கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலும் வெளியூர்களுக்கு செல்வதுதான். இரண்டு வருடமாக எந்த ஊருக்கும் செல்லாததால் இந்த வருடம் கொடைக்கானல் சென்று நான்கு நாட்களாவது தங்கி மலர் கண்காட்சி மற்றும் இதர இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆவலுடன் காத்திருக்கிறோம்!-உஷா முத்துராமன் .கோடை விடுமுறை என்றாலே தாத்தா வீட்டிற்கு ஈரோடு செல்வோம்.பெரியம்மா சித்தி அத்தை என் எல்லோரும் வகை வகையான விருந்து மற்றும் அரட்டை சொல்லவே மிக்க மகிழ்ச்சி ஊற்றேடுக்கிறது.திருவிழா கொண்டாட்டம் களைகட்டும்.உறவுகளின் ஆனந்தக் களிப்பில் கோடை விடுமுறை கோலாகல கொண்டாட்டமே.-ப.சரவணன்.கோடை விடுமுறை நாட்களில், சில சமயங்களில் வெளியூர் பயணம் செல்வோம்.நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடு செல்வதுண்டு. அவர்களும் வருவார்கள். ஜாலியாக இருக்கும். இந்த Summer holidays — வீட்டுக்குள்ளே இருக்கும் துணி அலமாரி, புக் ஷெல்ஃப் க்ளீனிங் ஆரம்பம். ஆன்லைன் 'சுகம் சங்கீதம்' வகுப்பில் சேர்ந்து இந்தி பஜனை பாட்டுக்கள் கற்பது. புதுவித டிஷ் செய்து பார்ப்பது. படிப்பது, எழுதுவது, பாட்டு கேட்பது, எட்டு நடை போடுவது. இத்யாதி!இத்யாதி! என்று குஷியாக நகர்கிறது.-மீனலதா.கோடை விடுமுறையில் ,கோவில் கொடை விழாவுக்கு சம்பந்த காரரின் அன்பான அழைப்பின் பேரில் , குடும்பத்தோடு போயிருந்தேன். இந்த விழா ஏழு வருடத்திற்குப்பிறகு விமரிசையாக நடந்தது. "அரவான்"படப்புகழ் வாத்திய கலைஞர்கள் இசை விருந்து நடந்தது. கிராமத்துக்கே உரித்தான கரகாட்டம், பால் குடம், தீ சட்டி எடுத்தல், ஊர் மக்கள் வீட்டு வாசலில் பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தவர்களுக்கு (ஆணும், பெண்ணும்) வபுத்தாடை வாங்கி அணிவித்தல் , தீ சட்டி எந்தி வருபவர்களை, மனை(பலகை) போட்டு அமரவைத்து, மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் போன்றபக்தி பரவச நிகழ்ச்சிகளும், சிறார்களுக்கு ரங்க ராட்டினம், குடை ராட்டினம், வாச்சு மிட்டாய், தேங்காய் மிட்டாய் என்று வகை வகையான விளையாட்டு தித்திப்பில் கோடை விடுமுறையை விமரிசையாக கழித்தோம். மகள், மருமகன், பேரப்பிள்ளைகளோடு விழா முடிந்தும் கலகலப்பு குறையாமல் இருந்தது சம்சாரமான சம்பந்தகாரர் வீட்டில் சுவாமிக்கு கொடைவிழா, எங்களுக்கோ இன்ப கோடை விழா.-ஜானகி பரந்தாமன்.ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் நாங்கள் எங்கும் செல்வதில்லை. எங்க வீட்டில்தான் உடன் பிறப்புகளின் பிள்ளைகள், அவர்கள் பெற்றதுகள் என கூட்டம் சேரும். பீச், மால் என சுற்றி வருவோம். ஒருமுறையாவது ஊட்டி கொடைக்கானல் என சென்று ஒரு வாரத்தையாவது கழித்துவிட்டு வரலாம்னு நினைப்பேன். நடந்ததில்லை. இந்தமுறைதான் மார்ச்சில் கிளம்பி US வந்துட்டோம். மொத்தமா எஸ்கேப். இங்க வீட்டுக்குள் ஹீட்டர். வெளிய சென்றால் நடுங்கிக் கொண்டே நாட்களை நகர்த்துகிறோம்.-ஜெயகாந்தி மகாதேவன்.கோடை விடுமுறையில் எங்கே போவது? விலைவாசி எல்லாம் தாறுமாறாக இருக்கிறது. இரண்டு பேர் காலை டிபனை சாப்பிட்டால் 250 ரூபாய் பில் வருகிறது, ஆனால் வயிறு நிரம்பிய பாடு இல்லை. இந்த கோடை விடுமுறை வீட்டுலதான் கொண்டாடுகிறோம்.-சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்.கணவர் பணி ஓய்வு பெற்றபின் ,ஸ்பெஷலா கோடை விடுமுறை கொண்டாடுறது இல்லை. எல்லா நாளும் விடுமுறையே.-கோமதி சிவயம்.