– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு .லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும் தடம் பதித்து வருகிறவர். மகாபாரதக் கதை தெருக்கூத்து நாடகங்களில் மாறி மாறி அவர் ஒருவர் மட்டுமே சகுனியாகவும், பாஞ்சாலி ஆகவும், நாகக் கன்னியாகவும், திரௌபதியாகவும் பெண் வேடங்கள் பூண்டு நடித்து வருகிறார். அவரிடம் நாம் நேரில் பேசினோம்.. இந்த ஆர்வம் உங்களிடம் எப்படி வேரூன்றியது? .லால்குடியில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு பெரிய திருவிழா நடைபெறும். அதில் மகாபாரதக் கதைகளின் பல்வேறு நிகழ்வுகளை தெருக்கூத்து நாடகமாக நடத்துவார் எனது தாத்தா சுப்பிரமணிய பிள்ளை. அவருடனே எனது தந்தையார் தங்கையா பிள்ளையும் பங்கேற்று நடிப்பார். அவைகளின் பாடல்களையும் கதை அம்சங்களையும் எனது தாத்தாவும் எனது அப்பாவும் எழுதி வைத்துள்ளார்கள். அவைகளே எனக்கு இப்போதும் துணை நிற்கின்றன. மேலும் நான் அவைகளை நம் சம காலத்துக்கு ஏற்றார்போல மாற்றியமைத்தும் தெருக்கூத்துகளை நடத்துகிறேன். மூன்றாவது தலைமுறையாக நானும் தொடர்ந்து அவைகளில் இயங்கி வருகிறேன். எனக்கு இதில் ஆத்ம திருப்தி..குழுவாக இயங்குகிறீர்களா? .'பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம் குழு' என்கிற பேனரில் பத்து கலைஞர்கள் இயங்கி வருகிறோம். நாங்கள் எங்கும் வெளியூர்களுக்குச் சென்று நடத்துவதில்லை. வெளியூர்க்காரர்கள் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டால், நான் அந்த ஊர்க்காரர்களுக்குப் பயிற்சி அளித்து, அங்கு சென்று அந்தத் தெருக்கூத்து நாடகத்தினை இயக்கித் தருகிறேன். இதற்கான காரணம், இந்தக் கலை மற்றவர்களிடமும் சென்று சேரட்டும், பரவட்டும் என்பதே. பின்னர் அவர்களே அந்த ஊர்களில் தாங்களாகவே தனியாக நடத்திக் கொள்வார்கள் என்கிற நோக்கம் தான். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் நாடகக் குழு ஒன்றிற்கு தெருக்கூத்துக் கலை நாடகங்கள் பயிற்றுவித்தேன். அந்த ஆண்டில் அவர்கள் குறிப்பிட்ட தெருக்கூத்துக் கலை நாடகம் சார்ந்து பல்கலை அளவில் பரிசு பெற்றார்கள். எனக்கு மிகவும் சந்தோசமான தருணம் அது..மகாபாரதக் கதைகள் சார்ந்து தெருக்கூத்துக் கலையினை லால்குடியில் எத்தனை நாட்கள் நடத்துகிறீர்கள்? .எனது தாத்தா அப்பா காலங்களில் ஐந்தாறு நாட்கள் இரவு நேரங்களில் முழு இரவுப் பொழுதும் நடைபெறும். நான் இப்போது அவைகளை இரண்டு நாட்கள் இரவு தெருக்கூத்தாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளேன். லால்குடி திரௌபதி அம்மன் கோயிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். அந்தக் கோயில் வாசலில் இரவு தெருக்கூத்து நிகழ்த்துவோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கும். அதிகாலை இரண்டு மணிக்கு நிறைவு பெறும். ஐந்து ஒப்பனைக் கலைஞர்கள் உட்பட பதினைந்து பேர். அதிலும் எனக்குப் பெண் வேடங்கள் ஒப்பனை செய்து முடிக்க மூன்று மணி நேரம் ஆகும்..