உணவே மருந்து!.வாழைப்பு – 65.தேவை: நரம்பெடுத்த வாழைப்பூ -2பிடி, கடலைமாவு -1/2கப், அரிசிமாவு -4 ஸ்பூன், கார்ன் மாவு-1ஸ்பூன், ஓமம் – 1 சிட்டிகை, சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன், மிளகாய்த்தூள்-3 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – 1/4ஸ்பூன், எலுமிச்சை சாறு-3ஸ்பூன், உப்பு- ருசிக்கேற்ப, எண்ணெய்-பொரிப்பதற்கு..செய்முறை: வாழைப்பூ எண்ணெய் நீங்கலாக, அனைத்து பொருட் களையும் வாயகன்ற பாத்திரத்தில் கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் கரைத்து, அதில் வாழைப்பூவை தோய்த்து எடுத்து சூடான எண்ணெயிலிட்டு பொரித்தெடுத்தால் மொறுமொறுப்பாய் வாழைப்பூ-65 சுவைக்கத் தயார்..-செ.கலைவாணி, சேலம்..================================.மிளகு சூப்.தேவை: துவரம் பருப்பு 1/2 கப், வெங்காயம் 1, தக்காளி 3, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1டேபிள் ஸ்பூன், தேங்காய் பால் 1கப், மல்லித்தழை சிறிதளவு, பச்சை மிளகாய் 1, உப்பு, எண்ணெய் தேவையான அளவு, வறுத்து பொடித்த தனியா 2 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், வெந்தயம், பெருஞ்சீரகம் தலா1/4 டீஸ்பூன்,பட்டை சிறுதுண்டு..செய்முறை: வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும்..வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். அத்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வறுத்து பொடித்த பொடியையும் போட்டு நான்கு கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் பேனை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். அதை அரைத்து வடிகட்டி பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். அதில் தேங்காய்ப் பால், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி 1கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்..-ஆதிரை வேணுகோபால்.================================.மிளகு – திப்பிலி மோர்.தேவையானவை: மோர் – 1 கப், தண்ணீர் – ½ கப், வால் மிளகு – 2, திப்பிலிப் பவுடர் – ¼ டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கு..செய்முறை: மேற்கூறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 2 சுற்று சுற்றி, பின் கிளாஸில் ஊற்றி பரிமாறவும்..================================.இஞ்சி மோர்.தேவையானவை: மோர் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, கொத்தமல்லி – 1 கைப்பிடி, பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு, தாளிக்க கடுகு, கருவேப்பிலை..செய்முறை: இஞ்சி, கொத்துமல்லியை விழுதாக அரைத்து அதனுடன் மோரைக் கலந்து, அதனுடன் உப்பு, தாளித்த கடுகு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இஞ்சிக்கு பதில் மாங்காய் இஞ்சி சேர்த்தும் செய்யலாம்..================================.பார்லி மோர்.தேவையானவை: பார்லி – ½ கப், உப்பு, எ.பழம் – ½ மூடி, மிளகுப் பொடி – 1 சிட்டிகை, கெட்டித் தயிர் – 3 டீஸ்பூன்.செய்முறை: பார்லியை நீரில் வேக வைத்து பிழிந்து தண்ணீரை தனியே எடுக்கவும். இத்தண்ணீரில் எ.