ஆப்பிள் பேன் கேக்தேவையானவை : மைதா மாவு – 1 கப், ஆப்பிள் – 1, சர்க்கரை – 2 கப், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, உப்பு – சிறிது, ஏலப்பொடி – 1 டீஸ்பூன், லவங்கப்பட்டை தூள் – கால் டீஸ்பூன்..செய்முறை : மைதா மாவில் உப்பு, பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும். பின் தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். ஆப்பிளை விதை நீக்கி வட்டமாக வெட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வட்டமாக வெட்டிய ஆப்பிள் துண்டுகளை மைதாவில் தோய்த்து போட்டு பூரி போல பொரிக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று கப் நீர் விட்டு சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் பாகு கெட்டியாகாமல் இருக்கும். பட்டைத் தூள் சேர்க்கவும்.பொரித்த பேன் கேக்கை சர்க்கரைப் பாகில் ஊற வைத்து ஒரு அகலமான தட்டில் பரத்தி வைக்கவும். பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். சூப்பர் பேன் கேக் இது..டேட்ஸ் கேக்தேவையானவை : விதையில்லா பேரீச்சம் பழம் – 1 கப், மைதா மாவு – 1 கப், சர்க்கரை -அரை கப், தண்ணீர் – 2 கப், ரீஃபண்ட் ஆயில் – அரை கப், பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு – தலா 2 (பொடித்தது)..செய்முறை : மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்கு கலந்து வைக்கவும். பேரீச்சையை பொடியாக துண்டு போடவும். தண்ணீரில் சர்க்கரை, எண்ணெய், பேரீச்சம் பழம், பட்டை, கிராம்பு பொடி போட்டு நன்கு வேக விடவும். சிம்மில் பதினைந்து நிமிடம் வெந்ததும் இறக்கி ஆற வைத்து ஃபிரிஜ்ஜில் நான்கு மணி நேரம் வைக்கவும். அதை எடுத்து ஜில்லிப்பு போனவுடன் மைதா, பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் பிசையவும். பேக் செய்யும் தட்டில் மைதாவைத் தூவி இந்த மாவை கொட்டி செட் செய்யவும்.சூடு படுத்தப்பட்ட தோசைக்கல்லில் மாவைக் கொட்டி நாற்பது நிமிடங்கள் பேக் செய்யவும். அல்லது குக்கரில் நீர் ஊற்றி உள்ளே பாத்திரத்தில் வைத்து வெயிட் போடாமல் இருபது நிமிடம் வேக விடவும். ஆறியவுடன் துண்டுகள் போடவும்..ஸ்வீட் பான் கேக்தேவையானவை : மைதா மாவு – 2 கப், சர்க்கரை – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், ஆப்பிள் – 1, செம்மாதுளை முத்துகள் – 1 கப், ஃப்ரூட் ஜாம் – 1 கப், துருவிய சீஸ் – 1 கப்..செய்முறை : ஆப்பிளை தோல் சீவி சன்னமாக அரைவட்ட ஸ்லைசாக வெட்டிக் கொள்ளவும். மாவில் உப்பையும், சர்க்கரையையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கட்டிகளில்லாமல் தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். நான்ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி உடனே மெல்லிய தோசைகளாக சுடவும். சிறிது சீஸை தூவவும். அதில் மெல்லிய ஸ்லைசான ஆறு ஆப்பிள் துண்டுகள் அடுக்கி, ஜாமைத் தடவவும். அதன் மேல் மாதுளையையும் தூவவும். ஆப்பிளும், மாதுளையும் தெரிவது போல் அரை வட்டமாக மடக்கி எடுத்துப் பரிமாறவும்..