வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.ரெசிபிஸ்!.முருங்கைப் பூ பச்சடி.தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: முருங்கைப் பூவைத் துவரம் பருப்பு, உப்பு ஆகியவற்றோடு சேர்த்து வேகவைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதை, முருங்கைப் பூக் கலவையோடு சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும். இறக்கும் சமயத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட வேண்டும். புளிப்புத் தேவையானால் எலுமிச்சைச் சாறு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்..***************************.பச்சை மிளகாய்ப் பச்சடி.தேவை: பச்சை மிளகாய் – 20, புளி – 1 எலுமிச்சம் பழத்தின் அளவு, இஞ்சி – 1 சிறுதுண்டு, வெல்லம் – 1 அச்சு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: புளியுடன் உப்பு, சிறிதளவு, மஞ்சள் பொடி சிறிதளவு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வறுத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, புளிக்கரைசல் ஆகியவற்றையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு கெட்டி யானவுடன் இறக்க வேண்டும். இறக்கும்போது வெல்லத்தைப் போட்டு இறக்கவும்..***************************.மாம்பழப் பச்சடி.தேவை: மாம்பழம் – 5, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், தேங்காய் – 1 மூடி, காய்ந்த மிளகாய் – 6, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: மாம்பழத்தைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக்கி, மஞ்சள் பொடி மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்க வேண்டும். தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வெந்திருக்கும் மாம்பழத்தோடு சேர்த்துக் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். இறக்கும் சமயத்தில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்ட வேண்டும்.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.*****************************************************.சுண்டைக்காய்ப் பொடி.தேவை: நசுக்கிய பச்சை சுண்டைக்காய் – 1 கப், கொத்துமல்லி விதை – 1 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், உளுந்து – 3 ஸ்பூன், வற்றல் மிளகாய் – 6, பெருங்காயம் – சிறுதுண்டு, பூண்டு – 6 பற்கள், மிளகு – ½ ஸ்பூன், சீரகம் – ½ ஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, நெய் – 3 ஸ்பூன்..செய்முறை: வாணலியில் நெய் விட்டு நசுக்கிய சுண்டைக்காயை வதக்கி எடுக்கவும். மீதியுள்ள அனைத்து பொருட்களையும் அதே நெய்யில் வறுத்து ஆறிய பின் வதக்கிய சுண்டைக்காயோடு சேர்த்து மின் அரைவையில் அரைத்தால் சுண்டைக்காய்ப் பொடி சுடுசோற்றில் பிசைந்து சாப்பிடத் தயார்..***************************.கொள்ளுப் பொடி!.தேவை: வறுத்த கொள்ளு – 150 கிராம், வறுத்த உளுத்தம் பருப்பு – 5 டீஸ்பூன், வறுத்த மிளகாய் வற்றல் – 5, வறுத்த மிளகு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது, பூண்டு பல் – 3, காய்ந்த கறிவேப்பிலை – 1 பிடி, உப்பு – ருசிக்கேற்ப..செய்முறை: அனைத்தையும் மின் அரைவையில் பொடிக்கவும். சுவையான கொள்ளுப்பொடி தயார். சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற பொடி.– செ. கலைவாணி, மேட்டூர் அணை.
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.ரெசிபிஸ்!.முருங்கைப் பூ பச்சடி.தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: முருங்கைப் பூவைத் துவரம் பருப்பு, உப்பு ஆகியவற்றோடு சேர்த்து வேகவைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதை, முருங்கைப் பூக் கலவையோடு சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும். இறக்கும் சமயத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட வேண்டும். புளிப்புத் தேவையானால் எலுமிச்சைச் சாறு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்..***************************.பச்சை மிளகாய்ப் பச்சடி.தேவை: பச்சை மிளகாய் – 20, புளி – 1 எலுமிச்சம் பழத்தின் அளவு, இஞ்சி – 1 சிறுதுண்டு, வெல்லம் – 1 அச்சு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: புளியுடன் உப்பு, சிறிதளவு, மஞ்சள் பொடி சிறிதளவு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வறுத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, புளிக்கரைசல் ஆகியவற்றையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு கெட்டி யானவுடன் இறக்க வேண்டும். இறக்கும்போது வெல்லத்தைப் போட்டு இறக்கவும்..***************************.மாம்பழப் பச்சடி.தேவை: மாம்பழம் – 5, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், தேங்காய் – 1 மூடி, காய்ந்த மிளகாய் – 6, உப்பு, எண்ணெய் – தேவையானது..செய்முறை: மாம்பழத்தைத் தோல் சீவிச் சிறு துண்டுகளாக்கி, மஞ்சள் பொடி மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்க வேண்டும். தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வெந்திருக்கும் மாம்பழத்தோடு சேர்த்துக் கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். இறக்கும் சமயத்தில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்ட வேண்டும்.– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.*****************************************************.சுண்டைக்காய்ப் பொடி.தேவை: நசுக்கிய பச்சை சுண்டைக்காய் – 1 கப், கொத்துமல்லி விதை – 1 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், உளுந்து – 3 ஸ்பூன், வற்றல் மிளகாய் – 6, பெருங்காயம் – சிறுதுண்டு, பூண்டு – 6 பற்கள், மிளகு – ½ ஸ்பூன், சீரகம் – ½ ஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, நெய் – 3 ஸ்பூன்..செய்முறை: வாணலியில் நெய் விட்டு நசுக்கிய சுண்டைக்காயை வதக்கி எடுக்கவும். மீதியுள்ள அனைத்து பொருட்களையும் அதே நெய்யில் வறுத்து ஆறிய பின் வதக்கிய சுண்டைக்காயோடு சேர்த்து மின் அரைவையில் அரைத்தால் சுண்டைக்காய்ப் பொடி சுடுசோற்றில் பிசைந்து சாப்பிடத் தயார்..***************************.கொள்ளுப் பொடி!.தேவை: வறுத்த கொள்ளு – 150 கிராம், வறுத்த உளுத்தம் பருப்பு – 5 டீஸ்பூன், வறுத்த மிளகாய் வற்றல் – 5, வறுத்த மிளகு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது, பூண்டு பல் – 3, காய்ந்த கறிவேப்பிலை – 1 பிடி, உப்பு – ருசிக்கேற்ப..செய்முறை: அனைத்தையும் மின் அரைவையில் பொடிக்கவும். சுவையான கொள்ளுப்பொடி தயார். சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற பொடி.– செ. கலைவாணி, மேட்டூர் அணை.