மகாபாரதக் கதைகளில் என்னென்ன நாடகங்கள் தெருக்கூத்தாக நிகழ்த்துகிறீர்கள்? .முதல் நாள் இரவு, சொக்கட்டான் நாடகம் எனப்படும் சூது ஆடுதல் ஒரு தெருக்கூத்து. அதனைத் தொடர்ந்து பாஞ்சாலி துகிலுரிதல் நாடகம். இந்த இரண்டும் அன்றைய ஒரு நாளிலே நடைபெறும். அடுத்து இரண்டாம் நாள் இரவு, அரவான் களப்பலி நாடகம். திரௌபதி கூந்தல் முடிதல் நாடகம். இவைகளில் சூதாட்டம் நடக்கும் சொக்கட்டான் நாடகத்தில் சகுனி வேடம் எனக்கு. பாஞ்சாலி துகிலுரிதல் நாடகத்தில் பாஞ்சாலி வேடம் எனக்கு. அரவான் களப்பலி நாடகத்தில் அரவானின் தாயார் நாகக்கன்னியாக வேடம் எனக்கு. இதில் பாஞ்சாலி துகிலுரிதல் மிக முக்கிய நாடகம். பொதுவாக அந்த நாடகத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம். அதிலும் பெண்கள் அதிகம். காரணம், பெண்களில் பலரும் திரௌபதி அம்மனிடம் அன்று தங்களின் வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பார்கள்..பாஞ்சாலி துகிலுரிதலுக்காக புதுப் புடவைகள் கொண்டு வந்து தருவார்கள். துகிலுரிதல் நிகழ்வில் பெண்கள் தந்த அந்தப் புடவைகள்தான் பயன் படுத்தப்படும். திருமணத் தடை நீங்குதல், குழந்தைப்பேறு போன்றவை களுக்காக பெண்கள் வேண்டுதல் செய்துக் கொண்டு புடவை தருவார்கள். தெருக்கூத்தில் பாஞ்சாலி துகிலுரிதல் நிகழ்ந்த பின்னர் அவரவர் புடவைகளை அவரவரிடம் திருப்பித் தந்து விடுவோம். பின்னர் அதனை அவர்கள் அவ்வப்போது அணிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் வேண்டுதல் பலிக்கும் என்பது ஐதீகம் மட்டுமல்ல. நிரூபணம் ஆகி நடக்கும் ஒன்றாகும். இந்த இரண்டு நாட்கள் கடந்து மூன்றாம் நாள் மிகவும் பிரபலமான திரௌபதி அம்மன் தீ மிதித் திருவிழா நடைபெறும்..அதில் என்ன அத்தனைச் சிறப்பு? .லால்குடி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் மிகப் பெரிய பூக்குழி எனப்படும் மிக அகல நீளமான தீமிதி அக்னிக் குண்டம் உருவாக்கப்படும். முப்பத்தியொரு அடி நீளம். இருபத்தியொரு அடி அகலம். தமிழகத்தில் வேறு எங்குமே இந்த பிரம்மாண்ட அளவிலான நீள அகலத்தில் தீமிதி அக்னிக் குண்டம் அமைப்பதில்லை. நூற்றுக் கணக்கானோர் மிகுந்த பக்தியுடன் பூக்குழியில் இறங்கி நடந்து செல்வார்கள். இறுதியாகக் கோயில் பூசாரியார் தலையில் பூங்கரகம் சுமந்து பூக்குழியில் இறங்கி நடந்து செல்வார். அப்போது அவர் தலையில் சுமந்து வரும் பூங்கரகம் சுமார் ஏழடி உயரத்தில் அலங்கரிக்கப் பட்டிருக்கும். பூக்குழி இறங்கி நடந்து போகையில் எவர் தலையிலும் அத்தனை அடி உயர பூங்கரகம் சுமந்து செல்வதில்லை. காண்பதற்கு அத்தனைப் பரவசமாக இருக்கும்.