எக்லெஸ் சாக்லேட் காபி கேக்தேவையானவை : மைதா – ஒன்றரை கப், கோகோ பவுடர் – 2 டீஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – ஒன்றரை ஸ்பூன், பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சர்க்கரை பொடித்தது – 1 கப், வெஜிடபிள் ஆயில் – அரை கப், தண்ணீர் – 1 கப், வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன், வினிகர் – 2 டீஸ்பூன்..செய்முறை : எலக்ட்ரிக் அவனை 375 டிகிரி ஃப்ரான்ஹிட்டில் சூடாக்கி வைக்கவும். பேகிங் பிளேட்டில் வெஜிடபிள் ஆயிலைத் தடவவும். அதில் மைதா, கோகோ, காபி, பேகிங் சோடா, உப்பு, சர்க்கரை கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெஜிடபிள் ஆயில், வெனிலா எஸன்ஸ் தண்ணீர் மூன்றையும் கலந்து, கலந்து வைத்த மாவுடன் நன்றாகக் கலக்கவும். பிறகு வினிகரை ஊற்றிக் கலந்து, ஏற்கெனவே சூடாக்கிய எலக்ட்ரிக் அவனில் வைத்து 25 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வைத்து எடுத்து துண்டுகள் போடவும்..ஃப்ரூட் கேக்தேவையானவை : மைதா – ஒன்றரை கப், வெண்ணெய் – 100 கிராம், பொடியான சர்க்கரை – ஒன்றரை கப், பொடி செய்த பட்டை, கிராம்பு – 1 டீஸ்பூன், சமையல் சோடா, பேகிங் பவுடர் – தலா 1 டீஸ்பூன், பால் – 2 தம்ளர், உலர்ந்த திராட்சை – 15, முந்திரி – 15, செர்ரி உலர்ந்தது – 1 டீஸ்பூன், (பழங்கள் – 2 ஸ்பூன் பிடித்தது) உப்பு – சிட்டிகை, நெய் – சிறிது..செய்முறை : மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, பேகிங் சோடா, பொடி செய்த பட்டை, கிராம்பு கலந்து சல்லடையில் சலிக்கவும். திராட்சைகளை துண்டு போடவும். சர்க்கரை, வெண்ணெய் இவற்றை மிக நன்றாகக் கலந்து குழைத்து சலித்த மாவை, பால் விட்டு கலக்கவும். நெய் தடவிய தட்டில் மாவு தூவி, 2 பேக் செய்யும் தட்டில் மாவு பரப்பி 350 டிகிரி ஃப்ரான்ஹிட்டில் பேக் செய்து எடுக்கவும்..குயின் கப் கேக்தேவையானவை : மைதா மாவு – 1 கப், உப்பு – சிட்டிகை, வெண்ணெய் – 50 கிராம், சர்க்கரை – முக்கால் கப், முட்டை – 1, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மைதா மாவு, உப்பு இரண்டையும் சலித்து ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெய், சர்க்கரை க்ரீம் பதத்திற்கு வரும்வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடித்துக் கலக்கவும். இத்துடன் மைதா மாவையும், பாலையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் உலர்ந்த திராட்சை, செர்ரி கலந்தால் கேக் கலவை தயார். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதியளவு மட்டும் ஊற்றி அவனில் 170 டிகிரி சென்டிகிரேடில் 20 நிமிடம் வேக விடவும்..வாழைப்பழ நட் கேக்தேவையானவை : மைதா மாவு – ஒன்றரை கப், உப்பு – சிட்டிகை, வெண்ணெய், சர்க்கரை – தலா 100 கிராம், முட்டை – 2, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 4 டேபிள் ஸ்பூன், வாழைப்பழம் – 2, வால்நட் – 50 கிராம்..செய்முறை : மைதா மாவையும், உப்பையும் ஒன்றாகக் கலக்கவும். பின் சலிக்கவும். வெண்ணெய், முட்டையை எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸ் கலக்கவும். மசித்த வாழைப்பழம், வால் நட் கலந்து கொள்ளவும். இக்கலவையுடன் மைதா மாவு, பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய பிளேட்டில் வைத்து அவனில் 170 சென்டி கிரேடில் 40 நிமிடங்கள் வேக விடவும். கேக் வெந்ததும், அதை ஆற வைத்து, பத்து நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து துண்டு போடவும்.