பாகம் – 8.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து… கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின் மகிழ்ச்சி, துக்கம், சந்தோஷம், சோகம், அதிர்ச்சி, பயம், கோபம், பசி, மையல், காதல்… அனைத்தையும் கண்களால்தான் வெளிப்படுத்தி இருப்பார்கள். அப்படி கடலையொத்த அன்பு கண்களில் வெளிப்படும் விதத்தை மிக அழகாக திருக்குறளிலும் பொன்னியின் செல்வனிலும் நாம் காணும் சமயம் நம் கண்களும் விந்தையால் விரிகின்றன….தென்னாட்டின் பொன்னேடாம் திருக்குறளின் எட்டாம் அதிகாரம் "அன்புடைமை"..அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் .புன்கணீர் பூசல் தரும் ."உள்ளத்தில் இருக்கும் அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்..(பொன்னியின் செல்வன் கனவுக் கோலத்தில் ஒரு காவியக் கோடுதான் பூங்குழலிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இடையேயான அன்பு….இலங்கை அனுராதபுரத்தின் அருகே ஓர் பாழும் மண்டபத்திற்கு போவோம் வாருங்கள்… தன்னுடன் இருந்தவர்களுடன் சோழ நாட்டு நிலவரம் பற்றிய பல்வேறு சம்பாஷனைகளில் ஈடுபட்டிருந்தார் அருள்மொழிவர்மர். அதன்பின் ஒரு கட்டத்தில்…).தூண் மறைவிலே நின்று தன்னைக் கடை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.."அபிமன்யுவை நாலாபுறமும் பகைவர்கள் தாக்கிக் கொன்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை நாலாபுறமிருந்து வரும் செய்திகளே தாக்கிக் கொன்றுவிடும் போலிருக்கிறது!" என்று இளவரசர் சொல்லிக்கொண்டார்.."அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்?" என்றார்."அவளே சொல்லட்டும்!" என்றார் பெரிய வேளார்..பூங்குழலி தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். இளவரசர் முன்னால் வந்து நின்றாள். நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். சேநாதிபதியைப் பார்த்தாள்; பார்த்திபேந்திரனைப் பார்த்தாள்; சற்றுத் தூரத்தில் நின்ற வந்தியத் தேவனையும் ஆழ்வார்கடியானையும் பார்த்தாள். இளவரசர் முகத்தை மட்டும் அவளால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.."பெண்ணே. சொல், சீக்கிரம்!" என்றார் சேநாதிபதி..பூங்குழலி ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை.."ஆகா! இந்த உலகமே ஊமை மயமாகி விட்டது போல் காண்கிறது" என்றார் அருள்மொழிவர்மர்..அவ்வளவுதான். பூங்குழலி தன் கண்ணிமைகளை உயர்த்தி ஒரு தடவை, ஒரு கணத்திலும் சிறியநேரம் இளவரசரை நோக்கினாள். அதற்குள் அக்கண்களில் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். ஓடிப்போய் தூரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் மறைந்தாள்..எல்லோரும் வியப்புடன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்..(இளவரசருக்கு பதில் சொல்லாமல் கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஓடிச்சென்ற பூங்குழலியை சாதாரண பெண் என நினைத்து விடாதீர்கள். சமுத்திரத்தை தன் கானங்களால் நிரப்பி கடல் அலைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சமுத்திரகுமாரி. வீரத்தின் மறு உருவம்..பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் பொன்னியின் செல்வரின் உயிருக்கு பாதுகாப்பாக செயல்பட்ட வீரத்திருமகள். அன்று காற்றும் கடலும் இவள் சொல்லுக்கு கட்டுப்பட்டன. இளவரசரை மட்டுமல்ல வந்தியத் தேவனையும் பல இடங்களில் மிகவும் சாதுர்யமான முறையில் காப்பாற்றிய கடல் அரசி இவள். சமுத்திர ராஜனை தன் கட்டுக்குள் வைத்திருந்த சமுத்திர குமாரி இவள்….