பழத்தைப் பிழிந்து அதனுடன் உப்பு, மிளகுப் பொடி, கெட்டித் தயிர் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து பின் கிளாஸில் ஊற்றி பரிமாறவும்..================================.மோர் மிளகாய் மோர்.தேவையானவை: மோர் – 3 கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு, மோர் மிளகாய் – 2, சீரகப் பொடி – 1 டீஸ்பூன், உப்பு, கொத்தமல்லி கொஞ்சம்..செய்முறை: தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் விழுதாக்கவும். மோர், உப்பு, கலவையில் இவ்விழுதை நன்றாகக் கலக்கவும். மோர் மிளகாய் தாளித்து சீரகப் பொடியும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது கொத்துமல்லி தழை சின்னதாக கட் பண்ணி அதைத் தூவி அலங்கரிக்கவும்..-மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.================================."டீயோ டீ!".ஒன் பை டூ – கட்டிங்! என்னது? கட்டிங்கா?.டூ பை த்ரீ கட்டிங் கூட இருக்கே!.மும்பை மாநகரின் முக்குக்கு முக்கு டீக்கடைகள் பிரபலம். விதவிதமான டீக்கள். ஒரு முழு டீயை வாங்கிக் கட்டிங் செய்து இருவர் குடிப்பார்கள். இது இங்கே சகஜம். டீக்கடைகளில் கூட்டம் அள்ளோ அள்ளும்..சாதா டீ:- நீரைக் கொதிக்கவிட்டு, டீத் தூளைப் போட்டு, நன்கு கொதி வந்ததும் பால், சர்க்கரை சேர்த்து வடிகட்டி அருந்துவது..ஸ்பெஷல் மில்க் டீ: பாலில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக சூடு செய்து, அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி, சர்க்கரை கலந்து தருகையில் ஸ்பஷல்தான்..இஞ்சி டீ: டீத்தண்ணீரில் இஞ்சியை கொஞ்சம் அதிகமாகத் தட்டிப் போட்டு செய்து பருகுகையில் இஞ்சி மணம் மூக்கைத் துளைக்கும். தொண்டைக்கும் இதமாக இருக்கும்..மழை, குளிர் மற்றும் உடல்நலம் சரியில்லாத சமயம் சூப்பராக இருக்கும் ஜிஞ்ஜர் டீ..ஏல டீ:- ஏலப்பொடி கலந்து செய்யும் டீ. ஏல வாசனை கமகமக்கும்..மசாலா டீ:- ஏலம், கிராம்பு, சிறிது லவங்கப்பட்டை போன்ற சில மசாலா பொருட்களைப் பொடித்து தயாரிப்பது மசாலா டீ. சுவையாக இருக்கும்..குங்குமப் பூ டீ:- காஷ்மீரில் இது பிரசித்தம். மும்பையிலும் அதுபோல செய்து தருகிறார்கள். சின்ன க்ளாஸ் குங்குமப்பூ டீ விலை ₹ 50/- மட்டுமே!! பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துகையில் குங்குமப் பூ டேஸ்ட் தனியாகத் தெரியும்..எவ்லே அம்ருத்யுல்யா (Yewle Amruttulya) :- பூனே நகரில் 'எவ்லே சாச்சா' டீ பிரபலம். புரந்தர் என்கிற கிராமத்திலிருந்து பூனே வந்து பால் வியாபாரம் செய்த தசரத் எவ்லே, சிறிய டீக்கடை போட, மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இவரது மறைவிற்குப் பின், மூன்று மகன்களும் இதை பெரிதாகவும், பிரபலமாகவும் ஆக்கிவிட்டனர். 1983 இல் ஆரம்பித்த வியாபாரம் இன்று 250க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. பூனேயில் இருக்கும் ஸ்டால்களில் நாள் ஒன்றுக்கு 5,000க்கும் மேல் டீ விற்பனையாகிறது. மும்பையிலும் இதன் கிளைகள் உள்ளன. தரம், குணம், சுத்தம் மூன்றும் இதில் அடங்கியுள்ளன. டீ ஸ்டாலில் டீ தயாரிப்பதை கண்ணெதிரே காணலாம். சிறு பேப்பர் கப், சூடான டீ ₹ 10/-. ஒரு நாளில்20 மணி நேரமும் திறந்திருக்கும். 