்போது ஒரு நபரின் கைகளில் இருந்து இன்னொருவரின் கைக்கு மாற்றப்படும்போது, அவை ஒளிரும்.