வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்!.தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு – 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் – 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா – 1 பிடி, உப்பு – ருசிக்கேற்ப..செய்முறை: நெல்லிக்காயை மின்அரைவையில் அரைக்கவும். அதனுடன் இஞ்சிச்சாறு, மோர், நாட்டுச்சர்க்கரை, உப்பு சேர்த்து அடிக்கவும். இறுதியில் புதினா போட்டு ஒரு சுற்று சுற்றி பருகலாம். (இதை வடிகட்டியும் அருந்தலாம்.) வெயிலில் அலைந்த களைப்பைப் போக்கும் இம்மோர். பருகி, உடற்சூட்டைத் தணித்துக் கொள்ளுங்கள்.-செ.கலைவாணி, சேலம்.===============================.கோடைக்கேற்ற குளு குளு லஸ்ஸி!.நுங்கு லஸ்ஸி.தேவை: இளசான நுங்கு – 5, புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 3, ஐஸ் துண்டுகள், உப்பு தேவைக்கேற்ப..செய்முறை: பேரீச்சம் பழத்தை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து மிக்சியில் அரைக்கவும். நுங்கை தொல் நீக்கி அதில் சேர்த்து லேசாக ஒரு சுற்று சுற்றவும். கடைசியில் தயிரையும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அடித்து இறக்கவும்..இதை தம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை உடைத்து சேர்க்கவும். (ஐஸ் இல்லாமலும் போடலாம்) சுவையான சத்தான வெயிலுக்கேற்ற நுங்கு லஸ்ஸி ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை குடிக்கலாம் சத்தான லஸ்ஸி..===============================.பைனாப்பிள் லஸ்ஸி.தேவை: பைனாப்பிள் துண்டுகள் – 5, இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன், புளிப்பில்லாத தயிர் – 1½ கப், உப்பு – சிறிது, மிளகுத் தூள் – ½ டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, பொடியாக அரித்த மல்லித் தழை – 1 கப்..செய்முறை: பைனாப்பிளை பொடியாக அரிந்து இஞ்சி, கொத்துமல்லி, உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பின் இத்துடன் தயிர், மிளகுத் தூள், பெருங்காயம் சேர்த்து அரைபட்டதும் நீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி வடிகட்டியில் வடிகட்டவும். தம்ளர்களில் ஊற்றி ஐஸ்கட்டிகளை உடைத்துச் சேர்க்கவும். இந்த பைனாப்பிள் லஸ்ஸி வித்தியாச சுவையில் அனைவரையும் கவரும்..===============================.இளநீர் டிலைட்.தேவை: இளநீர் – 2 கப், இளநீர் வழுக்கை – 4 ஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், சர்க்கரை – ¼ கப், அரிந்த ஆப்பிள் – 6 ஸ்பூன்..செய்முறை: ஆப்பிளின் மேல் தோலை நீக்கி நன்றாக மசிக்கவும். இளநீர் வழுக்கையை சிறிது இளநீர் ஊற்றி மிக்சியில் அரைக்கவும். இத்துடன் மசித்த ஆப்பிள் , மீதியுள்ள இளநீர், தேன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி மிக்சியில் ஓட விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.உடைந்த ஐஸ்கட்டிகள் சேர்த்து கண்ணாடி தம்ளர்களில் ஊற்றி குடிக்கலாம்..===============================.தர்பூசணி கீர்.தேவை: தர்பூசணி – 2 கப், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், புதினா இலைகள் – 2 ஸ்பூன், பாதாம் துண்டுகள் – 10, பிஸ்தா – 5, பால் – 1 கப், சர்க்கரை – 3 ஸ்பூன்..செய்முறை: பாதாம், பிஸ்தா இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து தோல் நீக்கி மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைக்கும்போதே இதில் சர்க்கரையும் சேர்க்கவும். பாலைக் கொதிக்க வைத்து, அதில் அரைத்த விழுதினைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும். தர்பூசணி விதை நீக்கி, இஞ்சி, புதினா சேர்த்து மிக்சியி்ல் ஒரு சுற்று ஓடவிட்டு வடிகட்டவும். சஇதில் பால் கலவை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எல்லாம் சேர்த்து அரைத்து கலக்கி, தம்ளரில் ஊற்றி ஐஸ்துண்டுகள் போட்டு குடிக்க குளுகுளவென இருக்கும் கீர்.-வசந்தா மாரிமுத்து, சென்னை.===============================.ஊறுகாய் வகைகள்!.ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!.தேவையானவை: பச்சை மிளகாய் – 20, எள் – 2 டீஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், ஆம்சுர் பவுடர், மஞ்சள் தூள் – தலா ½ டீஸ்பூன், கடுகு – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கு..செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் பெருங்சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பிறகு அரைத்த பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதில் சேர்க்கவும். 2,3 நாட்கள் நன்றாக ஊறவிட்டு பயன்படுத்தவும்..===============================.மிக்ஸட் காய்கறி ஊறுகாய்.தேவையானவை: கேரட், பீன்ஸ், காலிபிளவர் (தனித்தனியாக பூவாக்கியது) – தலா 1 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எ.பழம் – 2, மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு..செய்முறை: வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் எல்லா காய்கறிகளையும் போட்டு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சம் பழத் துண்டுகள் சேர்க்கவும். பிறகு எண்ணெய் விட்டு நன்றாக கலந்து, ஊற வைத்துப் பயன்படுத்தவும்.-மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்
வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்!.தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு – 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் – 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா – 1 பிடி, உப்பு – ருசிக்கேற்ப..செய்முறை: நெல்லிக்காயை மின்அரைவையில் அரைக்கவும். அதனுடன் இஞ்சிச்சாறு, மோர், நாட்டுச்சர்க்கரை, உப்பு சேர்த்து அடிக்கவும். இறுதியில் புதினா போட்டு ஒரு சுற்று சுற்றி பருகலாம். (இதை வடிகட்டியும் அருந்தலாம்.) வெயிலில் அலைந்த களைப்பைப் போக்கும் இம்மோர். பருகி, உடற்சூட்டைத் தணித்துக் கொள்ளுங்கள்.-செ.கலைவாணி, சேலம்.===============================.கோடைக்கேற்ற குளு குளு லஸ்ஸி!.நுங்கு லஸ்ஸி.தேவை: இளசான நுங்கு – 5, புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 3, ஐஸ் துண்டுகள், உப்பு தேவைக்கேற்ப..செய்முறை: பேரீச்சம் பழத்தை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து மிக்சியில் அரைக்கவும். நுங்கை தொல் நீக்கி அதில் சேர்த்து லேசாக ஒரு சுற்று சுற்றவும். கடைசியில் தயிரையும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அடித்து இறக்கவும்..இதை தம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை உடைத்து சேர்க்கவும். (ஐஸ் இல்லாமலும் போடலாம்) சுவையான சத்தான வெயிலுக்கேற்ற நுங்கு லஸ்ஸி ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை குடிக்கலாம் சத்தான லஸ்ஸி..===============================.பைனாப்பிள் லஸ்ஸி.தேவை: பைனாப்பிள் துண்டுகள் – 5, இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன், புளிப்பில்லாத தயிர் – 1½ கப், உப்பு – சிறிது, மிளகுத் தூள் – ½ டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, பொடியாக அரித்த மல்லித் தழை – 1 கப்..செய்முறை: பைனாப்பிளை பொடியாக அரிந்து இஞ்சி, கொத்துமல்லி, உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பின் இத்துடன் தயிர், மிளகுத் தூள், பெருங்காயம் சேர்த்து அரைபட்டதும் நீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி வடிகட்டியில் வடிகட்டவும். தம்ளர்களில் ஊற்றி ஐஸ்கட்டிகளை உடைத்துச் சேர்க்கவும். இந்த பைனாப்பிள் லஸ்ஸி வித்தியாச சுவையில் அனைவரையும் கவரும்..===============================.இளநீர் டிலைட்.தேவை: இளநீர் – 2 கப், இளநீர் வழுக்கை – 4 ஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், சர்க்கரை – ¼ கப், அரிந்த ஆப்பிள் – 6 ஸ்பூன்..செய்முறை: ஆப்பிளின் மேல் தோலை நீக்கி நன்றாக மசிக்கவும். இளநீர் வழுக்கையை சிறிது இளநீர் ஊற்றி மிக்சியில் அரைக்கவும். இத்துடன் மசித்த ஆப்பிள் , மீதியுள்ள இளநீர், தேன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி மிக்சியில் ஓட விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.உடைந்த ஐஸ்கட்டிகள் சேர்த்து கண்ணாடி தம்ளர்களில் ஊற்றி குடிக்கலாம்..===============================.தர்பூசணி கீர்.தேவை: தர்பூசணி – 2 கப், துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், புதினா இலைகள் – 2 ஸ்பூன், பாதாம் துண்டுகள் – 10, பிஸ்தா – 5, பால் – 1 கப், சர்க்கரை – 3 ஸ்பூன்..செய்முறை: பாதாம், பிஸ்தா இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து தோல் நீக்கி மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைக்கும்போதே இதில் சர்க்கரையும் சேர்க்கவும். பாலைக் கொதிக்க வைத்து, அதில் அரைத்த விழுதினைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும். தர்பூசணி விதை நீக்கி, இஞ்சி, புதினா சேர்த்து மிக்சியி்ல் ஒரு சுற்று ஓடவிட்டு வடிகட்டவும். சஇதில் பால் கலவை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எல்லாம் சேர்த்து அரைத்து கலக்கி, தம்ளரில் ஊற்றி ஐஸ்துண்டுகள் போட்டு குடிக்க குளுகுளவென இருக்கும் கீர்.-வசந்தா மாரிமுத்து, சென்னை.===============================.ஊறுகாய் வகைகள்!.ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!.தேவையானவை: பச்சை மிளகாய் – 20, எள் – 2 டீஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், ஆம்சுர் பவுடர், மஞ்சள் தூள் – தலா ½ டீஸ்பூன், கடுகு – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கு..செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் பெருங்சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பிறகு அரைத்த பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதில் சேர்க்கவும். 2,3 நாட்கள் நன்றாக ஊறவிட்டு பயன்படுத்தவும்..===============================.மிக்ஸட் காய்கறி ஊறுகாய்.தேவையானவை: கேரட், பீன்ஸ், காலிபிளவர் (தனித்தனியாக பூவாக்கியது) – தலா 1 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எ.பழம் – 2, மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு..செய்முறை: வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் எல்லா காய்கறிகளையும் போட்டு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சம் பழத் துண்டுகள் சேர்க்கவும். பிறகு எண்ணெய் விட்டு நன்றாக கலந்து, ஊற வைத்துப் பயன்படுத்தவும்.-மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்