-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.முதலில் ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்….எறும்பும் வெட்டுக்கிளியும்.கோடை காலத்தில் , தானியங்கள் எளிதாக கிடைப்பதால் வெட்டு கிளியானது ஆடிப்பாடி உல்லாசமாக வாழ்ந்து வருகிறது. ஆனால், எறும்பு மழை காலத்திற்கு தேவையான தானியங்களை கோடை காலத்திலேயே சேமித்து வைக்கிறது. மழை காலம் வந்த போது, எறும்பானது எந்த ஒரு கவலையும் இன்றி சேமித்த தானியங்களைக் கொண்டு தனது வாழ்க்கையையே வாழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியான வாழ்க்கையை அடைகிறது. ஆனால் வெட்டுகிளியோ, மழைகாலத்தில் தான் வாழ்வதற்கான தானியங்கள் சேமிக்காதபடியால், தானியங்கள் இன்றி நொந்து நூலாகிப் போய் எறும்பிடம் வந்து கையேந்தி நிற்கிறது..உழைக்கும் காலத்திலேயே, எதிர்காலத்திற்காக சேமிக்கும் அவசியத்தை எறும்பின் சேமிப்பின் மூலம், வெட்டுக்கிளி உணர்கிறது..இதனை ஆங்கிலத்தில் 'save for the rainy day' என்று கூறுவார்கள். அதாவது மழை காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று கூறுவார்கள்..எறும்பும் மனிதனும் ஒரு ஒப்பீடு.தேவை: எறும்புக்கு தேவை என்பது உணவு மட்டுமே. அது மண்ணிலோ அல்லது வேறு எங்காவதோ இருப்பிடத்தை அமைத்துக் கொள்ள முடியும். உடை என்ற தேவை இல்லை. எறும்புக்கு தேவைகள் குறைவு..மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் அடிப்படையாகத் தேவைப்படுகின்றன. இவை மட்டுமன்றி, மனிதனுக்கு போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், தொலைதொடர்பு, இணையம், காப்பீடு என்று அத்தியாவசியத் தேவைகள் அதிகமாகி விட்டன. மனிதனுக்கு தேவைகள் அதிகம்..தேவைக்கும் இருப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லது பற்றாக்குறை..வேலைக்கார எறும்பு வாழ்நாளில் (ஒரு வருடத்தில்), தானியங்களின் பற்றாக்குறை காலமான, மழைக்காலத்தினை ஒரு முறை மட்டுமே சந்திக்கிறது..மனிதன் தனது வாழ்நாளில், பணப்பற்றாக்குறை காலங்களைப் பலவிதங்களில் சந்திக்க நேரலாம்..அவசர காலத் தேவைகள்: வீட்டில் திடீர் மராமத்து வேலைகள், வீட்டில் வாகனம் பழுதடைந்தல், வீட்டில் ஏதேனும் ஒரு நபர் நோய்வாய்ப்படுதல், வீட்டில் சம்பாதிக்கும் நபர் திடீரென வேலை இழப்பு போன்ற சமயங்களில் மனிதனிடம் பணப் பற்றாக்குறை உள்ளது. எனவே அவசர கால நிதியை சேமிக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் மாத சம்பளத்தை விட அதிகமான பணம் தேவைப்படும். ஏற்கனவே சேமிக்க வில்லை என்றால் , இந்த காலத்தில் பிறரிடம் கையேந்தி கடன் என்னும் கொடிய அரக்கனிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்.அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாகனம் வாங்குதல்: ஒரு மனிதனால் அவனுடைய மாத சம்பளத்தில் சேமிப்பு இன்றி வீடு, வாகனம் வாங்க முடியாது. ஏனென்றால் அதற்கு தேவைப்படும் பணம் அதிகம். எனவே பணத்தை சேமித்த பின்னரே வீடோ, வாகனமோ வாங்க முடியும். வாகனமாவது பணத்தை சேமித்து வாங்க முடியும். வீடு போன்ற மிகப் பெரிய செலவுக்கு கடன் வாங்கத்தான் வேண்டும். அந்தக் கடனை மாதாமாதம் அடைக்க அல்லது முன்கூட்டியே அடைக்க பணத்தை சேமித்து தான் ஆக வேண்டும். எனவே பண சேமிப்பு இன்றி வீடோ வாகனமோ வாங்க இயலாது.குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு மற்றும் திருமணத்திற்கான செலவுகள்: குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மேல் படிப்பு படிப்பதற்கு மற்றும் திருமணத்திற்கு அதிகமாக பணம் தேவைப்படும். அதற்கு முன்கூட்டியே சேமித்து வைத்தால் தான் அத்தகைய பெரிய செலவுகளை நம்மால் கையாள முடியும்.குடும்பத்தின் இனிய வாழ்க்கைத் தேவைகள்: குடும்பத்துடன் தொலை தூரங்களுக்கு சுற்றுலா, குடும்பத்தின் பெரிய உபகரண தேவைகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவைப்படும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் என்று எந்த ஒரு பெரிய செலவுக்கும் பணம் சேமித்த பின்னரே நம்மால் அனுபவிக்க முடியும். பணம் சேமிப்பு இல்லையேல், இதற்கெல்லாம் நாம் கடன் வாங்கத்தான் வேண்டும். கடனும் குடும்பத்தின் இனிய வாழ்க்கையும் எதிர்மறையானவை. கடன் வாங்கினால், நமது குடும்பத்தில் நிம்மதி குறைந்து விடும்.ஓய்வு காலத்தில் தனிமனித நிதி சுதந்திரம்: ஓய்வு காலத்தில் நம்மால் சம்பாதிக்க முடியாது. நமக்கு பண வரவு கிடையாது. எனவே சம்பாதிக்கும் காலத்திலேயே பணத்தினை சேமித்து வைத்தால்தான் அது ஓய்வு காலத்தில் நமக்கு உதவும். பணம் சேமிக்கவில்லை என்றால் ஓய்வு காலத்தில் பிறர் கையை ஏந்த நேரிடும். கடன் ஓய்வுகாலத்தின் நிம்மதியைக் குறைக்கும். மேலும் ஓய்வு காலத்தில் நம்மால் சம்பாதிப்பதற்கு போதிய வலிவும் உடலில் இருக்காது. சேமிக்கவில்லையென்றால், வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க நிர்பந்திக்கப்படும் நிலை வரலாம். அது மன உளைச்சலை ஏற்படுத்தும்..எனவே, தேவை குறைவாகவும், பற்றாக்குறையை வாழ்வில் ஒரே ஒரு முறை சந்திக்கும் எறும்பே சேமிக்கும் போது, தேவைகள் அதிகமாகவும், பணப்பற்றாக்குறை வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைகள் அதிகமாகவும் உள்ள மனிதன் கண்டிப்பாக பணத்தை சேமிக்க வேண்டும். இல்லையேல், வெட்டுக்கிளியைப் போல், பொருள் பற்றாக்குறை காலத்தில் பிறரிடம் கையேந்த நேரிடும். கடன் என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்..ஆனால், மனிதனுக்கு சேமிப்பு மட்டும் போதாது. பணவீக்கத்தினை சமாளிக்க முதலீடும் வேண்டும். .பணவீக்கம்.எறும்பிற்கு பணவீக்க பிரச்னை கிடையாது..மனிதனுக்கு பணவீக்கப் பிரச்சனை உண்டு. பணவீக்கத்தினால், ஒரே செலவின் மதிப்பு வருடா வருடம் கூடும். சேமித்த பணம், பணவீக்கத்தின் காரணமாக மதிப்பு குறைந்து விடும். எனவே சேமிப்பு மட்டும் போதாது. முதலீடும் வேண்டும்..உதாரணமாக, 1980ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு, சென்னையில் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு மனை வாங்க முடியும். 2020ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு , கோடம்பாக்கத்தில் ஒரு மாத வீட்டு வாடகை மட்டுமே செலுத்த முடியும். இது பணவீக்கத்தின் கோரமுகம்..சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம்.1980ம் ஆண்டு முதல் வருடா வருடம், ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார் என்று கொள்வோம். 2020ம் ஆண்டு, அவரிடம் 4 லட்ச ரூபாய் பணம் இருக்கும்.