கோடை விடுமுறையில் பேரனுக்கு பிரம்மோபதேசம் செய்ய முடிவாகி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் அதனால ஊரிலிருந்து வெளிநாட்டிலிருந்து உறவுகள் வருகை விழா கொண்டாட்டம் என இந்த வருட கோடை விடுமுறை ஜாலியான கொண்டாட்டம் தான்.-ராதா நரசிம்மன்.பொதுவாக கோடையில் மலைவாச ஸ்தலங்களுக்குப் போவோம். சென்ற வாரம் வட மாநில திவ்யதேசக் கோவில்களுக்கு ஒரு வாரம் சென்று வந்தோம். இந்த வருடம் கோடை வெயிலில் இருந்து விடுபட சிம்லா, குளு, மணாலி ஆகிய இடங்களுக்கு ஜுன் முதல் வாரத்தில் சென்று ரோதங் பாசில் பனிச்சருக்கில் விளையாடி விட்டு வர ஏற்பாடு செய்திருக்கிறோம்-ஹேமலதா ஶ்ரீனிவாசன்.கோடை விடு முறையில் எங்காவது மலை பிரதேசம் செல்வோம். குழந்தைகள் வேலை, கல்யாணம் என்று ஆனவுடன், பெண் திருமணம் ஆகி அமெரிக்காவில் இருக்கிறாள். இரண்டு , மூன்று தரம் அங்கு சென்று விட்டோம். இப்போது மூன்று வருடமாக கொரோனா காரணமாக எங்கும் செல்லவில்லை. இந்த வருடம் ஜுன் மாதம் ஊட்டி போக ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.-உஷா பாஸ்கர்.சிறு வயதில் கோடை விடுமுறை பாட்டி வீட்டிற்கு செல்வது. பாட்டி வீடு நெல், மக்காச் சோளம், மரவள்ளி கிழங்கு, மிளகாய், தக்காளி வெங்காயம் என்று எல்லாம் விளையும் தோட்டம். விடுமுறை முழுவதும் இயற்கை காற்றை சுவாசித்து விவசாயம் பற்றி ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவிய ஆனந்தமான நாட்கள்.நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் பச்சை பசுமையான காலங்கள்.இப்போது ஊர் சுற்றி பார்க்க, ஆன்மீக சுற்றுலா என்று மாறிப் போனது.அதுவும் கடந்த இரண்டு வருடங்கள் எங்கும் செல்லவில்லை.தற்போது பப்ளிக் எக்ஸாம் எழுதுகிறார் மகன். அதன் பிறகு தான் என்ன என்று பார்க்கணும்.-பத்மாவதி மாணிக்கம்
கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலும் வெளியூர்களுக்கு செல்வதுதான். இரண்டு வருடமாக எந்த ஊருக்கும் செல்லாததால் இந்த வருடம் கொடைக்கானல் சென்று நான்கு நாட்களாவது தங்கி மலர் கண்காட்சி மற்றும் இதர இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆவலுடன் காத்திருக்கிறோம்!-உஷா முத்துராமன் .கோடை விடுமுறை என்றாலே தாத்தா வீட்டிற்கு ஈரோடு செல்வோம்.பெரியம்மா சித்தி அத்தை என் எல்லோரும் வகை வகையான விருந்து மற்றும் அரட்டை சொல்லவே மிக்க மகிழ்ச்சி ஊற்றேடுக்கிறது.திருவிழா கொண்டாட்டம் களைகட்டும்.உறவுகளின் ஆனந்தக் களிப்பில் கோடை விடுமுறை கோலாகல கொண்டாட்டமே.-ப.சரவணன்.கோடை விடுமுறை நாட்களில், சில சமயங்களில் வெளியூர் பயணம் செல்வோம்.நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடு செல்வதுண்டு. அவர்களும் வருவார்கள். ஜாலியாக இருக்கும். இந்த Summer holidays — வீட்டுக்குள்ளே இருக்கும் துணி அலமாரி, புக் ஷெல்ஃப் க்ளீனிங் ஆரம்பம். ஆன்லைன் 'சுகம் சங்கீதம்' வகுப்பில் சேர்ந்து இந்தி பஜனை பாட்டுக்கள் கற்பது. புதுவித டிஷ் செய்து பார்ப்பது. படிப்பது, எழுதுவது, பாட்டு கேட்பது, எட்டு நடை போடுவது. இத்யாதி!இத்யாதி! என்று குஷியாக நகர்கிறது.-மீனலதா.