தாமஸ் கோப்பை – 2022.-மஞ்சுளா சுவாமிநாதன்.மே 15, 2022, இந்திய பேட்மின்டன் விளையாட்டு வீரர்களுக்கும், இந்தியர்களுக்கும் மறக்க முடியாத நாள். காரணம், அன்றுதான் உலக பிரசித்தி பெற்ற தாமஸ் கோப்பையை முதன் முதலில் இந்திய ஆடவர் பேட்மின்டன் அணி வென்றது..இது என்ன அவ்வளவு பெரிய சாதனையா?.தாமஸ் கோப்பைக்கு 70 வருட சரித்திரம் உள்ளது. எப்படி கிரிக்கெட்க்கும், கால் பந்திற்க்கும் ஒரு உலகக் கோப்பையோ, டென்னிஸ்ஸுக்கு ஒரு டேவிஸ் கோப்பையோ, அதுபோல பேட்மின்டனுக்கு தாமஸ் கோப்பை என்றால் மிகையாகாது. இந்திய வீரர்கள் பேட்மின்டன் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் ஜெயித்திருந்தாலும், ஒரு அணியாக தாமஸ் கோப்பையை வென்றிருப்பது இதுவே முதல் முறை..தாமஸ் கோப்பை, சர்வதேச பேட்மின்டன் ஃபெடரேடன் இன் நிறுவனர் சார் ஜார்ஜ் தாமஸ் நினைவாக, 1948- 49 இலிருந்து விளையாடப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டியானது ஆண்களுக்கான பிரத்யேக பேட்மின்டன் போட்டியாக துவங்கப்பட்டது..1984 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்காக தனியாக நடத்தப்படும் உபேர் கோப்பை போட்டிகளும், தாமஸ் கோப்பை போட்டிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகள் 'தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டிகள்' என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன..தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்தோனேசியாவும், சீனாவும் பல ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துவந்தனர். இந்தோனேசியா 14 முறையும், சீனா 10 முறையும் இந்த கோப்பையை வென்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய ஆண்கள் கூட்டணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவை, 3 – 0 என்ற கணக்கில் வென்று, செய்த சாதனை பெரிய விஷயம் தானே!.தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2022.மே மாதம் எட்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை பேங்காக் நகரம், தாய்லாந்தில் நடந்த இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து பேட்மின்டன் வீரர்களும், வீராங்கனைகளும் லக்ஷயா சென் மற்றும் பி.வி. சிந்து தலைமையில் தாமஸ் மற்றும் உபேர் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றனர். உபேர் கோப்பை போட்டிகளில் பெண்கள் அணி கால் இறுதியில் தோற்க, ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்தியர்களின் கவனம் திரும்பியது..ஆண்கள் அணி: லக்ஷயா சென், கிடம்பி ஶ்ரீகாந்த், HS பிரனாய், பிரியன்ஷு ரஜாவத். இரட்டையர் பிரிவில்: சத்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி , M.R .அர்ஜுன், துருவ் கபிலா , கிருஷ்ண பிரசாத் கர்கா, விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா, என பத்து வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர்..மொத்தம் பதினாறு தேசங்கள் (அணிகள்) பங்கேற்ற இந்த 32வது தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி தொடக்கத்திலிருந்தே நல்ல பார்மில் இருந்தனர். ஒவ்வொரு அணியுடனும் 3 ஒற்றையர் ஆட்டங்கள், 2 இரட்டையர் ஆட்டங்கள் என மொத்தம் 5 ஆட்டங்கள் விளையாடவேண்டும். பலம் மிக்க அணிகளான மலேசியா மற்றும் டென்மார்க்குடன் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளில் 3 – 2 என்ற விகிதத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவுடன் 3 – 0 என்ற விகிதத்தில் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டனர். அதுவும் இறுதிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் கிடம்பி ஶ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை நேர் செட்டுகளில் (21 – 15, 23 – 21) வென்ற தருணம், இந்தியாவின் எழுபது ஆண்டு கால தாமஸ் கோப்பைக்கான ஏக்கத்தை மட்டும் தீர்கவில்லை, உலக அரங்கில் இந்தியா வளர்ந்து வருகிறது என்ற செய்தியையும் நிலைநாட்டியுள்ளனர் இந்த இளம் வீரர்கள்..பிரதம மந்திரியின் வாழ்த்துகள்! .பாரத பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் "இந்திய பேட்மின்டன் அணியானது வரலாறு படைத்துள்ளது! நாடு முழுவதும் அவர்களது தாமஸ் கோப்பை வெற்றியால் பெருமிதம் கொண்டுள்ளோம். இந்த திறமையான அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இதுபோல நீங்கள் மென்மேலும் வெற்றிகள் பல பெற வேண்டுகிறேன். இந்த வெற்றியானது நம் நாட்டைச் சேர்ந்த பல இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்." என்று பதிவிட்டிருந்த்தார். அதோடு நிற்காமல், இந்திய வீரர்களிடம் உடனுக்குடன் தொலைபேசியில் கலந்துரையாடி அவரது வாழ்த்துகளை தெரிவித்து, தனது இல்லத்தில் அவர்களுக்கென சிறப்பு விருந்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்..தாமஸ் கோப்பை வெற்றி இந்தியர்களுக்கு ஓர் "ஸ்வீட் எடு கொண்டாடு" தருணம்!