'ஏக்தா பிஉள் தர் பஹா' (1 தரம் குடித்துதான் பாருங்கள்) என விளம்பரம் செய்துள்ளனர்..இளைய சமுதாயத்தினர் இதன் கிளைகளை ஆரம்பிக்க 'எவ்லே' குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர். வெளிநாடுகளிலும் கூடிய விரைவில் 'எவ்லே டீ' தொடங்க விருக்கிறது..க்ரீன் டீ: சூடான தேநீரில் பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ எனக் கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் பெரிய – பெரிய க்ளாஸ் மற்றும் கப்களில் க்ரீன் டீயை விட்டு மெதுவாக ருசித்து, ரசித்து குடிப்பார்கள். ஒரு நாளில் 4 – 5 தரம் குடிக்கையில் பசியே எடுக்காது. உடல் நலத்திற்கு நன்மை தருவது; புத்துணர்ச்சி அளிப்பது என்றெல்லாம் கூறப்படுவது, பரிந்துரைக்கப்படுவது என எல்லாமே க்ரீன் டீதான்..Dip Tea: சிறு டீ பாக்கெட்டை அப்படியே கொதிக்கும் வெந்நீரினுள் மூழ்கவிட்டு, சில நிமிடங்கள் சென்று வெளியே எடுத்துவிட்டு அருந்துவது Dip Tea..17ஆம் நூற்றாண்டில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி சைனாவிலிருந்து தேயிலையை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் 1823 இல் அஸ்ஸாமில் தேயிலைச் செடிகளை நட்டனர். படிப்படியாக பிற மாநிலங்களிலும் தேயிலை பயிரிடப்பட, டீ எஸ்டேட்கள் வளர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றன..எதற்காக இந்த டீ புராணமென எண்ணுகிறீர்களா?.21 மே அன்று உலக டீ தினம் கடைப்பிடிக்கப்பிடிக்கப்பட்டது. மும்பை நகர சந்து டீ கடைகளில் எல்லாம் ஒரே கொண்டாட்டம்..-ஆர். மீனலதா, மும்பை
உணவே மருந்து!.வாழைப்பு – 65.தேவை: நரம்பெடுத்த வாழைப்பூ -2பிடி, கடலைமாவு -1/2கப், அரிசிமாவு -4 ஸ்பூன், கார்ன் மாவு-1ஸ்பூன், ஓமம் – 1 சிட்டிகை, சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன், மிளகாய்த்தூள்-3 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – 1/4ஸ்பூன், எலுமிச்சை சாறு-3ஸ்பூன், உப்பு- ருசிக்கேற்ப, எண்ணெய்-பொரிப்பதற்கு..செய்முறை: வாழைப்பூ எண்ணெய் நீங்கலாக, அனைத்து பொருட் களையும் வாயகன்ற பாத்திரத்தில் கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் கரைத்து, அதில் வாழைப்பூவை தோய்த்து எடுத்து சூடான எண்ணெயிலிட்டு பொரித்தெடுத்தால் மொறுமொறுப்பாய் வாழைப்பூ-65 சுவைக்கத் தயார்..-செ.கலைவாணி, சேலம்..================================.மிளகு சூப்.தேவை: துவரம் பருப்பு 1/2 கப், வெங்காயம் 1, தக்காளி 3, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1டேபிள் ஸ்பூன், தேங்காய் பால் 1கப், மல்லித்தழை சிறிதளவு, பச்சை மிளகாய் 1, உப்பு, எண்ணெய் தேவையான அளவு, வறுத்து பொடித்த தனியா 2 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், வெந்தயம், பெருஞ்சீரகம் தலா1/4 டீஸ்பூன்,பட்டை சிறுதுண்டு..செய்முறை: வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும்..வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். அத்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வறுத்து பொடித்த பொடியையும் போட்டு நான்கு கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் பேனை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். அதை அரைத்து வடிகட்டி பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். அதில் தேங்காய்ப் பால், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி 1கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்..-ஆதிரை வேணுகோபால்.================================.மிளகு – திப்பிலி மோர்.தேவையானவை: மோர் – 1 கப், தண்ணீர் – ½ கப், வால் மிளகு – 2, திப்பிலிப் பவுடர் – ¼ டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கு..செய்முறை: மேற்கூறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 2 சுற்று சுற்றி, பின் கிளாஸில் ஊற்றி பரிமாறவும்..================================.இஞ்சி மோர்.தேவையானவை: மோர் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, கொத்தமல்லி – 1 கைப்பிடி, பெருங்காயம் – 1 சிட்டிகை, உப்பு, தாளிக்க கடுகு, கருவேப்பிலை..செய்முறை: இஞ்சி, கொத்துமல்லியை விழுதாக அரைத்து அதனுடன் மோரைக் கலந்து, அதனுடன் உப்பு, தாளித்த கடுகு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இஞ்சிக்கு பதில் மாங்காய் இஞ்சி சேர்த்தும் செய்யலாம்..================================.பார்லி மோர்.தேவையானவை: பார்லி – ½ கப், உப்பு, எ.பழம் – ½ மூடி, மிளகுப் பொடி – 1 சிட்டிகை, கெட்டித் தயிர் – 3 டீஸ்பூன்.செய்முறை: பார்லியை நீரில் வேக வைத்து பிழிந்து தண்ணீரை தனியே எடுக்கவும். இத்தண்ணீரில் எ.பழத்தைப் பிழிந்து அதனுடன் உப்பு, மிளகுப் பொடி, கெட்டித் தயிர் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து பின் கிளாஸில் ஊற்றி பரிமாறவும்..================================.மோர் மிளகாய் மோர்.தேவையானவை: மோர் – 3 கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு, மோர் மிளகாய் – 2, சீரகப் பொடி – 1 டீஸ்பூன், உப்பு, கொத்தமல்லி கொஞ்சம்..செய்முறை: தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் விழுதாக்கவும். மோர், உப்பு, கலவையில் இவ்விழுதை நன்றாகக் கலக்கவும். மோர் மிளகாய் தாளித்து சீரகப் பொடியும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது கொத்துமல்லி தழை சின்னதாக கட் பண்ணி அதைத் தூவி அலங்கரிக்கவும்..-மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.================================."டீயோ டீ!".ஒன் பை டூ – கட்டிங்! என்னது? கட்டிங்கா?.டூ பை த்ரீ கட்டிங் கூட இருக்கே!.மும்பை மாநகரின் முக்குக்கு முக்கு டீக்கடைகள் பிரபலம். விதவிதமான டீக்கள். ஒரு முழு டீயை வாங்கிக் கட்டிங் செய்து இருவர் குடிப்பார்கள். இது இங்கே சகஜம். டீக்கடைகளில் கூட்டம் அள்ளோ அள்ளும்..சாதா டீ:- நீரைக் கொதிக்கவிட்டு, டீத் தூளைப் போட்டு, நன்கு கொதி வந்ததும் பால், சர்க்கரை சேர்த்து வடிகட்டி அருந்துவது..ஸ்பெஷல் மில்க் டீ: பாலில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக சூடு செய்து, அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி, சர்க்கரை கலந்து தருகையில் ஸ்பஷல்தான்..