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு .லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும் தடம் பதித்து வருகிறவர். மகாபாரதக் கதை தெருக்கூத்து நாடகங்களில் மாறி மாறி அவர் ஒருவர் மட்டுமே சகுனியாகவும், பாஞ்சாலி ஆகவும், நாகக் கன்னியாகவும், திரௌபதியாகவும் பெண் வேடங்கள் பூண்டு நடித்து வருகிறார். அவரிடம் நாம் நேரில் பேசினோம்.. இந்த ஆர்வம் உங்களிடம் எப்படி வேரூன்றியது? .லால்குடியில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு பெரிய திருவிழா நடைபெறும். அதில் மகாபாரதக் கதைகளின் பல்வேறு நிகழ்வுகளை தெருக்கூத்து நாடகமாக நடத்துவார் எனது தாத்தா சுப்பிரமணிய பிள்ளை. அவருடனே எனது தந்தையார் தங்கையா பிள்ளையும் பங்கேற்று நடிப்பார். அவைகளின் பாடல்களையும் கதை அம்சங்களையும் எனது தாத்தாவும் எனது அப்பாவும் எழுதி வைத்துள்ளார்கள். அவைகளே எனக்கு இப்போதும் துணை நிற்கின்றன. மேலும் நான் அவைகளை நம் சம காலத்துக்கு ஏற்றார்போல மாற்றியமைத்தும் தெருக்கூத்துகளை நடத்துகிறேன். மூன்றாவது தலைமுறையாக நானும் தொடர்ந்து அவைகளில் இயங்கி வருகிறேன். எனக்கு இதில் ஆத்ம திருப்தி..குழுவாக இயங்குகிறீர்களா? .'பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம் குழு' என்கிற பேனரில் பத்து கலைஞர்கள் இயங்கி வருகிறோம். நாங்கள் எங்கும் வெளியூர்களுக்குச் சென்று நடத்துவதில்லை. வெளியூர்க்காரர்கள் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டால், நான் அந்த ஊர்க்காரர்களுக்குப் பயிற்சி அளித்து, அங்கு சென்று அந்தத் தெருக்கூத்து நாடகத்தினை இயக்கித் தருகிறேன். இதற்கான காரணம், இந்தக் கலை மற்றவர்களிடமும் சென்று சேரட்டும், பரவட்டும் என்பதே. பின்னர் அவர்களே அந்த ஊர்களில் தாங்களாகவே தனியாக நடத்திக் கொள்வார்கள் என்கிற நோக்கம் தான். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் நாடகக் குழு ஒன்றிற்கு தெருக்கூத்துக் கலை நாடகங்கள் பயிற்றுவித்தேன். அந்த ஆண்டில் அவர்கள் குறிப்பிட்ட தெருக்கூத்துக் கலை நாடகம் சார்ந்து பல்கலை அளவில் பரிசு பெற்றார்கள். எனக்கு மிகவும் சந்தோசமான தருணம் அது..மகாபாரதக் கதைகள் சார்ந்து தெருக்கூத்துக் கலையினை லால்குடியில் எத்தனை நாட்கள் நடத்துகிறீர்கள்? .எனது தாத்தா அப்பா காலங்களில் ஐந்தாறு நாட்கள் இரவு நேரங்களில் முழு இரவுப் பொழுதும் நடைபெறும். நான் இப்போது அவைகளை இரண்டு நாட்கள் இரவு தெருக்கூத்தாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளேன். லால்குடி திரௌபதி அம்மன் கோயிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். அந்தக் கோயில் வாசலில் இரவு தெருக்கூத்து நிகழ்த்துவோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கும். அதிகாலை இரண்டு மணிக்கு நிறைவு பெறும். ஐந்து ஒப்பனைக் கலைஞர்கள் உட்பட பதினைந்து பேர். அதிலும் எனக்குப் பெண் வேடங்கள் ஒப்பனை செய்து முடிக்க மூன்று மணி நேரம் ஆகும்..