காட்டுக்குள் ஓடிச்சென்று மரங்களுக்கு மத்தியில் மறைந்துகொண்ட பூங்குழலியை பின்தொடர்ந்தது வந்தியத் தேவன் அழைத்து வர மீண்டும் அதே பாழும் மண்டபம்…)."அது போனால் போகட்டும்; இந்த பெண்ணிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்!" என்றார் சேநாதிபதி..பூங்குழலி வந்ததிலிருந்து இளவரசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசர் அப்போது அவளை ஏறிட்டுப் பார்த்தார்.."சீச்சீ! இந்த நெஞ்சு எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறது? தொண்டையில் வந்து ஏதோ அடைகிறதே, அது என்ன? கண்ணில் எதற்காகக் கண்ணீர் தளும்புகிறது. அசட்டுப் பெண்ணே! உன் தைரியம் எல்லாம் எங்கே போயிற்று? அலை கடலையும் பெரும் புயலையும் கண்டு கலங்காத உன் உள்ளம் ஏன் இப்போது இப்படித் தத்தளிக்கிறது? கொடிய பயங்கர வேங்கைப்புலியின் கொள்ளிக்கண்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு படைத்த உன் கண்கள் ஏன் இப்போது மங்கல் அடைகிறது! பெண்ணே! மறுபடியும் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டிக் கொள்ளாதே! இளவரசரை நிமிர்ந்து பார்! அவர் கேட்கும் கேள்விகளுக்குக் கணீர் என்று மறுமொழி சொல்லு! உன்னை என்ன செய்து விடுவார்? கருணை மிகுந்தவர், தயாளு என்று உலகமெல்லாம் சொல்கிறதே! பேதைப் பெண்ணாகிய உன்னை இளவரசர் என்ன செய்து விடுவார்?".(இப்படி அத்தனை உணர்வுகளும் மனதுக்குள் போட்டி போட வார்த்தைகளுக்காய் தடுமாறும் அந்த வீரத்திருமகளை என்னவென்று சொல்வது…!?).குழலியும் பொன்னியின் செல்வரும் நதிக்கரை ஓரமாக கடலை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள்.)."நான் சொல்கிறது காதில் விழுந்ததா? அந்தப் புதைந்த கப்பலிலேயே நான் காத்திருக்கத் தீர்மானித்துவிட்டேன். சேநாதிபதி முதலியவர்கள் எப்படியும் இந்த இடத்தில் தேடிக்கொண்டு வந்து சேர்வார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து மேலே செய்ய வேண்டியதைப் பற்றி முடிவு செய்வேன். ஆனால் உனக்கு இனி இங்கே வேலை இல்லை. உன் படகைத் தேடிப்பிடித்து போய்விடு. என் தந்தையைப் பற்றி நான் கூறியதை நினைவில் வைத்துக்கொள்…".பூங்குழலி தயங்கி நின்றாள். அங்கிருந்த மரம் ஒன்றின் மீது சாய்ந்தாள். அதன் தாழ்ந்த கிளை ஒன்றை அவள் பிடித்துக்கொண்டாள்.."என்ன சமுத்திர குமாரி? என்ன?"."ஒன்றுமில்லை, இளவரசே! இங்கேயே தங்கி தங்களிடம் விடை பெற்றுக்கொள்கிறேன், போய் வாருங்கள்!"."கோபமா, பூங்குழலி!"."கோபமா? தங்களிடம் கோபங்கொள்ள இந்தப் பேதைக்கு என்ன அதிகாரம்? அவ்வளவு அகம்பாவம் நான் அடைந்துவிடவில்லை."."பின்னர் ஏன் திடீரென்று இங்கே நின்றுவிட்டாய்?"."கோபம் இல்லை, ஐயா! களைப்புத்தான்! நான் உறங்கி இரண்டு நாள் ஆகிறது .இங்கேயே சற்றுப் படுத்திருந்துவிட்டு என் படகைத் தேடிக்கொண்டு போகிறேன்.".அது பௌர்ணமிக்கு மறுநாள். ஆகையால் அச்சமயம் கீழைக் கடலில் சந்திரன் உதயமாகிக்கொண்டிருந்தது. இரண்டொரு மங்கிய கிரணங்கள் பூங்குழலியின் முகத்திலும் விழுந்தன..இளவரசர் அந்த முகத்தைப் பார்த்தார். அதில் குடிகொண்டிருந்த சோர்வையும் களைப்பையும் பார்த்தார். கண்கள் பஞ்சடைந்து இமைகள் தாமாக மூடிக்கொள்வதையும் பார்த்தார்..சந்திரன் உதயமாகும்போது செந்தாமரை குவிதல் இயற்கைதான். ஆனால் பூங்குழலியின் முகத்தாமரை அப்போது குவிந்தது என்று மட்டும் சொல்வதற்கில்லை. அது வாடி வதங்கிச் சோர்ந்து போயிருந்தது.."பெண்ணே! தூங்கி இரண்டு நாளாயிற்று என்றாயே? சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?" என்றார்.."