– எம்.வசந்தா, சென்னை.தோசைக்கல் கேக்தேவையானவை : மைதா மாவு – கால் கிலோ, சர்க்கரை – 200 கிராம், நெய் – 200 கிராம், முட்டை – 5, முந்திரி – 50 கிராம் (பொடித்தது), உலர் திராட்சை – 50 கிராம், எண்ணெய் – 200 மில்லி..செய்முறை : மிக்ஸியில் சர்க்கரையை நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அதில் மைதா, நெய், பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி கலந்துள்ள மாவை செவ்வக வடிவில் ஊற்றவும். மேலே பொடித்த முந்திரி, திராட்சையை தூவவும். வெந்ததும் திருப்பிப் போட்டு அதன் மேலே மீண்டும் அதே வடிவில் மாவை ஊற்றி மேலே முந்திரி, திராட்சை தூவவும். மூன்றாவது முறையும் இது போலவே செய்து எடுத்தால் தோசைக்கல் கேக் தயார்..முட்டை இஞ்சி ப்ரெட் கேக்தேவையானவை : மைதா – 150 கிராம், உப்பு – கால் டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், வெண்ணெய் – 60 கிராம், பால் – 100 மில்லி, சமையல் சோடா – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், இஞ்சித்தூள் – அரை டீஸ்பூன் (காய்ந்த இஞ்சி தூள்), கோல்டன் சிரப் – 30 கிராம், முந்திரி – பொடித்தது, ப்ளம்ஸ் – 50 கிராம்..செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, இஞ்சித் தூள் ஆகிய மூன்றையும் சலித்து, மைதாவுடன் சேர்க்கவும். வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து அது நன்கு உருகினதும் அதில் பாலை விடவும். பின் சர்க்கரைப் போடவும். அது சற்று ஆறியப் பிறகு கோல்டன் சிரப், முந்திரி பொடித்தது, ப்ளம்ஸ், மைதா கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் செய்யவும். அவனில் சுமார் 25 நிமிடம் வைத்து இறக்கி, சற்று ஆறிய பின் துண்டுப் போடவும்..குறிப்பு : கோல்டன் சிரப் தயாரிப்பது எப்படி எனில், அடுப்பில் பாத்திரத்தை வைத்து 100 கிராம் சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கிளறி, நன்கு புகை வரும்போது கால் பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பதுதான் 30 கிராம் கோல்டன் சிரப்..மேங்கோ கேக்தேவையானவை : மாம்பழம் பெரியது – 1, மைதா மாவு- 2 கப், சர்க்கரை – 1 கப், வெண்ணெய் – அரை கப், பேக்கிங் சோடா – 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, பால் – சிறிதளவு..செய்முறை : முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சலித்து மைதாவில் சேர்க்கவும். பின் அதில் மாம்பழ விழுது, வெண்ணெய், சர்க்கரை சேர்த்து மெதுவாகக் கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கவும். வாசனைக்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். குக்கரை பத்து நிமிடம் முன்னதாக சூடுப்படுத்திக் கொள்ளவும். பின் அதில் மாவுக் கலவையை வைக்கவும். கலவையை மூடி அதை வெப்ப நிலையில் (அடுப்பில்) வைக்கவும். 25 முதல் 35 நிமிடம் வைக்கவும். கேஸ்கட், குக்கர் வெயிட் தேவையில்லை. பின் இறக்கி கட் செய்து பரிமாறவும். சுவையான மாம்பழ கேக் தயார்.– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.