'எங்களாலும் பறக்க முடியும்'.ஜி.எஸ்.எஸ்..பகுதி – 11.ஸ்மித்ஸோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகம் என்பது அமெரிக்காவில் மிகப் பிரபலமான ஒன்று. அதில் ஒரு விமான ஓட்டியின் சீருடை கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்த சீருடைக்கு சொந்தக்காரர் எமிலி வார்னர். இப்படி ஒரு கௌரவம் அளிக்கப்படும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? அறிவோம்..1973 ஜனவரி 29 அன்று ஃப்ரான்டியர் ஏர்லைன்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் துணைத் தலைவர் எதிரே அமர்ந்து கொண்டிருந்தார் அந்த இளம்பெண். அவளுக்கு படபடவென்று இருந்தது. துணைத் தலைவர் அடுத்தடுத்து சில கேள்விகளைக் கேட்க, அவள் பதில்களைக் கூறினாள்..ஒரு கட்டத்தில் 'எங்கள் நிறுவனத்தில் கணிசமான விமான ஓட்டிகள் உண்டு. ஆனால் அவர்களில் யாருமே ஆண்கள் கிடையாது. எந்த வகை சீருடையை உங்களுக்கு அளிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?' என்ற கேள்வியை முன்வைத்தார் துணைத்தலைவர்..பதிலை யோசித்தபோதே அந்தப் பெண்ணுக்கு மற்றொரு செய்தி புலபபட்டது. 'தான் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டோம்'!.'யாரோ ஒரு நிறுவனத்தலைவர் இன்டர்வியூ செய்தார், யாரோ ஒரு பெண் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்று இதை எளிதில் கடந்துவிட முடியாது. விமான ஓட்டிகள் வரலாறில் ஒரு புதிய அத்தியாயம் அன்று துவக்கப்பட்டது..ஒரு அமெரிக்க விமான நிறுவனம் தனது முழு நேர பணியாளராக ஒரு பெண் விமான ஓட்டியை நியமித்தது அதுவே முதல் முறை. எமிலி வாரன் (அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்) அந்த சாதனையை செய்து விட்டார். பின்னர் ஒரு விமானத்தின் 'கேப்டன் பைலட்'டாக விளங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையும் தொடர்ந்தது..பயணிகள் நிரம்பிய ஒரு வணிக விமானத்தில் முன்னணி விமான ஓட்டியாக பெண்களில் முதலிடம் பெற்றவர் அவர்..விமானப் பணியில் இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கல்லூரிப் பருவத்தில் தோன்றியபோது அதற்கு முதல் படியாக விமானம் ஒன்றில் பயணம் செய்யவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். டென்வரலிருந்து குனிஸன் சென்று அதே விமானத்தில் மீண்டும் டென்வர் வரும் வகையில் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டார். திரும்பி வரும்போது அவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணிக்கும்படி ஆனது..விமானப் பணிப்பெண்ணிடம் தயங்கித் தயங்கிச் சென்று 'நான் விமான ஓட்டிகள் தங்கும் பகுதியான காக்பிட்டைப் பார்க்கலாமா?' என்று கேட்டார். அனுமதி வழங்கப்பட்டது. விமான ஓட்டிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்றவுடன் எமிலியின் உற்சாகம் கடல் கடந்தது. அங்கே அவர் பார்த்த வான் பரப்பு அவரை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. எமிலியின் உற்சாகத்தைப் பார்த்த விமான ஓட்டி 'உனக்கும் விமான ஓட்டியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார்..அதுவரை விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்த எமிலிக்கு அன்றைய அனுபவமும் விமான ஓட்டியின் கேள்வியும் 'நான் விமான ஓட்டி ஆனால் என்ன?' என்று சிந்திக்க வைத்தது..மெல்லிய குரலில் 'பெண்களுக்கு இது சாத்தியமா?' என்று கேட்டாள். விமான ஓட்டி புன்னகைத்தார். 'தாராளமாக' என்றார்..அடுத்த சில நாட்களிலேயே விமானம் ஓட்டும் பயிற்சிப் பள்ளியை அணுகி அதில் சேர்ந்து விட்டார் எமிலி. விமான ஓட்டி பயிற்சிக்கான உரிமம் கிடைத்தது..1958 விமான பயிற்சி எடுத்துக் கொள்ளத் தொடங்கினார் வாரத்துக்கு 13 டாலர் இதற்காக கட்டணமாகச் செலுத்த வேண்டும் இந்த பணத் தேவைக்காக மாலையில் வேறொரு விமான பயிற்சி பள்ளியில் வரவேற்பாளராக பணிபுரிந்து அந்த ஊதியத்தை பயிற்சிக்காக செலவழித்தார்.