-லதானந்த்.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி, பலருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொடுத்து அசத்தி வருகிறார். அவர்தான் ஹேமலதா அண்ணாமலை. மின்சாரத்தால் வாகனங்களை உற்பத்தி செய்யும் அவரது நிறுவனத்தின் பெயர், 'Ampere Vehicles'..தொழில்முறை சேவைகள், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிற்சியளித்தல் மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகியவற்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் அளிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது கவனம் கிராமப்புற மக்களின் மேம்பாடு நோக்கியதாகவே இருந்துவருகிறது..'தி இண்டஸ் என்டர்ப்ருனர்ஸ்' (The Indus Entrepreneurs) என்ற தன்னார்வ நிறுவனம் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஓர் அமைப்பு ஆகும். அதன் குளோபல் சேர் (Global Chair) பொறுப்பையும் ஹேமலதா வகிக்கிறார். அந்த அமைப்பின் கோயமுத்தூருக்கான தலைவரும் இவரே. சிங்கப்பூரில் இயங்கிவரும் 'யூனி கனெக்ட்' அமைப்பின் நிறுவனரும் ஹேமலதாதான்!.இவர் கோயமுத்தூரில் இருக்கும் கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில், கணினிப் பொறியியல் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவில் உள்ள 'ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில்' MBA பட்டமும் பெற்றவர்..இவருடைய சரியான வயது என்ன என்பதை இவர் வெளியிடவே மாட்டார். யாராவது அவரிடம் இது பற்றிக் கேட்டால் ஐம்பதுக்கு மேல் எனப் புன்முறுவலுடன் மழுப்பிவிடுவார். இவர் ரகசியமாக வைத்திருப்பது எந்தெந்த வழிகளில் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதற்கு இவர் வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றியும்தான்!.ஏற்கெனவே ஒரு சிங்கப்பூர் நிறுவனம் உட்பட பலவற்றில் பணிபுரிந்திருந்தாலும், மென்பொருள் விற்பனையிலும், சங்கேதக் குறியீடுகள் எழுதுவதிலும் தாம் அயர்ச்சி அடைந்ததாலேயே இப்படி ஒரு மின் வாகனச் சந்தைக்கு வந்ததாக ஹேமலதா அடிக்கடி குறிப்பிடுவார்..இவரது ஆம்பியர் நிறுவனம் கோவையைத் தளமாகக் கொண்டது; 2008ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு ரட்டன் டாடா மற்றும் இன்ஃபோஸிஸ் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்..இவர்களின் தயாரிப்பான எலக்ட்ரிக் சைக்கிளில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதை பேட்டரி மூலமும் இயக்கலாம்; அல்லது சாதாரண சைக்கிள்களை ஓட்டுவதுபோல பெடலை அழுத்தியும் ஓட்டலாம்..மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாது மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின் வாகனங்களையும் உருவாக்கியுள்ளார்..இந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஹேமசந்திர ஜாவேரி, "நாங்கள் ஹேமாவை நம்புகிறோம்; மின்சாரத்தால் இயங்கும் வாகனச் சந்தை வணிகத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அவர் குறைந்த விலையில் மக்கள் வாங்கும்படியாக வாகனங்களை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைத் தன் உறுதியான லட்சியமாகக் கொண்டிருக்கிறார்" என்கிறார்..இவரது கணவர் பாலா பச்சையப்பா, ஆம்பியர் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவராகப் பணியாற்றுகிறார்..ஆண்டொன்றுக்கு ஆம்பியர் நிறுவனம் 60,000 வாகனங்களை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் பெண்களின் பயன் பாட்டுக்கெனவே மின்சாரத்தால் இயங்கும் 'திரிசூல்' என்ற மூன்று சக்கர வாகனத்தையும் உற்பத்தி செய்கிறது ஆம்பியர் நிறுவனம்.சரக்குகளைச் சுமந்து செல்லவும், கழிவுகளை அகற்றும் பணிக்கெனவும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இவர்களது குறிக்கோள் கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போரும் – குறிப்பாக நடுத்தர மக்களும் – எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்கள் வாகனங்கள் இருக்கவேண்டும் என்பதே!.இவரது நிறுவனங்களில் தற்போது 30% பெணகள் பணியாற்றுகின்றர். படிப்படியாகப் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 80% ஆக்க வேண்டும் என்பது இவரது இலக்கு. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது, நடுத்தர மக்களும் எளிதாக வாங்கக்கூடிய வகையில் வாகனங்களை உற்பத்தி செய்வது என்ற இரு பெரும் நோக்கங்களையும் ஒன்றாக இணைத்து முன்னேறிவரும் தமிழ்நாட்டுத் தாரகை ஹேமலாதா அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