ஈஸி கம் டேஸ்ட்டி கேக்தேவையானவை : ஃப்ரூட் கேக் (மீடியம்) – 4, பட்டர் க்ரீம் – 5 டேபிள் ஸ்பூன், டார்க் சாக்லேட் – ஒன்றரை கப், பொடி செய்த முந்திரி, பாதாம் பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் – 1 கப்..செய்முறை : ஒரு ஃபௌலில் ஃப்ரூட் கேக்கைப் போட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். இத்துடன் பட்டர் க்ரீமைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, ஒன்றோடு ஒன்று சேராவண்ணம் தட்டில் வைத்து ஃப்ரிட்ஜினுள் சுமார் ஒரு மணி நேரம் போல வைத்தெடுக்கவும்..வேறு ஒரு ஃபௌலில் டார்க் சாக்லேட்டைப் போட்டு டபுள் பாய்லிங் முறையில் உருக்கி எடுத்து, மெதுவாக ஒவ்வொரு உருண்டை மீதும் ஊற்றி மேலே பொடி செய்து வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ்களைத் தூவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். செய்வதும் ஈஸி! சாப்பிடவும் டேஸ்ட்டி!– ஆர்.மீனலதா, மும்பை..………………………………………………………. கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்….கேக்கை 'பேக்' செய்யும்போது பொடித்துப் போகாமல் இருக்க சிறிய சுத்தமான டவலை சூடுநீரில் முக்கிப் பிழிந்து, கேக்கின் மேல் பகுதியில் போட வேண்டும்.கேக் 'பேக்' செய்யும் அவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் 'பேக்' செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே அவனை சூடாக்கி விட வேண்டும்.கேக் 'பேக்' செய்யப்படும்போது அவனை திறந்து மூடக்கூடாது. திறந்து மூடினால் 'கேக்'கின் மென்மைத் தன்மை போய்விடும்..உலர்ந்த பழ வகைகளை கேக்குகளுக்குப் பயன்படுத்தும்போது அவற்றின் காம்புகளை நீக்கி விட வேண்டும்.பருப்பு வகைகளைச் சேர்க்கும்போது அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். இவற்றை கேக்கில் சேர்ப்பதற்கு முன்பு இவற்றின் மீது சிறிது மாவை தூவி வைக்க வேண்டும். விலை உயர்ந்த கேக்குகள் தயாரிக்கும்போது இப்படிச் செய்தால் பழ வகைகள் கேக்குகளின் அடியில் தங்கி விடாமல், கேக் முழுவதும் பரவி இருக்கும்.அக்ரூட் கொட்டையை உடைத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறிய நிலையில் கேக்குகளை எடுத்து அவற்றின் மேல் ஜாமைத் தடவி அதன் மேல் உடைந்த அக்ரூட் பருப்புகளையும் செர்ரி பழத் துண்டுகளையும் வரிசையாக மாற்றி மாற்றி அடுக்கினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.வட்டமான கேக்குகளின் விளிம்புகளில் வண்ண சிறு மிட்டாய்களை அடுக்கினால் பார்க்க அழகாக இருக்கும்.முந்திரிப் பருப்புகளை சிறு துண்டுகளாக்க வேண்டும். கேக்கின் பக்கவாட்டில் ஜாமைத் தடவிக்கொள்ள வேண்டும். துண்டுகளாக்கிய முந்திரியை ஒரு தட்டில் பரப்பி வட்டமான கேக்கின் ஓரம் அதில் படுமாறு வைத்துக் கேக்கை உருட்டினால் முந்திரித் துண்டுகள் ஓரத்தில் ஒட்டிக்கொள்ளும். பிறகு கேக்கின் மேல் பாகத்தில் ஜாமைத் தடவி முந்திரித் துண்டுகளைத் தூவி விடலாம். கலர்களையும் பருப்புகளில் சேர்த்துத் தூவினால் கண்ணுக்கு அழகாக இருக்கும்.கேக்கை செய்யும்போது கூடவே அதனை அலங்கரிப்பதையும் டிசைனையும் முடிவு பண்ணி வெண்ணெய்யால் வரைந்தால் கேக் சூப்பராக இருக்கும்.– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
