இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'.உட்கார்ந்து எழுந்திருப்பதற்கே சிரமப்படும் எங்களுக்கு, ரப்பர் மங்கை ஞானவேணி பற்றிப் படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைப் புரிய வைத்தது. அவருக்கு எங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறோம்.– மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.l கன்னியாக வாழும் எத்தனையோ அபலை முதிர் கன்னிகளின் துயரத்தை இயல்பான நடையில், அழகாக வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.l பெற்றோர்களின் பாசம் பிள்ளைகள் மீது, மிதமிஞ்சிய அளவில் இருப்பின் பிரச்னைதான் ஏற்படும். அதனால், 'ஒரு வார்த்தை' தலையங்கத்தில் கூறியபடி இதர செயல்பாடுகளில் ஈடுபட்டால் பாசப் பிராப்ளத்திற்குத் தீர்வு ஏற்படும்.l திருக்கார்த்திகை திருநாள் விழா எதற்காக கொண்டாடப்படுகிறது? புராணங்கள என்ன சொல்கின்றன? எப்படி தீபம் ஏற்ற வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு வாசகர்கள் மூலம் பதிலுரைத்த, 'மங்கையர் மலருக்கு' திருக்கார்த்திகை தீப ஔி வாழ்த்துக்கள்.– து.சேரன், ஆலங்குளம்'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' இப்படித்தான் ஜேம்ஸால் கைவிடப்பட்ட அவரின் மகள் ஃபாத்திமா, பிறகு ஃபிரான்சிஸாகி கல்யாண விஷயத்தில் தனது தந்தைக்கு உதவியது. நல்ல கதை!– வி.கே.லக்ஷ்மிநாராயணன்.'ஒரு வார்த்தை'யில் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், 'நச்!' பாலூட்டி வளர்த்த கிளிகள் எப்பவும் நம் மடியிலேயே அமர்ந்திருக்காது. றெக்கை முளைத்ததும் பறந்து சென்று, தனக்கான கூட்டைக் கட்டி, குடும்பம் அமைத்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடும் என்பதை அருமையாகக் கூறியுள்ளார் ஆசிரியர். பாராட்டுக்கள்.– எஸ்.ஜெயகாந்தி.'சுகம் தரும் சங்கீதம்' என்ற தலைப்பில், ஜி.எஸ்.எஸ். அவர்கள் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தேன்; ரசித்தேன்; சுவைத்தேன். குயிலின் குரல் என்றால் அது பி.சுசீலாதான்! அந்தக் காலத்தில் பல முன்னணி கதாநாயகிகள் தனக்கு சுசீலாதான் பின்னணி பாட வேண்டும் என்று வற்புறுத்தியதுண்டு. அப்படிப்பட்ட இசைக்குயில் பி.சுசீலா தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்தது ஓர் வரப்பிரசாதம்!– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை'மழைக்காலம் வந்தாச்சு' நேரத்திற்கு ஏற்ப நேர்த்தியான கட்டுரை!– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ஆசிரியரின், 'ஒரு வார்த்தை' நெத்தியடி. எந்த உறவிடமும் அதிகமான பாசத்தைக் காட்டி, கட்டிப்போடாமல், 'போய் வா' என்று அனுப்பி வைப்பதே மிகவும் சிறந்தது. ஆகர்ஷன சக்தி அவர்களை மீண்டும் நம்மிடமே கொண்டுவந்து சேர்க்கும் என்ற ஒரு தன்னம்பிக்கையை கொடுத்த அருமையான, 'ஒரு வார்த்தை ' பாராட்டுக்கள்..– பிரகதா நவநீதன், மதுரை.'மழைக்காலம் வந்தாச்சு!' விரிவான, பயனுள்ள குறிப்புகள் நிறைந்த படைப்பு!– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு.பாடகி பி.