பிறகுதான் மேற்படி நேர்முகம், பணியில் சேர்தல், 21,000 மணி நேரம் விமான ஓட்டியிருக்கார்..தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில், தனது எண்பதாவது வயதில் மூளை மறதி நோயான அல்சீமர் வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்..விமான ஓட்டியாக பணி புரிவதில் பல சிரமங்கள் உண்டு. ஒரு நீண்ட விமானப் பயணம் சென்று வந்தாலே பலருக்கும் ஜெட் லாக் ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்வார்கள். நாடுகளுக்கிடையே உள்ள நேர மாறுதல் என்பது விமான ஓட்டிகளின் உடலையும் பாதிக்கும். தவிர பல்வேறு நாடுகளின் நேர்மாறான தட்பவெப்ப நிலையை அடுத்தடுத்து சந்திப்பதும் அவர்களைப் பாதிக்கும்..கடினமான ஷுக்களைத்தான் பணிக்காலத்தில் அவர்கள் அணிந்திருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் அவசர காலத்தில் நிலையில்லாத நிலத்தின் மீது அவர்கள் நிற்கும்படி நேரலாம்..விமானத்தில் தொடர்ந்து நிலவும் குறைந்த அழுத்தமும் ஈரப்பதமும் அவர்கள் வாசனை மற்றும் ருசி ஆகியவற்றை மாற்றி விடும். உணவு அவர்களுக்குச் சுவையற்றதாகும்..குடும்பத்திலிருந்து நீண்ட காலத்துக்கு பிரிந்திருக்க வேண்டி இருக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தின் பல முக்கியமான நிகழ்வுகளை தங்கள் பணியின் காரணமாக தவறவிட்ட விமான ஓட்டிகள் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தினரின் எரிச்சலையும் அவர்கள் சம்பாதிக்க வேண்டியிருக்கும். தினமும் நிறைய மணி நேரத்துக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும்..இதெல்லாம் அனைவருக்கும் பொதுவான சிரமங்கள் என்றாலும் யோசித்துப் பார்த்தால் பெண் விமான ஓட்டிகள் இதனால் மேலும் அதிகமாக சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பது புலப்படும். இத்தனையையும் மீறித்தான் அவர்கள் சாதனை செய்து வருகிறார்கள்..(தொடர்ந்து பறப்பார்கள்)
'எங்களாலும் பறக்க முடியும்'.ஜி.எஸ்.எஸ்..பகுதி – 11.ஸ்மித்ஸோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகம் என்பது அமெரிக்காவில் மிகப் பிரபலமான ஒன்று. அதில் ஒரு விமான ஓட்டியின் சீருடை கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்த சீருடைக்கு சொந்தக்காரர் எமிலி வார்னர். இப்படி ஒரு கௌரவம் அளிக்கப்படும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? அறிவோம்..1973 ஜனவரி 29 அன்று ஃப்ரான்டியர் ஏர்லைன்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் துணைத் தலைவர் எதிரே அமர்ந்து கொண்டிருந்தார் அந்த இளம்பெண். அவளுக்கு படபடவென்று இருந்தது. துணைத் தலைவர் அடுத்தடுத்து சில கேள்விகளைக் கேட்க, அவள் பதில்களைக் கூறினாள்..ஒரு கட்டத்தில் 'எங்கள் நிறுவனத்தில் கணிசமான விமான ஓட்டிகள் உண்டு. ஆனால் அவர்களில் யாருமே ஆண்கள் கிடையாது. எந்த வகை சீருடையை உங்களுக்கு அளிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?' என்ற கேள்வியை முன்வைத்தார் துணைத்தலைவர்..பதிலை யோசித்தபோதே அந்தப் பெண்ணுக்கு மற்றொரு செய்தி புலபபட்டது. 'தான் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டோம்'!.'யாரோ ஒரு நிறுவனத்தலைவர் இன்டர்வியூ செய்தார், யாரோ ஒரு பெண் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்று இதை எளிதில் கடந்துவிட முடியாது. விமான ஓட்டிகள் வரலாறில் ஒரு புதிய அத்தியாயம் அன்று துவக்கப்பட்டது..ஒரு அமெரிக்க விமான நிறுவனம் தனது முழு நேர பணியாளராக ஒரு பெண் விமான ஓட்டியை நியமித்தது அதுவே முதல் முறை. எமிலி வாரன் (அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்) அந்த சாதனையை செய்து விட்டார். பின்னர் ஒரு விமானத்தின் 'கேப்டன் பைலட்'டாக விளங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையும் தொடர்ந்தது..