– ஆர். மீனலதா, மும்பை ."வெற்றிவேல் முருகனுக்கு அர கரோ கரா!" ஏழாவது படை வீடாக மும்பை செம்பூர் செட்டாநகரில் முருகப் பெருமான் குடியமர்ந்துள்ள சுவாரசியமான விபரம் பின்வருமாறு:-.1945 ஆம் ஆண்டு மாட்டுங்கா பகுதியில், சுப்பிரமணிய சமாஜம் என்கிற அமைப்பினை முருக பக்தி கொண்ட சில மும்பை வாழ்த் தமிழர்கள் ஆரம்பித்து முருகன் படம், வேல் வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிதென்பது போல, தைப்பூசம், கந்தசஷ்டி விழா, திரு கிருபானந்த வாரியார் உபந்நியாசமென அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனிக்கோவில் அமைக்க, பல வருடங்களாக இடம் தேடியும் கிடைக்கவில்லை..பின்னர், செம்பூர் செட்டா நகரில் காடு மாதிரியிருந்த ஒரு இடம் விலைக்கு வர, அதை வாங்கலாமென எண்ணி ஆருடம் பார்க்கப்பட்டது..அப்போது, ஒரு காலத்தில் வனாந்திரமாக இருந்த இந்த இடத்தில் மகரிஷிகள் பலர் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவை பக்தியுடன் நினைத்து தவம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, நிதி திரட்டும் வேலையும் ஆரம்பமானது..வீடுகள்தோறும் சிறு உண்டியலைக் கொடுத்து, மாதா மாதம் அதை திரும்ப வாங்கி வருவார்கள். ஒவ்வோரு உண்டியலிலும் ரூபாய் 20/- 30/- 50/- என்று இருக்கும். போகப் போக நிதிகளும் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், மகாபலிபுரம், வாலஜாபாத் போன்ற இடங்களிலிருந்து 800 டன் Blue Granite கற்கள் ஸ்பெஷலாக செதுக்கி வரவழைக்கப்பட்டன. குமரேச சாஸ்திரிகள் மேற்பார்வையில், பாரம்பரியம் மற்றும் மாடர்ன் கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு முதலில் "பாலாலயம்" பின்னர் "மூலாலயம்" கட்டப்பட்டன..ஆகம விதிப்படி 51 அடி உயரத்திற்கு மேலே முருகன் ஸ்தலமும், அதற்கு மேல் 26 அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டது கோவில்..இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், கோயிலின் ஆர்க்கிடெக்ட் கிறித்துவர் C.S.K. Raj மற்றும் கட்டடத்தை அமைத்தவர் இஸ்லாமிய முகமதியரான அப்பாஸ் ஐஸ்டன் ஆகியோர் செயல்பட்டது இறையருளே..108 படிகளின் வழியாக ஏறிச் செல்கையில், அதன் இருபக்கச் சுவர்களிலும், அஷ்டகணபதி, கந்தபுராணம் போன்ற புராணக் கதைகளைக் கூறும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும்..மேல்தளத்தை அடைந்தவுடன், கண்ணெதிரே உடலும், உள்ளமும் பக்திப் பெருக்கில் சிலிர்க்கச் செய்யும் வண்ணம், வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமேதராக காட்சியளித்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்..145 அடி உயரத்தில் தகடதகவென மின்னும் தங்க ரதமும், 4 அடி உயரத்தில் 51 காரட் வைரம் பதித்த வேலும் இக்கோயிலில் இருப்பது போற்றுதற்குரிய விஷயமாகும்..சமாஜத்தின் 75ஆவது வருடம் இது. செயலர் பதவியில் தொடர்ந்து, 60 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி வரும் தி.பி.எஸ்,.சுப்பிரமணிய மாமாவின் சேவை மகத்தானது..அபிஷேகம், ஆராதனை, விழாக்கள் பல்வேறு வகை பூஜைகள் என அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன..கல்யாண மண்டபங்களும், கோயிலின் மறுபகுதியில் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன..கோயிலின் முதல் மகா கும்பாபிஷேகம் 1980 ஜனவரி 24 அன்று காஞ்சிப் பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதன் 5ஆவது மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 6 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதற்கென அறுபடை வீடுகளிலிருந்து சிவாச்சாரி்யார்களும், கேரளத்தில் பிரசித்தி பெற்ற தாந்தீரிகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். யாகசாலையில் ஆறுகால பூஜைகள் நடத்தப்பட்டன..மாலையில் கலை நிகழ்வுகள் அருமையாக நடைபெற்றன..மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, இறைவனை தரிசித்தால், நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததற்கு சமமென புராண நூல்கள் தெரிவிக்கின்றன.."கீழைக் கடற்கரையில் திருச்செந்தூர்!.மேலைக் கடற்கரையில் திருச்செம்பூர்!".ஓம் சரவண பவ!