சுசிலாவின் சங்கீதம் செவிக்கும், மனதுக்கும் சுகம்தான். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது அத்தனைப் பாடல்களுமே யாராலும் மறக்க முடியாதவைதானே!– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.'ஒரு வார்த்தை'யில் தாயும், பிள்ளையும் ஒன்றே ஆனாலும், மூளையும், எண்ணங்களும் வேறு என்று தெளிவாகவும், வித்தியாசமாகவும் கூறியிருக்கிறார் ஆசிரியர். படிக்கவே நிறைவாக இருந்தது.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.உரிய நேரத்தில், உயா்ந்த நோக்கத்தில் வெளிவந்த, 'ஜெய்பீம்' திரைக்காவியத்திற்கு மாியாதை காட்டும் விதமாய் அட்டைப்படம் அமைந்தது பெருமை… வாழ்த்துக்கள்!– ச.சிவசங்காி சரவணன், செம்பனாா்கோவில்.'கொண்டாடுவோம் குழந்தைகளை' என்று குழந்தைகளை நான்காகப் பிரித்து, எப்படிப் பின்பற்ற வேண்டும் என்று அழகாக, படிப்படியாகச் சொன்ன கட்டுரை மிகவும் அருமை. இது மிகவும் பயனுள்ள செய்தி. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்று சொன்ன, மங்கையர் மலருக்கு பாராட்டுக்கள்.– உஷா முத்துராமன், திருநகர்.'திருக்கார்த்திகை திருநாள்' வரும் நேரத்தில் கார்த்திகை பற்றிய அனைத்துச் செய்திகளும் இன்பத் தேனாக காதுகளில் ஒலித்தது. 'தீபமாக நின்ற திருமால்' என்ற திருமால் பற்றிய செய்தி புதுமையாக இருந்தது. தீபங்கள் பதினாறு வகைப்படும் என்று பல அறிவுக்கு விருந்தளிக்கும் ஆன்மிகச் செய்திகளைக் கொடுத்த மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.– நந்தினி கிருஷ்ணன், மதுரை
இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'.உட்கார்ந்து எழுந்திருப்பதற்கே சிரமப்படும் எங்களுக்கு, ரப்பர் மங்கை ஞானவேணி பற்றிப் படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைப் புரிய வைத்தது. அவருக்கு எங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறோம்.– மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.l கன்னியாக வாழும் எத்தனையோ அபலை முதிர் கன்னிகளின் துயரத்தை இயல்பான நடையில், அழகாக வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.l பெற்றோர்களின் பாசம் பிள்ளைகள் மீது, மிதமிஞ்சிய அளவில் இருப்பின் பிரச்னைதான் ஏற்படும். அதனால், 'ஒரு வார்த்தை' தலையங்கத்தில் கூறியபடி இதர செயல்பாடுகளில் ஈடுபட்டால் பாசப் பிராப்ளத்திற்குத் தீர்வு ஏற்படும்.l திருக்கார்த்திகை திருநாள் விழா எதற்காக கொண்டாடப்படுகிறது? புராணங்கள என்ன சொல்கின்றன? எப்படி தீபம் ஏற்ற வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு வாசகர்கள் மூலம் பதிலுரைத்த, 'மங்கையர் மலருக்கு' திருக்கார்த்திகை தீப ஔி வாழ்த்துக்கள்.– து.சேரன், ஆலங்குளம்'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' இப்படித்தான் ஜேம்ஸால் கைவிடப்பட்ட அவரின் மகள் ஃபாத்திமா, பிறகு ஃபிரான்சிஸாகி கல்யாண விஷயத்தில் தனது தந்தைக்கு உதவியது. நல்ல கதை!– வி.கே.லக்ஷ்மிநாராயணன்.'