ஆப்பிள் பேன் கேக்தேவையானவை : மைதா மாவு – 1 கப், ஆப்பிள் – 1, சர்க்கரை – 2 கப், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, உப்பு – சிறிது, ஏலப்பொடி – 1 டீஸ்பூன், லவங்கப்பட்டை தூள் – கால் டீஸ்பூன்..செய்முறை : மைதா மாவில் உப்பு, பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கவும். பின் தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். ஆப்பிளை விதை நீக்கி வட்டமாக வெட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வட்டமாக வெட்டிய ஆப்பிள் துண்டுகளை மைதாவில் தோய்த்து போட்டு பூரி போல பொரிக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று கப் நீர் விட்டு சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் பாகு கெட்டியாகாமல் இருக்கும். பட்டைத் தூள் சேர்க்கவும்.பொரித்த பேன் கேக்கை சர்க்கரைப் பாகில் ஊற வைத்து ஒரு அகலமான தட்டில் பரத்தி வைக்கவும். பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். சூப்பர் பேன் கேக் இது..டேட்ஸ் கேக்தேவையானவை : விதையில்லா பேரீச்சம் பழம் – 1 கப், மைதா மாவு – 1 கப், சர்க்கரை -அரை கப், தண்ணீர் – 2 கப், ரீஃபண்ட் ஆயில் – அரை கப், பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு – தலா 2 (பொடித்தது)..செய்முறை : மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்கு கலந்து வைக்கவும். பேரீச்சையை பொடியாக துண்டு போடவும். தண்ணீரில் சர்க்கரை, எண்ணெய், பேரீச்சம் பழம், பட்டை, கிராம்பு பொடி போட்டு நன்கு வேக விடவும். சிம்மில் பதினைந்து நிமிடம் வெந்ததும் இறக்கி ஆற வைத்து ஃபிரிஜ்ஜில் நான்கு மணி நேரம் வைக்கவும். அதை எடுத்து ஜில்லிப்பு போனவுடன் மைதா, பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் பிசையவும். பேக் செய்யும் தட்டில் மைதாவைத் தூவி இந்த மாவை கொட்டி செட் செய்யவும்.சூடு படுத்தப்பட்ட தோசைக்கல்லில் மாவைக் கொட்டி நாற்பது நிமிடங்கள் பேக் செய்யவும். அல்லது குக்கரில் நீர் ஊற்றி உள்ளே பாத்திரத்தில் வைத்து வெயிட் போடாமல் இருபது நிமிடம் வேக விடவும். ஆறியவுடன் துண்டுகள் போடவும்..ஸ்வீட் பான் கேக்தேவையானவை : மைதா மாவு – 2 கப், சர்க்கரை – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், ஆப்பிள் – 1, செம்மாதுளை முத்துகள் – 1 கப், ஃப்ரூட் ஜாம் – 1 கப், துருவிய சீஸ் – 1 கப்..செய்முறை : ஆப்பிளை தோல் சீவி சன்னமாக அரைவட்ட ஸ்லைசாக வெட்டிக் கொள்ளவும். மாவில் உப்பையும், சர்க்கரையையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கட்டிகளில்லாமல் தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். நான்ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி உடனே மெல்லிய தோசைகளாக சுடவும். சிறிது சீஸை தூவவும். அதில் மெல்லிய ஸ்லைசான ஆறு ஆப்பிள் துண்டுகள் அடுக்கி, ஜாமைத் தடவவும். அதன் மேல் மாதுளையையும் தூவவும். ஆப்பிளும், மாதுளையும் தெரிவது போல் அரை வட்டமாக மடக்கி எடுத்துப் பரிமாறவும்..எக்லெஸ் சாக்லேட் காபி கேக்தேவையானவை : மைதா – ஒன்றரை கப், கோகோ பவுடர் – 2 டீஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் – ஒன்றரை ஸ்பூன், பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சர்க்கரை பொடித்தது – 1 கப், வெஜிடபிள் ஆயில் – அரை கப், தண்ணீர் – 1 கப், வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன், வினிகர் – 2 டீஸ்பூன்..