மகாபாரதக் கதைகளில் என்னென்ன நாடகங்கள் தெருக்கூத்தாக நிகழ்த்துகிறீர்கள்? .முதல் நாள் இரவு, சொக்கட்டான் நாடகம் எனப்படும் சூது ஆடுதல் ஒரு தெருக்கூத்து. அதனைத் தொடர்ந்து பாஞ்சாலி துகிலுரிதல் நாடகம். இந்த இரண்டும் அன்றைய ஒரு நாளிலே நடைபெறும். அடுத்து இரண்டாம் நாள் இரவு, அரவான் களப்பலி நாடகம். திரௌபதி கூந்தல் முடிதல் நாடகம். இவைகளில் சூதாட்டம் நடக்கும் சொக்கட்டான் நாடகத்தில் சகுனி வேடம் எனக்கு. பாஞ்சாலி துகிலுரிதல் நாடகத்தில் பாஞ்சாலி வேடம் எனக்கு. அரவான் களப்பலி நாடகத்தில் அரவானின் தாயார் நாகக்கன்னியாக வேடம் எனக்கு. இதில் பாஞ்சாலி துகிலுரிதல் மிக முக்கிய நாடகம். பொதுவாக அந்த நாடகத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம். அதிலும் பெண்கள் அதிகம். காரணம், பெண்களில் பலரும் திரௌபதி அம்மனிடம் அன்று தங்களின் வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பார்கள்..பாஞ்சாலி துகிலுரிதலுக்காக புதுப் புடவைகள் கொண்டு வந்து தருவார்கள். துகிலுரிதல் நிகழ்வில் பெண்கள் தந்த அந்தப் புடவைகள்தான் பயன் படுத்தப்படும். திருமணத் தடை நீங்குதல், குழந்தைப்பேறு போன்றவை களுக்காக பெண்கள் வேண்டுதல் செய்துக் கொண்டு புடவை தருவார்கள். தெருக்கூத்தில் பாஞ்சாலி துகிலுரிதல் நிகழ்ந்த பின்னர் அவரவர் புடவைகளை அவரவரிடம் திருப்பித் தந்து விடுவோம். பின்னர் அதனை அவர்கள் அவ்வப்போது அணிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் வேண்டுதல் பலிக்கும் என்பது ஐதீகம் மட்டுமல்ல. நிரூபணம் ஆகி நடக்கும் ஒன்றாகும். இந்த இரண்டு நாட்கள் கடந்து மூன்றாம் நாள் மிகவும் பிரபலமான திரௌபதி அம்மன் தீ மிதித் திருவிழா நடைபெறும்..அதில் என்ன அத்தனைச் சிறப்பு? .லால்குடி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் மிகப் பெரிய பூக்குழி எனப்படும் மிக அகல நீளமான தீமிதி அக்னிக் குண்டம் உருவாக்கப்படும். முப்பத்தியொரு அடி நீளம். இருபத்தியொரு அடி அகலம். தமிழகத்தில் வேறு எங்குமே இந்த பிரம்மாண்ட அளவிலான நீள அகலத்தில் தீமிதி அக்னிக் குண்டம் அமைப்பதில்லை. நூற்றுக் கணக்கானோர் மிகுந்த பக்தியுடன் பூக்குழியில் இறங்கி நடந்து செல்வார்கள். இறுதியாகக் கோயில் பூசாரியார் தலையில் பூங்கரகம் சுமந்து பூக்குழியில் இறங்கி நடந்து செல்வார். அப்போது அவர் தலையில் சுமந்து வரும் பூங்கரகம் சுமார் ஏழடி உயரத்தில் அலங்கரிக்கப் பட்டிருக்கும். பூக்குழி இறங்கி நடந்து போகையில் எவர் தலையிலும் அத்தனை அடி உயர பூங்கரகம் சுமந்து செல்வதில்லை. காண்பதற்கு அத்தனைப் பரவசமாக இருக்கும்.