பயணிகள் நிரம்பிய ஒரு வணிக விமானத்தில் முன்னணி விமான ஓட்டியாக பெண்களில் முதலிடம் பெற்றவர் அவர்..விமானப் பணியில் இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கல்லூரிப் பருவத்தில் தோன்றியபோது அதற்கு முதல் படியாக விமானம் ஒன்றில் பயணம் செய்யவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். டென்வரலிருந்து குனிஸன் சென்று அதே விமானத்தில் மீண்டும் டென்வர் வரும் வகையில் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டார். திரும்பி வரும்போது அவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணிக்கும்படி ஆனது..விமானப் பணிப்பெண்ணிடம் தயங்கித் தயங்கிச் சென்று 'நான் விமான ஓட்டிகள் தங்கும் பகுதியான காக்பிட்டைப் பார்க்கலாமா?' என்று கேட்டார். அனுமதி வழங்கப்பட்டது. விமான ஓட்டிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்றவுடன் எமிலியின் உற்சாகம் கடல் கடந்தது. அங்கே அவர் பார்த்த வான் பரப்பு அவரை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. எமிலியின் உற்சாகத்தைப் பார்த்த விமான ஓட்டி 'உனக்கும் விமான ஓட்டியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார்..அதுவரை விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்த எமிலிக்கு அன்றைய அனுபவமும் விமான ஓட்டியின் கேள்வியும் 'நான் விமான ஓட்டி ஆனால் என்ன?' என்று சிந்திக்க வைத்தது..மெல்லிய குரலில் 'பெண்களுக்கு இது சாத்தியமா?' என்று கேட்டாள். விமான ஓட்டி புன்னகைத்தார். 'தாராளமாக' என்றார்..அடுத்த சில நாட்களிலேயே விமானம் ஓட்டும் பயிற்சிப் பள்ளியை அணுகி அதில் சேர்ந்து விட்டார் எமிலி. விமான ஓட்டி பயிற்சிக்கான உரிமம் கிடைத்தது..1958 விமான பயிற்சி எடுத்துக் கொள்ளத் தொடங்கினார் வாரத்துக்கு 13 டாலர் இதற்காக கட்டணமாகச் செலுத்த வேண்டும் இந்த பணத் தேவைக்காக மாலையில் வேறொரு விமான பயிற்சி பள்ளியில் வரவேற்பாளராக பணிபுரிந்து அந்த ஊதியத்தை பயிற்சிக்காக செலவழித்தார்.பிறகுதான் மேற்படி நேர்முகம், பணியில் சேர்தல், 21,000 மணி நேரம் விமான ஓட்டியிருக்கார்..தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில், தனது எண்பதாவது வயதில் மூளை மறதி நோயான அல்சீமர் வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்..விமான ஓட்டியாக பணி புரிவதில் பல சிரமங்கள் உண்டு. ஒரு நீண்ட விமானப் பயணம் சென்று வந்தாலே பலருக்கும் ஜெட் லாக் ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்வார்கள். நாடுகளுக்கிடையே உள்ள நேர மாறுதல் என்பது விமான ஓட்டிகளின் உடலையும் பாதிக்கும். தவிர பல்வேறு நாடுகளின் நேர்மாறான தட்பவெப்ப நிலையை அடுத்தடுத்து சந்திப்பதும் அவர்களைப் பாதிக்கும்..கடினமான ஷுக்களைத்தான் பணிக்காலத்தில் அவர்கள் அணிந்திருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் அவசர காலத்தில் நிலையில்லாத நிலத்தின் மீது அவர்கள் நிற்கும்படி நேரலாம்..விமானத்தில் தொடர்ந்து நிலவும் குறைந்த அழுத்தமும் ஈரப்பதமும் அவர்கள் வாசனை மற்றும் ருசி ஆகியவற்றை மாற்றி விடும். உணவு அவர்களுக்குச் சுவையற்றதாகும்..குடும்பத்திலிருந்து நீண்ட காலத்துக்கு பிரிந்திருக்க வேண்டி இருக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தின் பல முக்கியமான நிகழ்வுகளை தங்கள் பணியின் காரணமாக தவறவிட்ட விமான ஓட்டிகள் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தினரின் எரிச்சலையும் அவர்கள் சம்பாதிக்க வேண்டியிருக்கும். தினமும் நிறைய மணி நேரத்துக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும்..இதெல்லாம் அனைவருக்கும் பொதுவான சிரமங்கள் என்றாலும் யோசித்துப் பார்த்தால் பெண் விமான ஓட்டிகள் இதனால் மேலும் அதிகமாக சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பது புலப்படும். இத்தனையையும் மீறித்தான் அவர்கள் சாதனை செய்து வருகிறார்கள்..(தொடர்ந்து பறப்பார்கள்)