சாப்பிட்டும் இரண்டு நாளைக்கு மேல் ஆயிற்று. தங்களுடன் இருந்த வரையில் பசியே தெரியவில்லை."."என் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? இன்று பகல் நாங்கள் எல்லோரும் வயிறு புடைக்க விருந்துண்டோம்" நீ சாப்பிட்டாயா? என்று கூடக் கேட்கத் தவறி விட்டேன்! வா! பூங்குழலி! என்னுடன் அந்தப் புதைந்த கப்பலுக்கு வா! அதில் தானியங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அந்த தானியங்களைத் திரட்டி இன்று இரவு கூட்டாஞ்சோறு சமைத்து உண்போம். சாப்பிட்ட பிறகு நீ உன் வழியே போகலாம்…."."ஐயா! சாப்பிட்டால் உடனே அங்கேயே படுத்துத் தூங்கிவிடுவேன். இப்போதே கண்ணைச் சுற்றுகிறது."."அதனால் என்ன? நீ அந்தப் புதைந்த கப்பலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு! நானும் யானையும் கரையிலிருந்து காவல் காக்கிறோம் .பொழுது விடிந்ததும் நீ உன் படகைத் தேடிப்போ!".இவ்விதம் சொல்லி இளவரசர் பூங்குழலின் கரத்தைப் பற்றி அவளைத் தாங்குவார் போல நடத்தி அழைத்துக்கொண்டு சென்றார். உண்மையிலேயே அவளுடைய கால்கள் தள்ளாடின என்பதைக் கண்டார் . அந்தப் பெண்ணின் அன்புக்கு ஈரேழு உலகத்திலும் இணை ஏது என்று எண்ணிய போது அவருடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது..(அன்பு மிகுதியாகும்போது முதலில் பேசுவது கண்கள்தான். அரசனின் கண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!).புதினம் முழுவதும் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனுக்கும் பூங்குழலிக்குமிடையேயான உன்னத உறவை மிக அழகாகப் பின்னி இருப்பார் . அப்பாச வலையில் சிக்குண்டதாலோ என்னவோ மனதுள் ஏதோ ஒர் மயக்கம். "விருந்தோம்பலில் சந்திப்போம்" என்ற இரு வார்த்தைகளை மட்டுமே மனம் முணுமுணுக்கிறது!
பாகம் – 8.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து… கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின் மகிழ்ச்சி, துக்கம், சந்தோஷம், சோகம், அதிர்ச்சி, பயம், கோபம், பசி, மையல், காதல்… அனைத்தையும் கண்களால்தான் வெளிப்படுத்தி இருப்பார்கள். அப்படி கடலையொத்த அன்பு கண்களில் வெளிப்படும் விதத்தை மிக அழகாக திருக்குறளிலும் பொன்னியின் செல்வனிலும் நாம் காணும் சமயம் நம் கண்களும் விந்தையால் விரிகின்றன….தென்னாட்டின் பொன்னேடாம் திருக்குறளின் எட்டாம் அதிகாரம் "அன்புடைமை"..அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் .புன்கணீர் பூசல் தரும் ."உள்ளத்தில் இருக்கும் அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்..(பொன்னியின் செல்வன் கனவுக் கோலத்தில் ஒரு காவியக் கோடுதான் பூங்குழலிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இடையேயான அன்பு….இலங்கை அனுராதபுரத்தின் அருகே ஓர் பாழும் மண்டபத்திற்கு போவோம் வாருங்கள்… தன்னுடன் இருந்தவர்களுடன் சோழ நாட்டு நிலவரம் பற்றிய பல்வேறு சம்பாஷனைகளில் ஈடுபட்டிருந்தார் அருள்மொழிவர்மர். அதன்பின் ஒரு கட்டத்தில்…).தூண் மறைவிலே நின்று தன்னைக் கடை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.."அபிமன்யுவை நாலாபுறமும் பகைவர்கள் தாக்கிக் கொன்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை நாலாபுறமிருந்து வரும் செய்திகளே தாக்கிக் கொன்றுவிடும் போலிருக்கிறது!" என்று இளவரசர் சொல்லிக்கொண்டார்.."அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்?" என்றார்."அவளே சொல்லட்டும்!" என்றார் பெரிய வேளார்..