செய்முறை : எலக்ட்ரிக் அவனை 375 டிகிரி ஃப்ரான்ஹிட்டில் சூடாக்கி வைக்கவும். பேகிங் பிளேட்டில் வெஜிடபிள் ஆயிலைத் தடவவும். அதில் மைதா, கோகோ, காபி, பேகிங் சோடா, உப்பு, சர்க்கரை கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெஜிடபிள் ஆயில், வெனிலா எஸன்ஸ் தண்ணீர் மூன்றையும் கலந்து, கலந்து வைத்த மாவுடன் நன்றாகக் கலக்கவும். பிறகு வினிகரை ஊற்றிக் கலந்து, ஏற்கெனவே சூடாக்கிய எலக்ட்ரிக் அவனில் வைத்து 25 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வைத்து எடுத்து துண்டுகள் போடவும்..ஃப்ரூட் கேக்தேவையானவை : மைதா – ஒன்றரை கப், வெண்ணெய் – 100 கிராம், பொடியான சர்க்கரை – ஒன்றரை கப், பொடி செய்த பட்டை, கிராம்பு – 1 டீஸ்பூன், சமையல் சோடா, பேகிங் பவுடர் – தலா 1 டீஸ்பூன், பால் – 2 தம்ளர், உலர்ந்த திராட்சை – 15, முந்திரி – 15, செர்ரி உலர்ந்தது – 1 டீஸ்பூன், (பழங்கள் – 2 ஸ்பூன் பிடித்தது) உப்பு – சிட்டிகை, நெய் – சிறிது..செய்முறை : மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, பேகிங் சோடா, பொடி செய்த பட்டை, கிராம்பு கலந்து சல்லடையில் சலிக்கவும். திராட்சைகளை துண்டு போடவும். சர்க்கரை, வெண்ணெய் இவற்றை மிக நன்றாகக் கலந்து குழைத்து சலித்த மாவை, பால் விட்டு கலக்கவும். நெய் தடவிய தட்டில் மாவு தூவி, 2 பேக் செய்யும் தட்டில் மாவு பரப்பி 350 டிகிரி ஃப்ரான்ஹிட்டில் பேக் செய்து எடுக்கவும்..குயின் கப் கேக்தேவையானவை : மைதா மாவு – 1 கப், உப்பு – சிட்டிகை, வெண்ணெய் – 50 கிராம், சர்க்கரை – முக்கால் கப், முட்டை – 1, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 டேபிள் ஸ்பூன்..செய்முறை : மைதா மாவு, உப்பு இரண்டையும் சலித்து ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெய், சர்க்கரை க்ரீம் பதத்திற்கு வரும்வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடித்துக் கலக்கவும். இத்துடன் மைதா மாவையும், பாலையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் உலர்ந்த திராட்சை, செர்ரி கலந்தால் கேக் கலவை தயார். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதியளவு மட்டும் ஊற்றி அவனில் 170 டிகிரி சென்டிகிரேடில் 20 நிமிடம் வேக விடவும்..வாழைப்பழ நட் கேக்தேவையானவை : மைதா மாவு – ஒன்றரை கப், உப்பு – சிட்டிகை, வெண்ணெய், சர்க்கரை – தலா 100 கிராம், முட்டை – 2, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 4 டேபிள் ஸ்பூன், வாழைப்பழம் – 2, வால்நட் – 50 கிராம்..செய்முறை : மைதா மாவையும், உப்பையும் ஒன்றாகக் கலக்கவும். பின் சலிக்கவும். வெண்ணெய், முட்டையை எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸ் கலக்கவும். மசித்த வாழைப்பழம், வால் நட் கலந்து கொள்ளவும். இக்கலவையுடன் மைதா மாவு, பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய பிளேட்டில் வைத்து அவனில் 170 சென்டி கிரேடில் 40 நிமிடங்கள் வேக விடவும். கேக் வெந்ததும், அதை ஆற வைத்து, பத்து நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து துண்டு போடவும்.