வாசகர் ஜமாய்க்கிறாங்க.– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இதற்கு, 'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்புப் பெயரும் உண்டு..அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது. இந்த ஊரிலுள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, பேருந்தை விட்டு இறங்கி 2 கி.மீ தூரம் சிரமம் பார்க்காமல் நடந்து சென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட சமூகப் பதிவுகளை ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்தி வைத்திருப்பதை ரசிக்கலாம்..சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்குள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன..இங்குள்ள மலையின் மேல் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ் பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம்..மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன. தலை வைத்துக்கொள்ள தலையணை போல் மேடாகச் செதுக்கி வைத்துள்ளனர்..இங்குள்ள பாறை ஆறு அங்குல ஆழத்துக்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது..சங்க கால ஓவியம், சமணர் படுக்கைகள் என பல பொக்கிஷங்கள் இந்திய தொல்லியல் துறையால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன..இங்கு ஒரு குகை இயற்கையில் அமைந்த தாழ்வாரம் போல் உள்ளது. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டுள்ளது..இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி, அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடைவரைக் கோயிலை (கி.பி.815 – 862) புதுப்பித்திருக்கிறார்..இந்தக் குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவாச்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையின் உள்ளே ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை, இறைவனின் உத்தரவின்படி ஒரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் இறைவனின் உத்தரவு பெற்று, சுற்றுலாத் துறையின் அனுமதியோடு இந்தச் சுனையில் இருந்த முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன..பூஜை ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக அல்லது பல ஆயிரக்கணக்கான வருடங்கள் நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது பேரதிசயம். ஏனெனில், சுற்றிலும் இருக்கும் பாறை , மலை எல்லாம் பாசி படர்ந்துள்ள நிலையில், இந்தச் சுனையின் உள்ளே இருக்கும் இறைவனின் சிவலிங்கத் திருமேனி மட்டும் புதிதாய் காட்சியளிப்பது வியப்பினில் ஆழ்த்துகிறது.
வாசகர் ஜமாய்க்கிறாங்க.– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இதற்கு, 'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்புப் பெயரும் உண்டு..அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது. இந்த ஊரிலுள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, பேருந்தை விட்டு இறங்கி 2 கி.மீ தூரம் சிரமம் பார்க்காமல் நடந்து சென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட சமூகப் பதிவுகளை ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்தி வைத்திருப்பதை ரசிக்கலாம்..சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்குள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன..இங்குள்ள மலையின் மேல் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ் பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம்..மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன. தலை வைத்துக்கொள்ள தலையணை போல் மேடாகச் செதுக்கி வைத்துள்ளனர்..இங்குள்ள பாறை ஆறு அங்குல ஆழத்துக்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது..சங்க கால ஓவியம், சமணர் படுக்கைகள் என பல பொக்கிஷங்கள் இந்திய தொல்லியல் துறையால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன..இங்கு ஒரு குகை இயற்கையில் அமைந்த தாழ்வாரம் போல் உள்ளது. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டுள்ளது..இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி, அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடைவரைக் கோயிலை (கி.பி.815 – 862) புதுப்பித்திருக்கிறார்..இந்தக் குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவாச்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையின் உள்ளே ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு, 28 வருடத்திற்கு ஒருமுறை, இறைவனின் உத்தரவின்படி ஒரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் இறைவனின் உத்தரவு பெற்று, சுற்றுலாத் துறையின் அனுமதியோடு இந்தச் சுனையில் இருந்த முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன..பூஜை ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக அல்லது பல ஆயிரக்கணக்கான வருடங்கள் நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது பேரதிசயம். ஏனெனில், சுற்றிலும் இருக்கும் பாறை , மலை எல்லாம் பாசி படர்ந்துள்ள நிலையில், இந்தச் சுனையின் உள்ளே இருக்கும் இறைவனின் சிவலிங்கத் திருமேனி மட்டும் புதிதாய் காட்சியளிப்பது வியப்பினில் ஆழ்த்துகிறது.