வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா, சென்னை.மழை மற்றும் பனிக்காலத்தில் நமது செரிமானத்தைத் துரிதப்படுத்தி இயல்பாக்குகிற உணவுகளும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் சாப்பிட வேண்டும். சுடச்சுட சாதமும் விறுவிறு துவையலும் தினம் தினம் சாப்பிட்டால் செரிமானத்துக்கு நல்லது. அதுபோன்ற சில துவையல் குறிப்புகளைக் காண்போம்..நெல்லித் துவையல்.தேவையானவை : பெரிய நெல்லிக்காய் – 6, மிளகாய் வற்றல் – 6, கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 ஸ்பூன், புளி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : பெரிய நெல்லிக்காயை கழுவி, இட்லி தட்டில் வேக வைத்து கொட்டையை நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் வறுத்த பொருட்களோடு வேக வைத்த நெல்லிக்காய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்..இதை நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சாப்பிடலாம். உடலுக்கு புஷ்டியைத் தரும். எளிதில் ஜீரணமாகும்..பூண்டு – கடலைப் பருப்பு துவையல்.தேவையானவை : கடலைப் பருப்பு – அரை கப், மிளகாய் வற்றல் – 6, பூண்டுப்பல் – 10, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : வெறும் கடாயில் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், உரித்த பூண்டுப்பல் ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இது உணவை ஜீரணிக்கவும், ஜுரம் போன்ற நோய்களிலிருந்து வாய் கசப்பை நீக்கி சுவை தூண்டுதலையும் தரும்..வேப்பம் பூ துவையல்.தேவையானவை : வேப்பம் பூ – 1 டீஸ்பூன், மாங்காய் நறுக்கியது – கால் கப், பச்சை மிளகாய் – 2, புளி – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், கருப்பட்டி தூள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வேப்பம் பூவை வறுத்து எடுக்கவும். அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் வேப்பம்பூ, புளி, உப்பு போட்டு அரைத்து கடைசியில் கருப்பட்டித் தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட, ரத்த சோகை குணமாகும்..எள் துவையல்.தேவையானவை : கறுப்பு எள் – 2 கப், பூண்டு – 6 பல், பெருங்காயம் – சிட்டிகை, மிளகாய் வற்றல் – 5, புளி, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், எள்ளை கருகாமல் வறுக்கவும். பூண்டையும் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் எள், மிளகாய், பூண்டு, பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இந்தத் துவையலை சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தியும் ரத்த சோகையும் குணமாகும்..சீரகத் துவையல்.தேவையானவை : சீரகம் – ஒன்றரை தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் – 6, உளுந்து – 2 ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், வெங்காயம் – 1, கடுகு – கால் ஸ்பூன், புளி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், கடுகு, மிளகாய், உளுந்து வறுத்து கடைசியில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட, எளிதில் ஜீரணமாகும் துவையல் இது. சுவையாக இருக்கும்..கொள்ளு திரிகடுகுத் துவையல்.தேவையானவை : கொள்ளு – கால் கப், சுக்கு – 5 கிராம், மிளகு – 5 கிராம், திப்பிலி – 2, சிவப்பு மிளகாய் – 3, புளி – சிறிது, தனியா – ஒன்றரை ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியில் கொள்ளை சிவக்க வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, மிளகாய், தனியா, மிளகு, திப்பிலி வறுக்கவும். சுக்கையும் தட்டிப் போடவும். மிக்ஸியில் பொடித்த பின் உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைக்கவும். இது பித்தம், வாதம் போன்றவற்றுக்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் நல்லது..ஓமவல்லி துவையல்.தேவையானவை : ஓமவல்லி (கற்பூரவல்லி) இலைகள் – 20, சிவப்பு மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – கால் கப், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் – தலா அரை ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : கற்பூரவல்லி இலைகளை சுத்தம் செய்து காம்பை எடுத்துவிட்டு பத்து நிமிடங்கள் நீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு இலைகளைப் போட்டு நன்கு சுருங்கும் வரை வதக்கவும். ஆறிய பின் மிளகாய், புளி, உப்பு, தேங்காய் சிறிது, வெல்லம் சேர்த்து அரைக்கவும். மார்புச் சளி, இருமலை கட்டுப்படுத்தும். சுடச்சுட சாதத்தில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அருமையான மூலிகைத் துவையல் இது..வல்லாரைத் துவையல்.தேவையானவை : வல்லாரைக் கீரை – 1 கைப்பிடி, சிவப்பு மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒன்றரை ஸ்பூன், உளுந்து – ஒன்றரை ஸ்பூன், புளி – நெல்லி அளவு, கடுகு, பெருங்காயம், சீரகம் – தாளிக்க, எண்ணெய் – 1 ஸ்பூன்..செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், பருப்பு வகைகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். கீரையை சுத்தம் செய்து எண்ணெயில் நன்றாக சுருங்கும் வரை வதக்கவும். ஆறியதும் அனைத்தும் சேர்த்து கரைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். துவர்ப்பும், கசப்பும் நிறைந்த இந்தத் துவையல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். குளிர்காலத்திற்கேற்றது.