சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி – 23.01.22.– ரேவதி பாலு.சத்குரு என்பவர் மானிடப் பிறவி எடுத்த போதிலும் தன்னுடைய உத்தமமான வாழ்க்கை முறையாலும் செயல்களாலும் தெய்வீகத்தன்மை அடையப் பெற்றவர். மனித உருவத்திற்குள் இருக்கும் களங்கங்களையெல்லாம் உதறித் தள்ளி தெய்வத்துடன் ஒன்றாகும் நிலைக்காகவே எப்போதும் ஏங்கி, தான் பிறப்பெடுத்ததைப் பற்றிய விழிப்புணர்வுடன் வாழ்பவர். ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைத்து தன் உடலை தெய்வீக நிலை அடையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துபவர். தன் உடலைக் கோவிலாகக் கருதி அதில் தன் ஆத்மாவை குடியிருக்கும் தெய்வமாக மாற்றியவர். ஆத்மஞானம் கிடைக்கப் பெற்றவரும் தன்னை உணர்ந்து கொண்டவருமான குரு, தனக்குக் கிடைத்த அத்தனை சக்திகளையும் மனித குலத்தின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்துவார். அத்தகைய சத்குருக்களில் முக்கியமானவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சித்தியடைந்த அருணை ஜோதி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்..பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலத்தில் இந்த மலையே சிவனின் அருவ ஸ்வரூபம் என்று கூறப்படுகிறது. இந்த மலையை தரிசிப்பதும், கிரிவலம் செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. இதில் ஸ்ரீ ரமண மகரிஷியும், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும் சமகாலத்தில் திருவண்ணாமலையில் வசித்து அருள் பாலித்தவர்கள். ரமண மகரிஷிகளை அவர் பாதாளலிங்கக் கோவிலில் தவம் இருந்தபோது உலகிற்கு அடையாளம் காட்டியவரும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்தான்..ஒரு பித்தனைப் போல திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை வணங்கியவர்களுக்கும், தொழுதவர்களுக்கும் அவரின் பார்வையே பல வியாதிகளை, பாதிப்புகளை அவர்களிடமிருந்து விரட்டியது. வறுமையில் உழன்றவர்களை செல்வ செழிப்பில் திளைக்க வைத்தார். தங்கக்கை சுவாமிகள் என்று பெயர் பெற்ற அவர் எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே வியாபாரம் செழித்தோங்கியது. அவர் கை பட்ட இடமெல்லாம் செல்வ வளம் தழைத்தது..திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரே கிரிவலத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர். அவர் தன்னிடம் தரிசனத்திற்காக வந்த எல்லோரையும் கிரிவலம் செய்யத் தூண்டினார். கிரிவலம் செய்பவர்கள் இந்த மலையையே பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகக் கருதி மிகுந்த பக்தி சிரத்தையுடன் வலம் வருவார்கள். நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகிய திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய வேண்டும் என்று சொன்னாலே போதுமாம்; பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடுமாம். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவர் மேல் பட்டாலே போதுமாம் அவரைப் பிடித்த அத்தனை தோஷங்களும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..கிரிவலத்தில் ஓரடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன் கிடைக்குமாம். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயோகம் தரக்கூடிய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்குமாம். நான்காவது அடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோகப் பலன்கள் கிடைக்குமாம். உலகின் உன்னதமான மலையாகிய இதை சுற்றி வந்தால் பிறவிப் பிணிகள் அனைத்தும் தீரும் என்று சேஷாத்ரி சுவாமிகள் மக்களுக்கு அறிவுறுத்தினார். இவர் காலத்திலேயே திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கிரிவலம் வருவதென்பது பல சூட்சுமமான நன்மைகளை நமக்கு அளிக்கும் என்றார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அது மட்டுமல்ல. கிரிவலப்பாதையில் அருவமாக மலையை வலம் வரும் ஏராளமான சித்தர் பெருமக்கள் நல்லாசிகளும் நமக்குக் கிடைக்கும் என்றார். "அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணசிவோம்" என்று பயபக்தியுடன் சிவநாமத்தை உச்சரித்தபடி, பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகவே விளங்கும் மலையை தரிசித்தபடி பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள்..சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சுவாமிகளின் ஜெயந்தி 23.01.22 (ஹஸ்த நட்சத்திரம்) அன்று வருகிறது. சுவாமிகள் பிறந்த ஊரான வழூரில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி தினமான 23.01.22 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் திறந்து வைக்கப்பபடுகிறது.
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி – 23.01.22.– ரேவதி பாலு.சத்குரு என்பவர் மானிடப் பிறவி எடுத்த போதிலும் தன்னுடைய உத்தமமான வாழ்க்கை முறையாலும் செயல்களாலும் தெய்வீகத்தன்மை அடையப் பெற்றவர். மனித உருவத்திற்குள் இருக்கும் களங்கங்களையெல்லாம் உதறித் தள்ளி தெய்வத்துடன் ஒன்றாகும் நிலைக்காகவே எப்போதும் ஏங்கி, தான் பிறப்பெடுத்ததைப் பற்றிய விழிப்புணர்வுடன் வாழ்பவர். ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைத்து தன் உடலை தெய்வீக நிலை அடையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துபவர். தன் உடலைக் கோவிலாகக் கருதி அதில் தன் ஆத்மாவை குடியிருக்கும் தெய்வமாக மாற்றியவர். ஆத்மஞானம் கிடைக்கப் பெற்றவரும் தன்னை உணர்ந்து கொண்டவருமான குரு, தனக்குக் கிடைத்த அத்தனை சக்திகளையும் மனித குலத்தின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்துவார். அத்தகைய சத்குருக்களில் முக்கியமானவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சித்தியடைந்த அருணை ஜோதி ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்..பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலத்தில் இந்த மலையே சிவனின் அருவ ஸ்வரூபம் என்று கூறப்படுகிறது. இந்த மலையை தரிசிப்பதும், கிரிவலம் செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. இதில் ஸ்ரீ ரமண மகரிஷியும், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும் சமகாலத்தில் திருவண்ணாமலையில் வசித்து அருள் பாலித்தவர்கள். ரமண மகரிஷிகளை அவர் பாதாளலிங்கக் கோவிலில் தவம் இருந்தபோது உலகிற்கு அடையாளம் காட்டியவரும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்தான்..ஒரு பித்தனைப் போல திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை வணங்கியவர்களுக்கும், தொழுதவர்களுக்கும் அவரின் பார்வையே பல வியாதிகளை, பாதிப்புகளை அவர்களிடமிருந்து விரட்டியது. வறுமையில் உழன்றவர்களை செல்வ செழிப்பில் திளைக்க வைத்தார். தங்கக்கை சுவாமிகள் என்று பெயர் பெற்ற அவர் எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே வியாபாரம் செழித்தோங்கியது. அவர் கை பட்ட இடமெல்லாம் செல்வ வளம் தழைத்தது..திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரே கிரிவலத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர். அவர் தன்னிடம் தரிசனத்திற்காக வந்த எல்லோரையும் கிரிவலம் செய்யத் தூண்டினார். கிரிவலம் செய்பவர்கள் இந்த மலையையே பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகக் கருதி மிகுந்த பக்தி சிரத்தையுடன் வலம் வருவார்கள். நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகிய திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய வேண்டும் என்று சொன்னாலே போதுமாம்; பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடுமாம். கிரிவலம் வருபவர்களின் காலடி தூசு ஒருவர் மேல் பட்டாலே போதுமாம் அவரைப் பிடித்த அத்தனை தோஷங்களும் நீங்கி விடும் என்று அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..கிரிவலத்தில் ஓரடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலன் கிடைக்குமாம். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயோகம் தரக்கூடிய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மூன்றடி எடுத்து வைத்தால் தானம் செய்த பலன் கிடைக்குமாம். நான்காவது அடி எடுத்து வைத்தால் அஷ்டாங்க யோகப் பலன்கள் கிடைக்குமாம். உலகின் உன்னதமான மலையாகிய இதை சுற்றி வந்தால் பிறவிப் பிணிகள் அனைத்தும் தீரும் என்று சேஷாத்ரி சுவாமிகள் மக்களுக்கு அறிவுறுத்தினார். இவர் காலத்திலேயே திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கிரிவலம் வருவதென்பது பல சூட்சுமமான நன்மைகளை நமக்கு அளிக்கும் என்றார் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அது மட்டுமல்ல. கிரிவலப்பாதையில் அருவமாக மலையை வலம் வரும் ஏராளமான சித்தர் பெருமக்கள் நல்லாசிகளும் நமக்குக் கிடைக்கும் என்றார். "அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணசிவோம்" என்று பயபக்தியுடன் சிவநாமத்தை உச்சரித்தபடி, பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபமாகவே விளங்கும் மலையை தரிசித்தபடி பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள்..சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சுவாமிகளின் ஜெயந்தி 23.01.22 (ஹஸ்த நட்சத்திரம்) அன்று வருகிறது. சுவாமிகள் பிறந்த ஊரான வழூரில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி தினமான 23.01.22 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் திறந்து வைக்கப்பபடுகிறது.