பூங்குழலி தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். இளவரசர் முன்னால் வந்து நின்றாள். நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். சேநாதிபதியைப் பார்த்தாள்; பார்த்திபேந்திரனைப் பார்த்தாள்; சற்றுத் தூரத்தில் நின்ற வந்தியத் தேவனையும் ஆழ்வார்கடியானையும் பார்த்தாள். இளவரசர் முகத்தை மட்டும் அவளால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.."பெண்ணே. சொல், சீக்கிரம்!" என்றார் சேநாதிபதி..பூங்குழலி ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை.."ஆகா! இந்த உலகமே ஊமை மயமாகி விட்டது போல் காண்கிறது" என்றார் அருள்மொழிவர்மர்..அவ்வளவுதான். பூங்குழலி தன் கண்ணிமைகளை உயர்த்தி ஒரு தடவை, ஒரு கணத்திலும் சிறியநேரம் இளவரசரை நோக்கினாள். அதற்குள் அக்கண்களில் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். ஓடிப்போய் தூரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் மறைந்தாள்..எல்லோரும் வியப்புடன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்..(இளவரசருக்கு பதில் சொல்லாமல் கண்கள் நிறைந்த கண்ணீருடன் ஓடிச்சென்ற பூங்குழலியை சாதாரண பெண் என நினைத்து விடாதீர்கள். சமுத்திரத்தை தன் கானங்களால் நிரப்பி கடல் அலைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சமுத்திரகுமாரி. வீரத்தின் மறு உருவம்..பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் பொன்னியின் செல்வரின் உயிருக்கு பாதுகாப்பாக செயல்பட்ட வீரத்திருமகள். அன்று காற்றும் கடலும் இவள் சொல்லுக்கு கட்டுப்பட்டன. இளவரசரை மட்டுமல்ல வந்தியத் தேவனையும் பல இடங்களில் மிகவும் சாதுர்யமான முறையில் காப்பாற்றிய கடல் அரசி இவள். சமுத்திர ராஜனை தன் கட்டுக்குள் வைத்திருந்த சமுத்திர குமாரி இவள்….காட்டுக்குள் ஓடிச்சென்று மரங்களுக்கு மத்தியில் மறைந்துகொண்ட பூங்குழலியை பின்தொடர்ந்தது வந்தியத் தேவன் அழைத்து வர மீண்டும் அதே பாழும் மண்டபம்…)."அது போனால் போகட்டும்; இந்த பெண்ணிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்!" என்றார் சேநாதிபதி..பூங்குழலி வந்ததிலிருந்து இளவரசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசர் அப்போது அவளை ஏறிட்டுப் பார்த்தார்.."சீச்சீ! இந்த நெஞ்சு எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறது? தொண்டையில் வந்து ஏதோ அடைகிறதே, அது என்ன? கண்ணில் எதற்காகக் கண்ணீர் தளும்புகிறது. அசட்டுப் பெண்ணே! உன் தைரியம் எல்லாம் எங்கே போயிற்று? அலை கடலையும் பெரும் புயலையும் கண்டு கலங்காத உன் உள்ளம் ஏன் இப்போது இப்படித் தத்தளிக்கிறது? கொடிய பயங்கர வேங்கைப்புலியின் கொள்ளிக்கண்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு படைத்த உன் கண்கள் ஏன் இப்போது மங்கல் அடைகிறது! பெண்ணே! மறுபடியும் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டிக் கொள்ளாதே! இளவரசரை நிமிர்ந்து பார்! அவர் கேட்கும் கேள்விகளுக்குக் கணீர் என்று மறுமொழி சொல்லு! உன்னை என்ன செய்து விடுவார்? கருணை மிகுந்தவர், தயாளு என்று உலகமெல்லாம் சொல்கிறதே! பேதைப் பெண்ணாகிய உன்னை இளவரசர் என்ன செய்து விடுவார்?".(இப்படி அத்தனை உணர்வுகளும் மனதுக்குள் போட்டி போட வார்த்தைகளுக்காய் தடுமாறும் அந்த வீரத்திருமகளை என்னவென்று சொல்வது…!?).குழலியும் பொன்னியின் செல்வரும் நதிக்கரை ஓரமாக கடலை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள்.)."