
"எதுக்கு மன்னர் ரொம்ப சோகமாக இருக்கிறார்?"
"பதுங்கு குழியும் வெள்ளத்தில் முழ்கி விட்டதாம்!"
– மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்
………………………………………………………………………..
"இன்ஸ்பெக்டர் ஐயா, என் மனைவிய கடத்திட்டாங்க போலிருக்கு… மார்க்கெட்டிலிருந்து தக்காளியும், கத்தரிக்காயும் வாங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன்னு சொன்னா ஐயா!"
– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி
……………………………………………………………………….
"நம்ம தலைவர் மனைவி அப்பாவின்னு எதை வெச்சு சொல்ற?"
"தலைவர் பேருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிகைக்குகூட
நாலு மூலையிலே மஞ்சள் வைக்கிறாங்களே!"
– நிலா, திருச்சி
………………………………………………………………….
"நீங்க போட்ட சமையல் குறிப்பை
ஒரு லட்சம் பேர் பார்த்திருக்காங்களா?"
"ஆமாம்… தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது
எப்படின்னு ஒரு வீடியோ போட்டேன்!"
– ஆர்.யோகமித்ரா, சென்னை
……………………………………………………………………
"அந்த தியேட்டர்ல பேய் நடமாட்டம் இருக்காமே?"
"இருக்கும். ரொம்ப நாளா மனுஷங்க
நடமாட்டாமே இல்லையே!"
– வி.ரேவதி, தஞ்சை
………………………………………………………………….
"வில் எய்துவதில் எதிரி பலே ஆளாம் மன்னா!"
"அப்படியென்றால் அவன்தான் நமக்கு மெயின் வில்லன்!"
– வி.ரேவதி, தஞ்சை
…………………………………………………………………
"ஐயா! அந்தக் காதல் ஜோடிக்கு நீங்க ஸ்டேஷன்ல
திருமணம் பண்ணி வைச்சது ரொம்ப தப்பா போச்சு!"
"ஏன்? என்னாச்சு?"
"அந்தத் திருமண ஜோடி இந்த ஸ்டேஷனில்
முதலிரவை வைச்சிக்கலாமான்னு கேட்கிறாங்க!"
– ஜி.பாபு, திருச்சி