தாமஸ் கோப்பை – 2022.-மஞ்சுளா சுவாமிநாதன்.மே 15, 2022, இந்திய பேட்மின்டன் விளையாட்டு வீரர்களுக்கும், இந்தியர்களுக்கும் மறக்க முடியாத நாள். காரணம், அன்றுதான் உலக பிரசித்தி பெற்ற தாமஸ் கோப்பையை முதன் முதலில் இந்திய ஆடவர் பேட்மின்டன் அணி வென்றது..இது என்ன அவ்வளவு பெரிய சாதனையா?.தாமஸ் கோப்பைக்கு 70 வருட சரித்திரம் உள்ளது. எப்படி கிரிக்கெட்க்கும், கால் பந்திற்க்கும் ஒரு உலகக் கோப்பையோ, டென்னிஸ்ஸுக்கு ஒரு டேவிஸ் கோப்பையோ, அதுபோல பேட்மின்டனுக்கு தாமஸ் கோப்பை என்றால் மிகையாகாது. இந்திய வீரர்கள் பேட்மின்டன் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் ஜெயித்திருந்தாலும், ஒரு அணியாக தாமஸ் கோப்பையை வென்றிருப்பது இதுவே முதல் முறை..தாமஸ் கோப்பை, சர்வதேச பேட்மின்டன் ஃபெடரேடன் இன் நிறுவனர் சார் ஜார்ஜ் தாமஸ் நினைவாக, 1948- 49 இலிருந்து விளையாடப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்போட்டியானது ஆண்களுக்கான பிரத்யேக பேட்மின்டன் போட்டியாக துவங்கப்பட்டது..1984 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்காக தனியாக நடத்தப்படும் உபேர் கோப்பை போட்டிகளும், தாமஸ் கோப்பை போட்டிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகள் 'தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டிகள்' என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன..தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்தோனேசியாவும், சீனாவும் பல ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துவந்தனர். இந்தோனேசியா 14 முறையும், சீனா 10 முறையும் இந்த கோப்பையை வென்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய ஆண்கள் கூட்டணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவை, 3 – 0 என்ற கணக்கில் வென்று, செய்த சாதனை பெரிய விஷயம் தானே!.தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2022.மே மாதம் எட்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை பேங்காக் நகரம், தாய்லாந்தில் நடந்த இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து பேட்மின்டன் வீரர்களும், வீராங்கனைகளும் லக்ஷயா சென் மற்றும் பி.வி. சிந்து தலைமையில் தாமஸ் மற்றும் உபேர் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றனர். உபேர் கோப்பை போட்டிகளில் பெண்கள் அணி கால் இறுதியில் தோற்க, ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்தியர்களின் கவனம் திரும்பியது..ஆண்கள் அணி: லக்ஷயா சென், கிடம்பி ஶ்ரீகாந்த், HS பிரனாய், பிரியன்ஷு ரஜாவத். இரட்டையர் பிரிவில்: சத்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி , M.R .அர்ஜுன், துருவ் கபிலா , கிருஷ்ண பிரசாத் கர்கா, விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா, என பத்து வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றனர்..மொத்தம் பதினாறு தேசங்கள் (அணிகள்) பங்கேற்ற இந்த 32வது தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி தொடக்கத்திலிருந்தே நல்ல பார்மில் இருந்தனர். ஒவ்வொரு அணியுடனும் 3 ஒற்றையர் ஆட்டங்கள், 2 இரட்டையர் ஆட்டங்கள் என மொத்தம் 5 ஆட்டங்கள் விளையாடவேண்டும். பலம் மிக்க அணிகளான மலேசியா மற்றும் டென்மார்க்குடன் கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளில் 3 – 2 என்ற விகிதத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன்ஸான இந்தோனேசியாவுடன் 3 – 0 என்ற விகிதத்தில் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டனர். அதுவும் இறுதிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் கிடம்பி ஶ்ரீகாந்த் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை நேர் செட்டுகளில் (21 – 15, 23 – 21) வென்ற தருணம், இந்தியாவின் எழுபது ஆண்டு கால தாமஸ் கோப்பைக்கான ஏக்கத்தை மட்டும் தீர்கவில்லை, உலக அரங்கில் இந்தியா வளர்ந்து வருகிறது என்ற செய்தியையும் நிலைநாட்டியுள்ளனர் இந்த இளம் வீரர்கள்..பிரதம மந்திரியின் வாழ்த்துகள்! .பாரத பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் "இந்திய பேட்மின்டன் அணியானது வரலாறு படைத்துள்ளது! நாடு முழுவதும் அவர்களது தாமஸ் கோப்பை வெற்றியால் பெருமிதம் கொண்டுள்ளோம். இந்த திறமையான அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இதுபோல நீங்கள் மென்மேலும் வெற்றிகள் பல பெற வேண்டுகிறேன். இந்த வெற்றியானது நம் நாட்டைச் சேர்ந்த பல இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்." என்று பதிவிட்டிருந்த்தார். அதோடு நிற்காமல், இந்திய வீரர்களிடம் உடனுக்குடன் தொலைபேசியில் கலந்துரையாடி அவரது வாழ்த்துகளை தெரிவித்து, தனது இல்லத்தில் அவர்களுக்கென சிறப்பு விருந்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்..தாமஸ் கோப்பை வெற்றி இந்தியர்களுக்கு ஓர் "ஸ்வீட் எடு கொண்டாடு" தருணம்!