இஞ்சி டீ: டீத்தண்ணீரில் இஞ்சியை கொஞ்சம் அதிகமாகத் தட்டிப் போட்டு செய்து பருகுகையில் இஞ்சி மணம் மூக்கைத் துளைக்கும். தொண்டைக்கும் இதமாக இருக்கும்..மழை, குளிர் மற்றும் உடல்நலம் சரியில்லாத சமயம் சூப்பராக இருக்கும் ஜிஞ்ஜர் டீ..ஏல டீ:- ஏலப்பொடி கலந்து செய்யும் டீ. ஏல வாசனை கமகமக்கும்..மசாலா டீ:- ஏலம், கிராம்பு, சிறிது லவங்கப்பட்டை போன்ற சில மசாலா பொருட்களைப் பொடித்து தயாரிப்பது மசாலா டீ. சுவையாக இருக்கும்..குங்குமப் பூ டீ:- காஷ்மீரில் இது பிரசித்தம். மும்பையிலும் அதுபோல செய்து தருகிறார்கள். சின்ன க்ளாஸ் குங்குமப்பூ டீ விலை ₹ 50/- மட்டுமே!! பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துகையில் குங்குமப் பூ டேஸ்ட் தனியாகத் தெரியும்..எவ்லே அம்ருத்யுல்யா (Yewle Amruttulya) :- பூனே நகரில் 'எவ்லே சாச்சா' டீ பிரபலம். புரந்தர் என்கிற கிராமத்திலிருந்து பூனே வந்து பால் வியாபாரம் செய்த தசரத் எவ்லே, சிறிய டீக்கடை போட, மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இவரது மறைவிற்குப் பின், மூன்று மகன்களும் இதை பெரிதாகவும், பிரபலமாகவும் ஆக்கிவிட்டனர். 1983 இல் ஆரம்பித்த வியாபாரம் இன்று 250க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. பூனேயில் இருக்கும் ஸ்டால்களில் நாள் ஒன்றுக்கு 5,000க்கும் மேல் டீ விற்பனையாகிறது. மும்பையிலும் இதன் கிளைகள் உள்ளன. தரம், குணம், சுத்தம் மூன்றும் இதில் அடங்கியுள்ளன. டீ ஸ்டாலில் டீ தயாரிப்பதை கண்ணெதிரே காணலாம். சிறு பேப்பர் கப், சூடான டீ ₹ 10/-. ஒரு நாளில்20 மணி நேரமும் திறந்திருக்கும். 'ஏக்தா பிஉள் தர் பஹா' (1 தரம் குடித்துதான் பாருங்கள்) என விளம்பரம் செய்துள்ளனர்..இளைய சமுதாயத்தினர் இதன் கிளைகளை ஆரம்பிக்க 'எவ்லே' குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர். வெளிநாடுகளிலும் கூடிய விரைவில் 'எவ்லே டீ' தொடங்க விருக்கிறது..க்ரீன் டீ: சூடான தேநீரில் பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ எனக் கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் பெரிய – பெரிய க்ளாஸ் மற்றும் கப்களில் க்ரீன் டீயை விட்டு மெதுவாக ருசித்து, ரசித்து குடிப்பார்கள். ஒரு நாளில் 4 – 5 தரம் குடிக்கையில் பசியே எடுக்காது. உடல் நலத்திற்கு நன்மை தருவது; புத்துணர்ச்சி அளிப்பது என்றெல்லாம் கூறப்படுவது, பரிந்துரைக்கப்படுவது என எல்லாமே க்ரீன் டீதான்..Dip Tea: சிறு டீ பாக்கெட்டை அப்படியே கொதிக்கும் வெந்நீரினுள் மூழ்கவிட்டு, சில நிமிடங்கள் சென்று வெளியே எடுத்துவிட்டு அருந்துவது Dip Tea..17ஆம் நூற்றாண்டில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி சைனாவிலிருந்து தேயிலையை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் 1823 இல் அஸ்ஸாமில் தேயிலைச் செடிகளை நட்டனர். படிப்படியாக பிற மாநிலங்களிலும் தேயிலை பயிரிடப்பட, டீ எஸ்டேட்கள் வளர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றன..எதற்காக இந்த டீ புராணமென எண்ணுகிறீர்களா?.21 மே அன்று உலக டீ தினம் கடைப்பிடிக்கப்பிடிக்கப்பட்டது. மும்பை நகர சந்து டீ கடைகளில் எல்லாம் ஒரே கொண்டாட்டம்..-ஆர். மீனலதா, மும்பை