– எம்.வசந்தா, சென்னை.தோசைக்கல் கேக்தேவையானவை : மைதா மாவு – கால் கிலோ, சர்க்கரை – 200 கிராம், நெய் – 200 கிராம், முட்டை – 5, முந்திரி – 50 கிராம் (பொடித்தது), உலர் திராட்சை – 50 கிராம், எண்ணெய் – 200 மில்லி..செய்முறை : மிக்ஸியில் சர்க்கரையை நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து அதில் மைதா, நெய், பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அடுப்பில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி கலந்துள்ள மாவை செவ்வக வடிவில் ஊற்றவும். மேலே பொடித்த முந்திரி, திராட்சையை தூவவும். வெந்ததும் திருப்பிப் போட்டு அதன் மேலே மீண்டும் அதே வடிவில் மாவை ஊற்றி மேலே முந்திரி, திராட்சை தூவவும். மூன்றாவது முறையும் இது போலவே செய்து எடுத்தால் தோசைக்கல் கேக் தயார்..முட்டை இஞ்சி ப்ரெட் கேக்தேவையானவை : மைதா – 150 கிராம், உப்பு – கால் டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், வெண்ணெய் – 60 கிராம், பால் – 100 மில்லி, சமையல் சோடா – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், இஞ்சித்தூள் – அரை டீஸ்பூன் (காய்ந்த இஞ்சி தூள்), கோல்டன் சிரப் – 30 கிராம், முந்திரி – பொடித்தது, ப்ளம்ஸ் – 50 கிராம்..செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, இஞ்சித் தூள் ஆகிய மூன்றையும் சலித்து, மைதாவுடன் சேர்க்கவும். வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து அது நன்கு உருகினதும் அதில் பாலை விடவும். பின் சர்க்கரைப் போடவும். அது சற்று ஆறியப் பிறகு கோல்டன் சிரப், முந்திரி பொடித்தது, ப்ளம்ஸ், மைதா கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் செய்யவும். அவனில் சுமார் 25 நிமிடம் வைத்து இறக்கி, சற்று ஆறிய பின் துண்டுப் போடவும்..குறிப்பு : கோல்டன் சிரப் தயாரிப்பது எப்படி எனில், அடுப்பில் பாத்திரத்தை வைத்து 100 கிராம் சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கிளறி, நன்கு புகை வரும்போது கால் பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பதுதான் 30 கிராம் கோல்டன் சிரப்..மேங்கோ கேக்தேவையானவை : மாம்பழம் பெரியது – 1, மைதா மாவு- 2 கப், சர்க்கரை – 1 கப், வெண்ணெய் – அரை கப், பேக்கிங் சோடா – 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, பால் – சிறிதளவு..செய்முறை : முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சலித்து மைதாவில் சேர்க்கவும். பின் அதில் மாம்பழ விழுது, வெண்ணெய், சர்க்கரை சேர்த்து மெதுவாகக் கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கவும். வாசனைக்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். குக்கரை பத்து நிமிடம் முன்னதாக சூடுப்படுத்திக் கொள்ளவும். பின் அதில் மாவுக் கலவையை வைக்கவும். கலவையை மூடி அதை வெப்ப நிலையில் (அடுப்பில்) வைக்கவும். 25 முதல் 35 நிமிடம் வைக்கவும். கேஸ்கட், குக்கர் வெயிட் தேவையில்லை. பின் இறக்கி கட் செய்து பரிமாறவும். சுவையான மாம்பழ கேக் தயார்.– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.