ஒரு வார்த்தை'யில் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், 'நச்!' பாலூட்டி வளர்த்த கிளிகள் எப்பவும் நம் மடியிலேயே அமர்ந்திருக்காது. றெக்கை முளைத்ததும் பறந்து சென்று, தனக்கான கூட்டைக் கட்டி, குடும்பம் அமைத்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடும் என்பதை அருமையாகக் கூறியுள்ளார் ஆசிரியர். பாராட்டுக்கள்.– எஸ்.ஜெயகாந்தி.'சுகம் தரும் சங்கீதம்' என்ற தலைப்பில், ஜி.எஸ்.எஸ். அவர்கள் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தேன்; ரசித்தேன்; சுவைத்தேன். குயிலின் குரல் என்றால் அது பி.சுசீலாதான்! அந்தக் காலத்தில் பல முன்னணி கதாநாயகிகள் தனக்கு சுசீலாதான் பின்னணி பாட வேண்டும் என்று வற்புறுத்தியதுண்டு. அப்படிப்பட்ட இசைக்குயில் பி.சுசீலா தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்தது ஓர் வரப்பிரசாதம்!– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை'மழைக்காலம் வந்தாச்சு' நேரத்திற்கு ஏற்ப நேர்த்தியான கட்டுரை!– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.ஆசிரியரின், 'ஒரு வார்த்தை' நெத்தியடி. எந்த உறவிடமும் அதிகமான பாசத்தைக் காட்டி, கட்டிப்போடாமல், 'போய் வா' என்று அனுப்பி வைப்பதே மிகவும் சிறந்தது. ஆகர்ஷன சக்தி அவர்களை மீண்டும் நம்மிடமே கொண்டுவந்து சேர்க்கும் என்ற ஒரு தன்னம்பிக்கையை கொடுத்த அருமையான, 'ஒரு வார்த்தை ' பாராட்டுக்கள்..– பிரகதா நவநீதன், மதுரை.'மழைக்காலம் வந்தாச்சு!' விரிவான, பயனுள்ள குறிப்புகள் நிறைந்த படைப்பு!– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு.பாடகி பி.சுசிலாவின் சங்கீதம் செவிக்கும், மனதுக்கும் சுகம்தான். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது அத்தனைப் பாடல்களுமே யாராலும் மறக்க முடியாதவைதானே!– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.'ஒரு வார்த்தை'யில் தாயும், பிள்ளையும் ஒன்றே ஆனாலும், மூளையும், எண்ணங்களும் வேறு என்று தெளிவாகவும், வித்தியாசமாகவும் கூறியிருக்கிறார் ஆசிரியர். படிக்கவே நிறைவாக இருந்தது.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.உரிய நேரத்தில், உயா்ந்த நோக்கத்தில் வெளிவந்த, 'ஜெய்பீம்' திரைக்காவியத்திற்கு மாியாதை காட்டும் விதமாய் அட்டைப்படம் அமைந்தது பெருமை… வாழ்த்துக்கள்!– ச.சிவசங்காி சரவணன், செம்பனாா்கோவில்.'கொண்டாடுவோம் குழந்தைகளை' என்று குழந்தைகளை நான்காகப் பிரித்து, எப்படிப் பின்பற்ற வேண்டும் என்று அழகாக, படிப்படியாகச் சொன்ன கட்டுரை மிகவும் அருமை. இது மிகவும் பயனுள்ள செய்தி. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்று சொன்ன, மங்கையர் மலருக்கு பாராட்டுக்கள்.– உஷா முத்துராமன், திருநகர்.'திருக்கார்த்திகை திருநாள்' வரும் நேரத்தில் கார்த்திகை பற்றிய அனைத்துச் செய்திகளும் இன்பத் தேனாக காதுகளில் ஒலித்தது. 'தீபமாக நின்ற திருமால்' என்ற திருமால் பற்றிய செய்தி புதுமையாக இருந்தது. தீபங்கள் பதினாறு வகைப்படும் என்று பல அறிவுக்கு விருந்தளிக்கும் ஆன்மிகச் செய்திகளைக் கொடுத்த மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.– நந்தினி கிருஷ்ணன், மதுரை