நான் சொல்கிறது காதில் விழுந்ததா? அந்தப் புதைந்த கப்பலிலேயே நான் காத்திருக்கத் தீர்மானித்துவிட்டேன். சேநாதிபதி முதலியவர்கள் எப்படியும் இந்த இடத்தில் தேடிக்கொண்டு வந்து சேர்வார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து மேலே செய்ய வேண்டியதைப் பற்றி முடிவு செய்வேன். ஆனால் உனக்கு இனி இங்கே வேலை இல்லை. உன் படகைத் தேடிப்பிடித்து போய்விடு. என் தந்தையைப் பற்றி நான் கூறியதை நினைவில் வைத்துக்கொள்…".பூங்குழலி தயங்கி நின்றாள். அங்கிருந்த மரம் ஒன்றின் மீது சாய்ந்தாள். அதன் தாழ்ந்த கிளை ஒன்றை அவள் பிடித்துக்கொண்டாள்.."என்ன சமுத்திர குமாரி? என்ன?"."ஒன்றுமில்லை, இளவரசே! இங்கேயே தங்கி தங்களிடம் விடை பெற்றுக்கொள்கிறேன், போய் வாருங்கள்!"."கோபமா, பூங்குழலி!"."கோபமா? தங்களிடம் கோபங்கொள்ள இந்தப் பேதைக்கு என்ன அதிகாரம்? அவ்வளவு அகம்பாவம் நான் அடைந்துவிடவில்லை."."பின்னர் ஏன் திடீரென்று இங்கே நின்றுவிட்டாய்?"."கோபம் இல்லை, ஐயா! களைப்புத்தான்! நான் உறங்கி இரண்டு நாள் ஆகிறது .இங்கேயே சற்றுப் படுத்திருந்துவிட்டு என் படகைத் தேடிக்கொண்டு போகிறேன்.".அது பௌர்ணமிக்கு மறுநாள். ஆகையால் அச்சமயம் கீழைக் கடலில் சந்திரன் உதயமாகிக்கொண்டிருந்தது. இரண்டொரு மங்கிய கிரணங்கள் பூங்குழலியின் முகத்திலும் விழுந்தன..இளவரசர் அந்த முகத்தைப் பார்த்தார். அதில் குடிகொண்டிருந்த சோர்வையும் களைப்பையும் பார்த்தார். கண்கள் பஞ்சடைந்து இமைகள் தாமாக மூடிக்கொள்வதையும் பார்த்தார்..சந்திரன் உதயமாகும்போது செந்தாமரை குவிதல் இயற்கைதான். ஆனால் பூங்குழலியின் முகத்தாமரை அப்போது குவிந்தது என்று மட்டும் சொல்வதற்கில்லை. அது வாடி வதங்கிச் சோர்ந்து போயிருந்தது.."பெண்ணே! தூங்கி இரண்டு நாளாயிற்று என்றாயே? சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?" என்றார்.."சாப்பிட்டும் இரண்டு நாளைக்கு மேல் ஆயிற்று. தங்களுடன் இருந்த வரையில் பசியே தெரியவில்லை."."என் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? இன்று பகல் நாங்கள் எல்லோரும் வயிறு புடைக்க விருந்துண்டோம்" நீ சாப்பிட்டாயா? என்று கூடக் கேட்கத் தவறி விட்டேன்! வா! பூங்குழலி! என்னுடன் அந்தப் புதைந்த கப்பலுக்கு வா! அதில் தானியங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அந்த தானியங்களைத் திரட்டி இன்று இரவு கூட்டாஞ்சோறு சமைத்து உண்போம். சாப்பிட்ட பிறகு நீ உன் வழியே போகலாம்…."."ஐயா! சாப்பிட்டால் உடனே அங்கேயே படுத்துத் தூங்கிவிடுவேன். இப்போதே கண்ணைச் சுற்றுகிறது."."அதனால் என்ன? நீ அந்தப் புதைந்த கப்பலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு! நானும் யானையும் கரையிலிருந்து காவல் காக்கிறோம் .பொழுது விடிந்ததும் நீ உன் படகைத் தேடிப்போ!".இவ்விதம் சொல்லி இளவரசர் பூங்குழலின் கரத்தைப் பற்றி அவளைத் தாங்குவார் போல நடத்தி அழைத்துக்கொண்டு சென்றார். உண்மையிலேயே அவளுடைய கால்கள் தள்ளாடின என்பதைக் கண்டார் . அந்தப் பெண்ணின் அன்புக்கு ஈரேழு உலகத்திலும் இணை ஏது என்று எண்ணிய போது அவருடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது..(அன்பு மிகுதியாகும்போது முதலில் பேசுவது கண்கள்தான். அரசனின் கண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!).புதினம் முழுவதும் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனுக்கும் பூங்குழலிக்குமிடையேயான உன்னத உறவை மிக அழகாகப் பின்னி இருப்பார் . அப்பாச வலையில் சிக்குண்டதாலோ என்னவோ மனதுள் ஏதோ ஒர் மயக்கம். "விருந்தோம்பலில் சந்திப்போம்" என்ற இரு வார்த்தைகளை மட்டுமே மனம் முணுமுணுக்கிறது!