இதற்கு மாறாக, அதே பணத்தை, வங்கியில் தொடர் வைப்பு நிதியில், வருடாவருடம் சராசரியாக 8% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், கிட்டத்தட்ட 31 லட்சமாக வளர்ந்திருக்கும்..எனவே, முதலீட்டின் மூலமே பணத்தைப் பெருக்க முடியும்..குறிக்கோளுக்கு ஏற்ற முதலீடு .எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு..பணத்தை இழக்கும் அபாயம்(risk)பணம் வளரும் விகிதம்(rate of return)பணத்தின் நீர்ப்புத் தன்மை (liquidity)-.எந்த ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் போதும், அது குறிக்கோளினை சார்ந்து அமைய வேண்டும். நமது குறிக்கோளின் கால வரையறைக்கு முதலீட்டின் கூறுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்று பார்க்க வேண்டும்..குறுகியகால குறிக்கோள்களுக்கு(3-5 வருடங்கள்) பங்கு சந்தை முதலீடுகள் ஆபத்தானவை. குறுகிய கால குறிக்கோள்களுக்கு வங்கி வைப்பு நிதிகள் சிறப்பானவை.நடுத்தர கால குறிக்கோள்களுக்கு(5-10 வருடங்கள்) அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் வங்கி வைப்பு நிதிகள் சேர்ந்த முதலீட்டுக் கலவை சிறப்பானது.நீண்டகால குறிக்கோள்களுக்கு(10 வருடங்களுக்கு மேல்) பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. நீண்டகால குறிக்கோள்களுக்கு வங்கி முதலீடுகளால் பணவீக்கத்தை சமாளிக்க முடியாது..எறும்பிடம் இருந்து மனிதன், உழைப்பையும் சேமிப்பையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் அவற்றோடு நின்றுவிடாமல் சேமிப்பினை முதலீடாக மாற்றி பணப் பெருக்கத்தை செய்து பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும்.
-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.முதலில் ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்….எறும்பும் வெட்டுக்கிளியும்.கோடை காலத்தில் , தானியங்கள் எளிதாக கிடைப்பதால் வெட்டு கிளியானது ஆடிப்பாடி உல்லாசமாக வாழ்ந்து வருகிறது. ஆனால், எறும்பு மழை காலத்திற்கு தேவையான தானியங்களை கோடை காலத்திலேயே சேமித்து வைக்கிறது. மழை காலம் வந்த போது, எறும்பானது எந்த ஒரு கவலையும் இன்றி சேமித்த தானியங்களைக் கொண்டு தனது வாழ்க்கையையே வாழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியான வாழ்க்கையை அடைகிறது. ஆனால் வெட்டுகிளியோ, மழைகாலத்தில் தான் வாழ்வதற்கான தானியங்கள் சேமிக்காதபடியால், தானியங்கள் இன்றி நொந்து நூலாகிப் போய் எறும்பிடம் வந்து கையேந்தி நிற்கிறது..உழைக்கும் காலத்திலேயே, எதிர்காலத்திற்காக சேமிக்கும் அவசியத்தை எறும்பின் சேமிப்பின் மூலம், வெட்டுக்கிளி உணர்கிறது..இதனை ஆங்கிலத்தில் 'save for the rainy day' என்று கூறுவார்கள். அதாவது மழை காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று கூறுவார்கள்..எறும்பும் மனிதனும் ஒரு ஒப்பீடு.தேவை: எறும்புக்கு தேவை என்பது உணவு மட்டுமே. அது மண்ணிலோ அல்லது வேறு எங்காவதோ இருப்பிடத்தை அமைத்துக் கொள்ள முடியும். உடை என்ற தேவை இல்லை. எறும்புக்கு தேவைகள் குறைவு..மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் அடிப்படையாகத் தேவைப்படுகின்றன. இவை மட்டுமன்றி, மனிதனுக்கு போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், தொலைதொடர்பு, இணையம், காப்பீடு என்று அத்தியாவசியத் தேவைகள் அதிகமாகி விட்டன. மனிதனுக்கு தேவைகள் அதிகம்..