– ஆர். மீனலதா, மும்பை ."வெற்றிவேல் முருகனுக்கு அர கரோ கரா!" ஏழாவது படை வீடாக மும்பை செம்பூர் செட்டாநகரில் முருகப் பெருமான் குடியமர்ந்துள்ள சுவாரசியமான விபரம் பின்வருமாறு:-.1945 ஆம் ஆண்டு மாட்டுங்கா பகுதியில், சுப்பிரமணிய சமாஜம் என்கிற அமைப்பினை முருக பக்தி கொண்ட சில மும்பை வாழ்த் தமிழர்கள் ஆரம்பித்து முருகன் படம், வேல் வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிதென்பது போல, தைப்பூசம், கந்தசஷ்டி விழா, திரு கிருபானந்த வாரியார் உபந்நியாசமென அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்க்கடவுள் முருகனுக்கு தனிக்கோவில் அமைக்க, பல வருடங்களாக இடம் தேடியும் கிடைக்கவில்லை..பின்னர், செம்பூர் செட்டா நகரில் காடு மாதிரியிருந்த ஒரு இடம் விலைக்கு வர, அதை வாங்கலாமென எண்ணி ஆருடம் பார்க்கப்பட்டது..அப்போது, ஒரு காலத்தில் வனாந்திரமாக இருந்த இந்த இடத்தில் மகரிஷிகள் பலர் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவை பக்தியுடன் நினைத்து தவம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, நிதி திரட்டும் வேலையும் ஆரம்பமானது..வீடுகள்தோறும் சிறு உண்டியலைக் கொடுத்து, மாதா மாதம் அதை திரும்ப வாங்கி வருவார்கள். ஒவ்வோரு உண்டியலிலும் ரூபாய் 20/- 30/- 50/- என்று இருக்கும். போகப் போக நிதிகளும் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், மகாபலிபுரம், வாலஜாபாத் போன்ற இடங்களிலிருந்து 800 டன் Blue Granite கற்கள் ஸ்பெஷலாக செதுக்கி வரவழைக்கப்பட்டன. குமரேச சாஸ்திரிகள் மேற்பார்வையில், பாரம்பரியம் மற்றும் மாடர்ன் கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு முதலில் "பாலாலயம்" பின்னர் "மூலாலயம்" கட்டப்பட்டன..ஆகம விதிப்படி 51 அடி உயரத்திற்கு மேலே முருகன் ஸ்தலமும், அதற்கு மேல் 26 அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டது கோவில்..இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், கோயிலின் ஆர்க்கிடெக்ட் கிறித்துவர் C.S.K. Raj மற்றும் கட்டடத்தை அமைத்தவர் இஸ்லாமிய முகமதியரான அப்பாஸ் ஐஸ்டன் ஆகியோர் செயல்பட்டது இறையருளே..108 படிகளின் வழியாக ஏறிச் செல்கையில், அதன் இருபக்கச் சுவர்களிலும், அஷ்டகணபதி, கந்தபுராணம் போன்ற புராணக் கதைகளைக் கூறும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும்..மேல்தளத்தை அடைந்தவுடன், கண்ணெதிரே உடலும், உள்ளமும் பக்திப் பெருக்கில் சிலிர்க்கச் செய்யும் வண்ணம், வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமேதராக காட்சியளித்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்..145 அடி உயரத்தில் தகடதகவென மின்னும் தங்க ரதமும், 4 அடி உயரத்தில் 51 காரட் வைரம் பதித்த வேலும் இக்கோயிலில் இருப்பது போற்றுதற்குரிய விஷயமாகும்..சமாஜத்தின் 75ஆவது வருடம் இது. செயலர் பதவியில் தொடர்ந்து, 60 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி வரும் தி.பி.எஸ்,.சுப்பிரமணிய மாமாவின் சேவை மகத்தானது..அபிஷேகம், ஆராதனை, விழாக்கள் பல்வேறு வகை பூஜைகள் என அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன..கல்யாண மண்டபங்களும், கோயிலின் மறுபகுதியில் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன..கோயிலின் முதல் மகா கும்பாபிஷேகம் 1980 ஜனவரி 24 அன்று காஞ்சிப் பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதன் 5ஆவது மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 6 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதற்கென அறுபடை வீடுகளிலிருந்து சிவாச்சாரி்யார்களும், கேரளத்தில் பிரசித்தி பெற்ற தாந்தீரிகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். யாகசாலையில் ஆறுகால பூஜைகள் நடத்தப்பட்டன..மாலையில் கலை நிகழ்வுகள் அருமையாக நடைபெற்றன..மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, இறைவனை தரிசித்தால், நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததற்கு சமமென புராண நூல்கள் தெரிவிக்கின்றன.."கீழைக் கடற்கரையில் திருச்செந்தூர்!.மேலைக் கடற்கரையில் திருச்செம்பூர்!".ஓம் சரவண பவ!