கோடை விடுமுறையில் ,கோவில் கொடை விழாவுக்கு சம்பந்த காரரின் அன்பான அழைப்பின் பேரில் , குடும்பத்தோடு போயிருந்தேன். இந்த விழா ஏழு வருடத்திற்குப்பிறகு விமரிசையாக நடந்தது. "அரவான்"படப்புகழ் வாத்திய கலைஞர்கள் இசை விருந்து நடந்தது. கிராமத்துக்கே உரித்தான கரகாட்டம், பால் குடம், தீ சட்டி எடுத்தல், ஊர் மக்கள் வீட்டு வாசலில் பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தவர்களுக்கு (ஆணும், பெண்ணும்) வபுத்தாடை வாங்கி அணிவித்தல் , தீ சட்டி எந்தி வருபவர்களை, மனை(பலகை) போட்டு அமரவைத்து, மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் போன்றபக்தி பரவச நிகழ்ச்சிகளும், சிறார்களுக்கு ரங்க ராட்டினம், குடை ராட்டினம், வாச்சு மிட்டாய், தேங்காய் மிட்டாய் என்று வகை வகையான விளையாட்டு தித்திப்பில் கோடை விடுமுறையை விமரிசையாக கழித்தோம். மகள், மருமகன், பேரப்பிள்ளைகளோடு விழா முடிந்தும் கலகலப்பு குறையாமல் இருந்தது சம்சாரமான சம்பந்தகாரர் வீட்டில் சுவாமிக்கு கொடைவிழா, எங்களுக்கோ இன்ப கோடை விழா.-ஜானகி பரந்தாமன்.ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் நாங்கள் எங்கும் செல்வதில்லை. எங்க வீட்டில்தான் உடன் பிறப்புகளின் பிள்ளைகள், அவர்கள் பெற்றதுகள் என கூட்டம் சேரும். பீச், மால் என சுற்றி வருவோம். ஒருமுறையாவது ஊட்டி கொடைக்கானல் என சென்று ஒரு வாரத்தையாவது கழித்துவிட்டு வரலாம்னு நினைப்பேன். நடந்ததில்லை. இந்தமுறைதான் மார்ச்சில் கிளம்பி US வந்துட்டோம். மொத்தமா எஸ்கேப். இங்க வீட்டுக்குள் ஹீட்டர். வெளிய சென்றால் நடுங்கிக் கொண்டே நாட்களை நகர்த்துகிறோம்.-ஜெயகாந்தி மகாதேவன்.கோடை விடுமுறையில் எங்கே போவது? விலைவாசி எல்லாம் தாறுமாறாக இருக்கிறது. இரண்டு பேர் காலை டிபனை சாப்பிட்டால் 250 ரூபாய் பில் வருகிறது, ஆனால் வயிறு நிரம்பிய பாடு இல்லை. இந்த கோடை விடுமுறை வீட்டுலதான் கொண்டாடுகிறோம்.-சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்.கணவர் பணி ஓய்வு பெற்றபின் ,ஸ்பெஷலா கோடை விடுமுறை கொண்டாடுறது இல்லை. எல்லா நாளும் விடுமுறையே.-கோமதி சிவயம்.கோடை விடுமுறையில் பேரனுக்கு பிரம்மோபதேசம் செய்ய முடிவாகி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் அதனால ஊரிலிருந்து வெளிநாட்டிலிருந்து உறவுகள் வருகை விழா கொண்டாட்டம் என இந்த வருட கோடை விடுமுறை ஜாலியான கொண்டாட்டம் தான்.-ராதா நரசிம்மன்.பொதுவாக கோடையில் மலைவாச ஸ்தலங்களுக்குப் போவோம். சென்ற வாரம் வட மாநில திவ்யதேசக் கோவில்களுக்கு ஒரு வாரம் சென்று வந்தோம். இந்த வருடம் கோடை வெயிலில் இருந்து விடுபட சிம்லா, குளு, மணாலி ஆகிய இடங்களுக்கு ஜுன் முதல் வாரத்தில் சென்று ரோதங் பாசில் பனிச்சருக்கில் விளையாடி விட்டு வர ஏற்பாடு செய்திருக்கிறோம்-ஹேமலதா ஶ்ரீனிவாசன்.கோடை விடு முறையில் எங்காவது மலை பிரதேசம் செல்வோம். குழந்தைகள் வேலை, கல்யாணம் என்று ஆனவுடன், பெண் திருமணம் ஆகி அமெரிக்காவில் இருக்கிறாள். இரண்டு , மூன்று தரம் அங்கு சென்று விட்டோம். இப்போது மூன்று வருடமாக கொரோனா காரணமாக எங்கும் செல்லவில்லை. இந்த வருடம் ஜுன் மாதம் ஊட்டி போக ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.-உஷா பாஸ்கர்.சிறு வயதில் கோடை விடுமுறை பாட்டி வீட்டிற்கு செல்வது. பாட்டி வீடு நெல், மக்காச் சோளம், மரவள்ளி கிழங்கு, மிளகாய், தக்காளி வெங்காயம் என்று எல்லாம் விளையும் தோட்டம். விடுமுறை முழுவதும் இயற்கை காற்றை சுவாசித்து விவசாயம் பற்றி ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவிய ஆனந்தமான நாட்கள்.நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் பச்சை பசுமையான காலங்கள்.இப்போது ஊர் சுற்றி பார்க்க, ஆன்மீக சுற்றுலா என்று மாறிப் போனது.அதுவும் கடந்த இரண்டு வருடங்கள் எங்கும் செல்லவில்லை.தற்போது பப்ளிக் எக்ஸாம் எழுதுகிறார் மகன். அதன் பிறகு தான் என்ன என்று பார்க்கணும்.-பத்மாவதி மாணிக்கம்