தேவைக்கும் இருப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லது பற்றாக்குறை..வேலைக்கார எறும்பு வாழ்நாளில் (ஒரு வருடத்தில்), தானியங்களின் பற்றாக்குறை காலமான, மழைக்காலத்தினை ஒரு முறை மட்டுமே சந்திக்கிறது..மனிதன் தனது வாழ்நாளில், பணப்பற்றாக்குறை காலங்களைப் பலவிதங்களில் சந்திக்க நேரலாம்..அவசர காலத் தேவைகள்: வீட்டில் திடீர் மராமத்து வேலைகள், வீட்டில் வாகனம் பழுதடைந்தல், வீட்டில் ஏதேனும் ஒரு நபர் நோய்வாய்ப்படுதல், வீட்டில் சம்பாதிக்கும் நபர் திடீரென வேலை இழப்பு போன்ற சமயங்களில் மனிதனிடம் பணப் பற்றாக்குறை உள்ளது. எனவே அவசர கால நிதியை சேமிக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் மாத சம்பளத்தை விட அதிகமான பணம் தேவைப்படும். ஏற்கனவே சேமிக்க வில்லை என்றால் , இந்த காலத்தில் பிறரிடம் கையேந்தி கடன் என்னும் கொடிய அரக்கனிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்.அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாகனம் வாங்குதல்: ஒரு மனிதனால் அவனுடைய மாத சம்பளத்தில் சேமிப்பு இன்றி வீடு, வாகனம் வாங்க முடியாது. ஏனென்றால் அதற்கு தேவைப்படும் பணம் அதிகம். எனவே பணத்தை சேமித்த பின்னரே வீடோ, வாகனமோ வாங்க முடியும். வாகனமாவது பணத்தை சேமித்து வாங்க முடியும். வீடு போன்ற மிகப் பெரிய செலவுக்கு கடன் வாங்கத்தான் வேண்டும். அந்தக் கடனை மாதாமாதம் அடைக்க அல்லது முன்கூட்டியே அடைக்க பணத்தை சேமித்து தான் ஆக வேண்டும். எனவே பண சேமிப்பு இன்றி வீடோ வாகனமோ வாங்க இயலாது.குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்பு மற்றும் திருமணத்திற்கான செலவுகள்: குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மேல் படிப்பு படிப்பதற்கு மற்றும் திருமணத்திற்கு அதிகமாக பணம் தேவைப்படும். அதற்கு முன்கூட்டியே சேமித்து வைத்தால் தான் அத்தகைய பெரிய செலவுகளை நம்மால் கையாள முடியும்.குடும்பத்தின் இனிய வாழ்க்கைத் தேவைகள்: குடும்பத்துடன் தொலை தூரங்களுக்கு சுற்றுலா, குடும்பத்தின் பெரிய உபகரண தேவைகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவைப்படும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் என்று எந்த ஒரு பெரிய செலவுக்கும் பணம் சேமித்த பின்னரே நம்மால் அனுபவிக்க முடியும். பணம் சேமிப்பு இல்லையேல், இதற்கெல்லாம் நாம் கடன் வாங்கத்தான் வேண்டும். கடனும் குடும்பத்தின் இனிய வாழ்க்கையும் எதிர்மறையானவை. கடன் வாங்கினால், நமது குடும்பத்தில் நிம்மதி குறைந்து விடும்.ஓய்வு காலத்தில் தனிமனித நிதி சுதந்திரம்: ஓய்வு காலத்தில் நம்மால் சம்பாதிக்க முடியாது. நமக்கு பண வரவு கிடையாது. எனவே சம்பாதிக்கும் காலத்திலேயே பணத்தினை சேமித்து வைத்தால்தான் அது ஓய்வு காலத்தில் நமக்கு உதவும். பணம் சேமிக்கவில்லை என்றால் ஓய்வு காலத்தில் பிறர் கையை ஏந்த நேரிடும். கடன் ஓய்வுகாலத்தின் நிம்மதியைக் குறைக்கும். மேலும் ஓய்வு காலத்தில் நம்மால் சம்பாதிப்பதற்கு போதிய வலிவும் உடலில் இருக்காது. சேமிக்கவில்லையென்றால், வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க நிர்பந்திக்கப்படும் நிலை வரலாம். அது மன உளைச்சலை ஏற்படுத்தும்..எனவே, தேவை குறைவாகவும், பற்றாக்குறையை வாழ்வில் ஒரே ஒரு முறை சந்திக்கும் எறும்பே சேமிக்கும் போது, தேவைகள் அதிகமாகவும், பணப்பற்றாக்குறை வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைகள் அதிகமாகவும் உள்ள மனிதன் கண்டிப்பாக பணத்தை சேமிக்க வேண்டும். இல்லையேல், வெட்டுக்கிளியைப் போல், பொருள் பற்றாக்குறை காலத்தில் பிறரிடம் கையேந்த நேரிடும். கடன் என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்..ஆனால், மனிதனுக்கு சேமிப்பு மட்டும் போதாது. பணவீக்கத்தினை சமாளிக்க முதலீடும் வேண்டும். .பணவீக்கம்.எறும்பிற்கு பணவீக்க பிரச்னை கிடையாது..மனிதனுக்கு பணவீக்கப் பிரச்சனை உண்டு. பணவீக்கத்தினால், ஒரே செலவின் மதிப்பு வருடா வருடம் கூடும். சேமித்த பணம், பணவீக்கத்தின் காரணமாக மதிப்பு குறைந்து விடும். எனவே சேமிப்பு மட்டும் போதாது. முதலீடும் வேண்டும்..உதாரணமாக, 1980ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு, சென்னையில் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு மனை வாங்க முடியும். 2020ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு , கோடம்பாக்கத்தில் ஒரு மாத வீட்டு வாடகை மட்டுமே செலுத்த முடியும். இது பணவீக்கத்தின் கோரமுகம்..சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம்.1980ம் ஆண்டு முதல் வருடா வருடம், ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார் என்று கொள்வோம். 2020ம் ஆண்டு, அவரிடம் 4 லட்ச ரூபாய் பணம் இருக்கும்.இதற்கு மாறாக, அதே பணத்தை, வங்கியில் தொடர் வைப்பு நிதியில், வருடாவருடம் சராசரியாக 8% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், கிட்டத்தட்ட 31 லட்சமாக வளர்ந்திருக்கும்..எனவே, முதலீட்டின் மூலமே பணத்தைப் பெருக்க முடியும்..குறிக்கோளுக்கு ஏற்ற முதலீடு .எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு..பணத்தை இழக்கும் அபாயம்(risk)பணம் வளரும் விகிதம்(rate of return)பணத்தின் நீர்ப்புத் தன்மை (liquidity)-.எந்த ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் போதும், அது குறிக்கோளினை சார்ந்து அமைய வேண்டும். நமது குறிக்கோளின் கால வரையறைக்கு முதலீட்டின் கூறுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்று பார்க்க வேண்டும்..குறுகியகால குறிக்கோள்களுக்கு(3-5 வருடங்கள்) பங்கு சந்தை முதலீடுகள் ஆபத்தானவை. குறுகிய கால குறிக்கோள்களுக்கு வங்கி வைப்பு நிதிகள் சிறப்பானவை.நடுத்தர கால குறிக்கோள்களுக்கு(5-10 வருடங்கள்) அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் வங்கி வைப்பு நிதிகள் சேர்ந்த முதலீட்டுக் கலவை சிறப்பானது.நீண்டகால குறிக்கோள்களுக்கு(10 வருடங்களுக்கு மேல்) பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. நீண்டகால குறிக்கோள்களுக்கு வங்கி முதலீடுகளால் பணவீக்கத்தை சமாளிக்க முடியாது..எறும்பிடம் இருந்து மனிதன், உழைப்பையும் சேமிப்பையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் அவற்றோடு நின்றுவிடாமல் சேமிப்பினை முதலீடாக மாற்றி பணப் பெருக்கத்தை செய்து பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும்.