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.– எம்.வசந்தா, சென்னை.மழை மற்றும் பனிக்காலத்தில் நமது செரிமானத்தைத் துரிதப்படுத்தி இயல்பாக்குகிற உணவுகளும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் சாப்பிட வேண்டும். சுடச்சுட சாதமும் விறுவிறு துவையலும் தினம் தினம் சாப்பிட்டால் செரிமானத்துக்கு நல்லது. அதுபோன்ற சில துவையல் குறிப்புகளைக் காண்போம்..நெல்லித் துவையல்.தேவையானவை : பெரிய நெல்லிக்காய் – 6, மிளகாய் வற்றல் – 6, கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 ஸ்பூன், புளி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : பெரிய நெல்லிக்காயை கழுவி, இட்லி தட்டில் வேக வைத்து கொட்டையை நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் வறுத்த பொருட்களோடு வேக வைத்த நெல்லிக்காய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்..இதை நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சாப்பிடலாம். உடலுக்கு புஷ்டியைத் தரும். எளிதில் ஜீரணமாகும்..பூண்டு – கடலைப் பருப்பு துவையல்.தேவையானவை : கடலைப் பருப்பு – அரை கப், மிளகாய் வற்றல் – 6, பூண்டுப்பல் – 10, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : வெறும் கடாயில் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், உரித்த பூண்டுப்பல் ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இது உணவை ஜீரணிக்கவும், ஜுரம் போன்ற நோய்களிலிருந்து வாய் கசப்பை நீக்கி சுவை தூண்டுதலையும் தரும்..வேப்பம் பூ துவையல்.தேவையானவை : வேப்பம் பூ – 1 டீஸ்பூன், மாங்காய் நறுக்கியது – கால் கப், பச்சை மிளகாய் – 2, புளி – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், கருப்பட்டி தூள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வேப்பம் பூவை வறுத்து எடுக்கவும். அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் வேப்பம்பூ, புளி, உப்பு போட்டு அரைத்து கடைசியில் கருப்பட்டித் தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட, ரத்த சோகை குணமாகும்..எள் துவையல்.தேவையானவை : கறுப்பு எள் – 2 கப், பூண்டு – 6 பல், பெருங்காயம் – சிட்டிகை, மிளகாய் வற்றல் – 5, புளி, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், எள்ளை கருகாமல் வறுக்கவும். பூண்டையும் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் எள், மிளகாய், பூண்டு, பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இந்தத் துவையலை சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தியும் ரத்த சோகையும் குணமாகும்..சீரகத் துவையல்.தேவையானவை : சீரகம் – ஒன்றரை தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் – 6, உளுந்து – 2 ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், வெங்காயம் – 1, கடுகு – கால் ஸ்பூன், புளி – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், கடுகு, மிளகாய், உளுந்து வறுத்து கடைசியில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட, எளிதில் ஜீரணமாகும் துவையல் இது. சுவையாக இருக்கும்..கொள்ளு திரிகடுகுத் துவையல்.தேவையானவை : கொள்ளு – கால் கப், சுக்கு – 5 கிராம், மிளகு – 5 கிராம், திப்பிலி – 2, சிவப்பு மிளகாய் – 3, புளி – சிறிது, தனியா – ஒன்றரை ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : ஒரு வாணலியில் கொள்ளை சிவக்க வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, மிளகாய், தனியா, மிளகு, திப்பிலி வறுக்கவும். சுக்கையும் தட்டிப் போடவும். மிக்ஸியில் பொடித்த பின் உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைக்கவும். இது பித்தம், வாதம் போன்றவற்றுக்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் நல்லது..ஓமவல்லி துவையல்.தேவையானவை : ஓமவல்லி (கற்பூரவல்லி) இலைகள் – 20, சிவப்பு மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – கால் கப், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் – தலா அரை ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப..செய்முறை : கற்பூரவல்லி இலைகளை சுத்தம் செய்து காம்பை எடுத்துவிட்டு பத்து நிமிடங்கள் நீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு இலைகளைப் போட்டு நன்கு சுருங்கும் வரை வதக்கவும். ஆறிய பின் மிளகாய், புளி, உப்பு, தேங்காய் சிறிது, வெல்லம் சேர்த்து அரைக்கவும். மார்புச் சளி, இருமலை கட்டுப்படுத்தும். சுடச்சுட சாதத்தில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அருமையான மூலிகைத் துவையல் இது..வல்லாரைத் துவையல்.தேவையானவை : வல்லாரைக் கீரை – 1 கைப்பிடி, சிவப்பு மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒன்றரை ஸ்பூன், உளுந்து – ஒன்றரை ஸ்பூன், புளி – நெல்லி அளவு, கடுகு, பெருங்காயம், சீரகம் – தாளிக்க, எண்ணெய் – 1 ஸ்பூன்..செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், பருப்பு வகைகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். கீரையை சுத்தம் செய்து எண்ணெயில் நன்றாக சுருங்கும் வரை வதக்கவும். ஆறியதும் அனைத்தும் சேர்த்து கரைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். துவர்ப்பும், கசப்பும் நிறைந்த இந்தத் துவையல் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். குளிர்காலத்திற்கேற்றது.