ஈஸி கம் டேஸ்ட்டி கேக்தேவையானவை : ஃப்ரூட் கேக் (மீடியம்) – 4, பட்டர் க்ரீம் – 5 டேபிள் ஸ்பூன், டார்க் சாக்லேட் – ஒன்றரை கப், பொடி செய்த முந்திரி, பாதாம் பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் – 1 கப்..செய்முறை : ஒரு ஃபௌலில் ஃப்ரூட் கேக்கைப் போட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். இத்துடன் பட்டர் க்ரீமைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, ஒன்றோடு ஒன்று சேராவண்ணம் தட்டில் வைத்து ஃப்ரிட்ஜினுள் சுமார் ஒரு மணி நேரம் போல வைத்தெடுக்கவும்..வேறு ஒரு ஃபௌலில் டார்க் சாக்லேட்டைப் போட்டு டபுள் பாய்லிங் முறையில் உருக்கி எடுத்து, மெதுவாக ஒவ்வொரு உருண்டை மீதும் ஊற்றி மேலே பொடி செய்து வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ்களைத் தூவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். செய்வதும் ஈஸி! சாப்பிடவும் டேஸ்ட்டி!– ஆர்.மீனலதா, மும்பை..………………………………………………………. கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்….கேக்கை 'பேக்' செய்யும்போது பொடித்துப் போகாமல் இருக்க சிறிய சுத்தமான டவலை சூடுநீரில் முக்கிப் பிழிந்து, கேக்கின் மேல் பகுதியில் போட வேண்டும்.கேக் 'பேக்' செய்யும் அவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் 'பேக்' செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே அவனை சூடாக்கி விட வேண்டும்.கேக் 'பேக்' செய்யப்படும்போது அவனை திறந்து மூடக்கூடாது. திறந்து மூடினால் 'கேக்'கின் மென்மைத் தன்மை போய்விடும்..உலர்ந்த பழ வகைகளை கேக்குகளுக்குப் பயன்படுத்தும்போது அவற்றின் காம்புகளை நீக்கி விட வேண்டும்.பருப்பு வகைகளைச் சேர்க்கும்போது அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். இவற்றை கேக்கில் சேர்ப்பதற்கு முன்பு இவற்றின் மீது சிறிது மாவை தூவி வைக்க வேண்டும். விலை உயர்ந்த கேக்குகள் தயாரிக்கும்போது இப்படிச் செய்தால் பழ வகைகள் கேக்குகளின் அடியில் தங்கி விடாமல், கேக் முழுவதும் பரவி இருக்கும்.அக்ரூட் கொட்டையை உடைத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறிய நிலையில் கேக்குகளை எடுத்து அவற்றின் மேல் ஜாமைத் தடவி அதன் மேல் உடைந்த அக்ரூட் பருப்புகளையும் செர்ரி பழத் துண்டுகளையும் வரிசையாக மாற்றி மாற்றி அடுக்கினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.வட்டமான கேக்குகளின் விளிம்புகளில் வண்ண சிறு மிட்டாய்களை அடுக்கினால் பார்க்க அழகாக இருக்கும்.முந்திரிப் பருப்புகளை சிறு துண்டுகளாக்க வேண்டும். கேக்கின் பக்கவாட்டில் ஜாமைத் தடவிக்கொள்ள வேண்டும். துண்டுகளாக்கிய முந்திரியை ஒரு தட்டில் பரப்பி வட்டமான கேக்கின் ஓரம் அதில் படுமாறு வைத்துக் கேக்கை உருட்டினால் முந்திரித் துண்டுகள் ஓரத்தில் ஒட்டிக்கொள்ளும். பிறகு கேக்கின் மேல் பாகத்தில் ஜாமைத் தடவி முந்திரித் துண்டுகளைத் தூவி விடலாம். கலர்களையும் பருப்புகளில் சேர்த்துத் தூவினால் கண்ணுக்கு அழகாக இருக்கும்.கேக்கை செய்யும்போது கூடவே அதனை அலங்கரிப்பதையும் டிசைனையும் முடிவு பண்ணி வெண்ணெய்யால் வரைந்தால் கேக் சூப்பராக இருக்கும்.– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி