ரமலான் நோன்பு!.வெஜ் (டேஸ்ட்டி) கஞ்சி!.ரமலான் நோன்பு தொடங்கியதும் தொழுகைகளும், சுவையான நோன்புக் கஞ்சியும் ஆரம்பமாகிவிட்டன..புனிதமான இந்த 30 நாட்களும் நோன்பிருந்தபின் 31ஆவது நாளன்று ரம்லான் பண்டிகை கொண்டாடப்படுகிறது..அதிகாலை 3½ மணிக்கு எழுந்து 4½ மணிக்குள் ~சஹர்" எனப்படும் உணவை முடித்து பின்னர் நாள் முழுவதும் நீர்கூட அருந்தாமல் மாலை 6½ மணிவரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது..நோன்பு துறக்கையில், கஞ்சி (இப்தர்) அருந்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவரவர் வீடுகளில் இதைச் செய்வது வழக்கம். மசூதிகளிலும் கஞ்சி அளிக்கப்படும். பிற சமூகத்தினரும் வாங்கி அருந்துவதுண்டு..நோன்புக் கஞ்சி உடல் உஷ்ணத்தை நீ்க்கி உடல் வலுவை அளிப்பதோடு, ருசியாகவும் இருக்கும். வெஜிடேரியன் மற்றும் – நான்-வெஜிடேரியன் முறையில் இதனைத் தயாரிப்பார்கள்..எனது இஸ்லாமியத் தோழி, அவர்கள் வீட்டில் செய்யும் வெஜிடேரியன் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் முறையைக் கூறினாள். எப்படி என்று பார்ப்போம்?.½ கப் பச்சரிசி, ¼ கப் துவரம் பருப்பு, ¼ கப் பாசிப்பருப்பு, 5 சின்ன வெங்காயம், பட்டை, ஏலம், கிராம்பு – சிறிது, 1 தக்காளிப்பழம், இஞ்சி, பச்சைமிளகாய் – கொஞ்சம், 1 கேரட், கொத்துமல்லி இலை ¼ கப், நல்ல தேங்காய்ப்பால் 1 ½ கப், பெரிய வெங்காயம் -1..துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்..அரிசி, வறுத்த பருப்புகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி ஆகிய எல்லாவற்றையும் குக்கரில் போட்டு சுமார் 6 – 7 கப் தண்ணீர்விட்டு மூன்று விசில் வரும்வரை வைத்துக் கொதிக்கவிட வேண்டும். சற்றே ஆறிய பிறகு, அத்துடன் தேங்காய்ப் பாலைச் சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஏலம், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து கஞ்சியுடன் சேர்த்து மேலே கொத்துமல்லி இலைகளைத் தூவி விட வேண்டும். மிகவும் டேஸட்டியாக இருக்கும் இந்த "வெஜ் நோன்புக் கஞ்சி."– ஆர். மீனலதா, மும்பை.———————————-.தேன்!.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கம்..மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்..எலுமிச்சையுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்..ஆரஞ்சு பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்..தேங்காயப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல்புண், வாய்ப்புண் குணமாகும்..இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்..சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ வீக்கம் குறையும். கட்டிகளும் ஆறிவிடும்..-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்.———————————-.சட்னி வகைகள்!.குடமிளகாய் வேர்க்கடலை சட்னி.தேவை: குடை மிளகாய் ½ கப் (நறுக்கியது), வேர்கடலை ¼ கப், பச்சை மிளகாய் 3 (அ) 4, பூண்டு 3 பெரிய பல், புளி சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, கொத்துமல்லி சிறிது, கடுகு ¼ டீஸ்பூன், உளுத்தம் பருப்பு ½ டீஸ்பூன், பெருங்காயத்தூள் ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது..செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வேர்க்கடலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து நன்கு மென்மையாகும்வரை வதக்கி, பின் இறக்கி ஆற வைக்கவும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் பூண்டு, புளி, உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து, அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் போற்றிக் கொள்ளவும்..பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கிளறினால் சுவையான குடமிளகாய் வேர்க்கடலை சட்னி ரெடி. இது இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும். அதிகம் சேர்த்துக கொள்வது நல்லது. இதேபோல் குடமிளகாய்க்குப் பதில் தக்காளி + சின்ன வெங்கயத்தையும் சேர்த்து வதக்கி சட்னி செய்யலாம்..தக்காளி துளசி சட்னி.தேவை: தக்காளி 2 கப் (நறுக்கியது), வரமிளகாய் – 2, பூண்டு பல் – 4, துளசி – 1 கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, புளி – ஒரு கோலி அளவு..செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வர மிளகாய், பூண்டுபல் மற்றும் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் புளி, உப்பு, துளசி இலைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு குளிர்ந்ததும் அதை மிக்ஸிஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்தால் தக்காளி துளசி சட்னி தயார். இது இட்லிக்கு, தோசைக்கு சரியான காம்பினேஷன்..லெமன் சட்னி.தேவை: காஷ்மிரி மிளகாய் தூள் – 1 டேபுள் ஸ்பூன், பெரிய எலுமிச்சை 1 (சாறு எடுத்துக் கொளள்ளவும்). உப்பு தேவைக்கேற்ப.தாளிக்க: நல்லெண்ணெய் 1 டேபுள் ஸ்பூஜ், கடுகு 1 டீஸ்பூன், பூண்டு 3 பல்.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு எடுத்துக் கொள்ளவும். பின் பூண்டு பற்களை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டுப் பற்களைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். தாளித்ததை மிளகாய்தூள் கலவையில் போட்டு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் சுவையான லெமன் சட்னி தயார்..குறிப்பு: இந்த சட்னியில் காஷ்மிரி மிளகாய்தூள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனின் அதில் அதிக காரம் இருக்காது. அதோடு அது நல்ல நிறத்தையும் கொடுக்கும். சட்னி மிகவும் புளிப்பாக இருப்பதுப் போல் இருந்தால், அதற்கேற்ப மிளகாய்த் தூள் மற்றும் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். முக்கியமாக இந்த லெமன் சட்னிக்கு நல்லெண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனனில் இதுதான் இந்த ரெசிபியின் கார அளவைக் குறைத்துச் சுவையைக் கூட்டுகிறது.-என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.———————————-.ஆவாரம்பூ!.ஆவாரம்பூ மஞ்சள் நிறத்தில் கொத்தாய் மலர்ந்திருக்கும் காட்டுப்பூ. இப்பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவும்...'ஆவாரை இருக்க, சாவோரைக் கண்டதுண்டா' என்பது யாவரும் அறிந்ததே. சர்க்கரை நோய் இருப்போர், ஆவாரம்பூ காபி காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்படும்..ஆவாரம்பூ பொடி.ஒரு கிலோ ஆவாரம்பூ, சம்பா கோதுமை ஒரு கிலோ இரண்டையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இரு தம்ளர் நீர் விட்டு அதில் மேலுள்ள பொடியை மூன்று ஸ்பூன்போட்டு கொதிக்க விடவும். அதை வடிகட்டி பால் சேர்த்தால் ஆவாரம்பூ காபி தயார்..ரொட்டிக்காக மாவு பிசையும் போது இப் பொடி 3ஸ்பூன் போட்டுக் கொண்டு பிசைந்து ரொட்டி செய்தும் சாப்பிடலாம்..இட்லி மாவு அரைக்கும் போது ஆவாரம் பூக்களைச் சேர்த்து அரைத்து இட்லி, தோசையும் செய்து சாப்பிடலாம்..உணவே மருந்து. உணவை மருந்தாக்கி உடல் நலம் பேணுவோம்.-செ.கலைவாணி, சேலம்.———————————-.சத்தான தினை கம்பு அடை!!.சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும். தினை மற்றும் கம்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது..தேவையானப் பொருட்கள் : தினை மாவு – 1 கப், கம்பு மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 1 கப், கடலைப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – அரை கப், வர மிளகாய் – 10 , தேங்காய் – அரை கப் (நறுக்கியது), உப்பு – தேவையான அளவு, பெருங்காயம் – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : முதலில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் உப்பு கலந்த நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்..பின்னர் பருப்பு வகைகள் நன்கு ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு தினை மாவு, கம்பு மாவு, பச்சரிசி மாவு, அரைத்த கலவை, தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு மாவை கலக்க வேண்டும். பின் மாவை அரை மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்..கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், இந்த மாவை அடைகளாக ஊற்றி முன்னும் பின்னும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சத்தான தினை கம்பு அடை தயார்!!!
ரமலான் நோன்பு!.வெஜ் (டேஸ்ட்டி) கஞ்சி!.ரமலான் நோன்பு தொடங்கியதும் தொழுகைகளும், சுவையான நோன்புக் கஞ்சியும் ஆரம்பமாகிவிட்டன..புனிதமான இந்த 30 நாட்களும் நோன்பிருந்தபின் 31ஆவது நாளன்று ரம்லான் பண்டிகை கொண்டாடப்படுகிறது..அதிகாலை 3½ மணிக்கு எழுந்து 4½ மணிக்குள் ~சஹர்" எனப்படும் உணவை முடித்து பின்னர் நாள் முழுவதும் நீர்கூட அருந்தாமல் மாலை 6½ மணிவரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது..நோன்பு துறக்கையில், கஞ்சி (இப்தர்) அருந்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவரவர் வீடுகளில் இதைச் செய்வது வழக்கம். மசூதிகளிலும் கஞ்சி அளிக்கப்படும். பிற சமூகத்தினரும் வாங்கி அருந்துவதுண்டு..நோன்புக் கஞ்சி உடல் உஷ்ணத்தை நீ்க்கி உடல் வலுவை அளிப்பதோடு, ருசியாகவும் இருக்கும். வெஜிடேரியன் மற்றும் – நான்-வெஜிடேரியன் முறையில் இதனைத் தயாரிப்பார்கள்..எனது இஸ்லாமியத் தோழி, அவர்கள் வீட்டில் செய்யும் வெஜிடேரியன் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் முறையைக் கூறினாள். எப்படி என்று பார்ப்போம்?.½ கப் பச்சரிசி, ¼ கப் துவரம் பருப்பு, ¼ கப் பாசிப்பருப்பு, 5 சின்ன வெங்காயம், பட்டை, ஏலம், கிராம்பு – சிறிது, 1 தக்காளிப்பழம், இஞ்சி, பச்சைமிளகாய் – கொஞ்சம், 1 கேரட், கொத்துமல்லி இலை ¼ கப், நல்ல தேங்காய்ப்பால் 1 ½ கப், பெரிய வெங்காயம் -1..துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்..அரிசி, வறுத்த பருப்புகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி ஆகிய எல்லாவற்றையும் குக்கரில் போட்டு சுமார் 6 – 7 கப் தண்ணீர்விட்டு மூன்று விசில் வரும்வரை வைத்துக் கொதிக்கவிட வேண்டும். சற்றே ஆறிய பிறகு, அத்துடன் தேங்காய்ப் பாலைச் சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஏலம், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து கஞ்சியுடன் சேர்த்து மேலே கொத்துமல்லி இலைகளைத் தூவி விட வேண்டும். மிகவும் டேஸட்டியாக இருக்கும் இந்த "வெஜ் நோன்புக் கஞ்சி."– ஆர். மீனலதா, மும்பை.———————————-.தேன்!.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கம்..மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்..எலுமிச்சையுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்..ஆரஞ்சு பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்..தேங்காயப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல்புண், வாய்ப்புண் குணமாகும்..இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்..சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ வீக்கம் குறையும். கட்டிகளும் ஆறிவிடும்..-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்.———————————-.சட்னி வகைகள்!.குடமிளகாய் வேர்க்கடலை சட்னி.தேவை: குடை மிளகாய் ½ கப் (நறுக்கியது), வேர்கடலை ¼ கப், பச்சை மிளகாய் 3 (அ) 4, பூண்டு 3 பெரிய பல், புளி சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, கொத்துமல்லி சிறிது, கடுகு ¼ டீஸ்பூன், உளுத்தம் பருப்பு ½ டீஸ்பூன், பெருங்காயத்தூள் ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது..செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வேர்க்கடலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து நன்கு மென்மையாகும்வரை வதக்கி, பின் இறக்கி ஆற வைக்கவும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் பூண்டு, புளி, உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து, அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் போற்றிக் கொள்ளவும்..பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கிளறினால் சுவையான குடமிளகாய் வேர்க்கடலை சட்னி ரெடி. இது இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும். அதிகம் சேர்த்துக கொள்வது நல்லது. இதேபோல் குடமிளகாய்க்குப் பதில் தக்காளி + சின்ன வெங்கயத்தையும் சேர்த்து வதக்கி சட்னி செய்யலாம்..தக்காளி துளசி சட்னி.தேவை: தக்காளி 2 கப் (நறுக்கியது), வரமிளகாய் – 2, பூண்டு பல் – 4, துளசி – 1 கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, புளி – ஒரு கோலி அளவு..செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வர மிளகாய், பூண்டுபல் மற்றும் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் புளி, உப்பு, துளசி இலைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு குளிர்ந்ததும் அதை மிக்ஸிஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்தால் தக்காளி துளசி சட்னி தயார். இது இட்லிக்கு, தோசைக்கு சரியான காம்பினேஷன்..லெமன் சட்னி.தேவை: காஷ்மிரி மிளகாய் தூள் – 1 டேபுள் ஸ்பூன், பெரிய எலுமிச்சை 1 (சாறு எடுத்துக் கொளள்ளவும்). உப்பு தேவைக்கேற்ப.தாளிக்க: நல்லெண்ணெய் 1 டேபுள் ஸ்பூஜ், கடுகு 1 டீஸ்பூன், பூண்டு 3 பல்.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு எடுத்துக் கொள்ளவும். பின் பூண்டு பற்களை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டுப் பற்களைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். தாளித்ததை மிளகாய்தூள் கலவையில் போட்டு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் சுவையான லெமன் சட்னி தயார்..குறிப்பு: இந்த சட்னியில் காஷ்மிரி மிளகாய்தூள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனின் அதில் அதிக காரம் இருக்காது. அதோடு அது நல்ல நிறத்தையும் கொடுக்கும். சட்னி மிகவும் புளிப்பாக இருப்பதுப் போல் இருந்தால், அதற்கேற்ப மிளகாய்த் தூள் மற்றும் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். முக்கியமாக இந்த லெமன் சட்னிக்கு நல்லெண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனனில் இதுதான் இந்த ரெசிபியின் கார அளவைக் குறைத்துச் சுவையைக் கூட்டுகிறது.-என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.———————————-.ஆவாரம்பூ!.ஆவாரம்பூ மஞ்சள் நிறத்தில் கொத்தாய் மலர்ந்திருக்கும் காட்டுப்பூ. இப்பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவும்...'ஆவாரை இருக்க, சாவோரைக் கண்டதுண்டா' என்பது யாவரும் அறிந்ததே. சர்க்கரை நோய் இருப்போர், ஆவாரம்பூ காபி காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்படும்..ஆவாரம்பூ பொடி.ஒரு கிலோ ஆவாரம்பூ, சம்பா கோதுமை ஒரு கிலோ இரண்டையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இரு தம்ளர் நீர் விட்டு அதில் மேலுள்ள பொடியை மூன்று ஸ்பூன்போட்டு கொதிக்க விடவும். அதை வடிகட்டி பால் சேர்த்தால் ஆவாரம்பூ காபி தயார்..ரொட்டிக்காக மாவு பிசையும் போது இப் பொடி 3ஸ்பூன் போட்டுக் கொண்டு பிசைந்து ரொட்டி செய்தும் சாப்பிடலாம்..இட்லி மாவு அரைக்கும் போது ஆவாரம் பூக்களைச் சேர்த்து அரைத்து இட்லி, தோசையும் செய்து சாப்பிடலாம்..உணவே மருந்து. உணவை மருந்தாக்கி உடல் நலம் பேணுவோம்.-செ.கலைவாணி, சேலம்.———————————-.சத்தான தினை கம்பு அடை!!.சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும். தினை மற்றும் கம்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது..தேவையானப் பொருட்கள் : தினை மாவு – 1 கப், கம்பு மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 1 கப், கடலைப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – அரை கப், வர மிளகாய் – 10 , தேங்காய் – அரை கப் (நறுக்கியது), உப்பு – தேவையான அளவு, பெருங்காயம் – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு..செய்முறை : முதலில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் உப்பு கலந்த நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்..பின்னர் பருப்பு வகைகள் நன்கு ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு தினை மாவு, கம்பு மாவு, பச்சரிசி மாவு, அரைத்த கலவை, தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு மாவை கலக்க வேண்டும். பின் மாவை அரை மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்..கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், இந்த மாவை அடைகளாக ஊற்றி முன்னும் பின்னும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சத்தான தினை கம்பு அடை தயார்!!!