-லதானந்த்.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி, பலருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொடுத்து அசத்தி வருகிறார். அவர்தான் ஹேமலதா அண்ணாமலை. மின்சாரத்தால் வாகனங்களை உற்பத்தி செய்யும் அவரது நிறுவனத்தின் பெயர், 'Ampere Vehicles'..தொழில்முறை சேவைகள், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிற்சியளித்தல் மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகியவற்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் அளிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவரது கவனம் கிராமப்புற மக்களின் மேம்பாடு நோக்கியதாகவே இருந்துவருகிறது..'தி இண்டஸ் என்டர்ப்ருனர்ஸ்' (The Indus Entrepreneurs) என்ற தன்னார்வ நிறுவனம் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஓர் அமைப்பு ஆகும். அதன் குளோபல் சேர் (Global Chair) பொறுப்பையும் ஹேமலதா வகிக்கிறார். அந்த அமைப்பின் கோயமுத்தூருக்கான தலைவரும் இவரே. சிங்கப்பூரில் இயங்கிவரும் 'யூனி கனெக்ட்' அமைப்பின் நிறுவனரும் ஹேமலதாதான்!.இவர் கோயமுத்தூரில் இருக்கும் கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில், கணினிப் பொறியியல் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவில் உள்ள 'ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில்' MBA பட்டமும் பெற்றவர்..இவருடைய சரியான வயது என்ன என்பதை இவர் வெளியிடவே மாட்டார். யாராவது அவரிடம் இது பற்றிக் கேட்டால் ஐம்பதுக்கு மேல் எனப் புன்முறுவலுடன் மழுப்பிவிடுவார். இவர் ரகசியமாக வைத்திருப்பது எந்தெந்த வழிகளில் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதற்கு இவர் வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றியும்தான்!.ஏற்கெனவே ஒரு சிங்கப்பூர் நிறுவனம் உட்பட பலவற்றில் பணிபுரிந்திருந்தாலும், மென்பொருள் விற்பனையிலும், சங்கேதக் குறியீடுகள் எழுதுவதிலும் தாம் அயர்ச்சி அடைந்ததாலேயே இப்படி ஒரு மின் வாகனச் சந்தைக்கு வந்ததாக ஹேமலதா அடிக்கடி குறிப்பிடுவார்..இவரது ஆம்பியர் நிறுவனம் கோவையைத் தளமாகக் கொண்டது; 2008ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு ரட்டன் டாடா மற்றும் இன்ஃபோஸிஸ் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்..இவர்களின் தயாரிப்பான எலக்ட்ரிக் சைக்கிளில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதை பேட்டரி மூலமும் இயக்கலாம்; அல்லது சாதாரண சைக்கிள்களை ஓட்டுவதுபோல பெடலை அழுத்தியும் ஓட்டலாம்..மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாது மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின் வாகனங்களையும் உருவாக்கியுள்ளார்..இந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஹேமசந்திர ஜாவேரி, "நாங்கள் ஹேமாவை நம்புகிறோம்; மின்சாரத்தால் இயங்கும் வாகனச் சந்தை வணிகத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அவர் குறைந்த விலையில் மக்கள் வாங்கும்படியாக வாகனங்களை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைத் தன் உறுதியான லட்சியமாகக் கொண்டிருக்கிறார்" என்கிறார்..இவரது கணவர் பாலா பச்சையப்பா, ஆம்பியர் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவராகப் பணியாற்றுகிறார்..ஆண்டொன்றுக்கு ஆம்பியர் நிறுவனம் 60,000 வாகனங்களை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் பெண்களின் பயன் பாட்டுக்கெனவே மின்சாரத்தால் இயங்கும் 'திரிசூல்' என்ற மூன்று சக்கர வாகனத்தையும் உற்பத்தி செய்கிறது ஆம்பியர் நிறுவனம்.சரக்குகளைச் சுமந்து செல்லவும், கழிவுகளை அகற்றும் பணிக்கெனவும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இவர்களது குறிக்கோள் கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போரும் – குறிப்பாக நடுத்தர மக்களும் – எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்கள் வாகனங்கள் இருக்கவேண்டும் என்பதே!.இவரது நிறுவனங்களில் தற்போது 30% பெணகள் பணியாற்றுகின்றர். படிப்படியாகப் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 80% ஆக்க வேண்டும் என்பது இவரது இலக்கு. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது, நடுத்தர மக்களும் எளிதாக வாங்கக்கூடிய வகையில் வாகனங்களை உற்பத்தி செய்வது என்ற இரு பெரும் நோக்கங்களையும் ஒன்றாக இணைத்து முன்னேறிவரும் தமிழ்நாட்டுத் தாரகை ஹேமலாதா அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!