ஓவியம் : பிரபுராம்."நம் மன்னர் போரிலிருந்து வருகிறாராம். நெற்றிக்கு திலகம் தயார் செய்யவா?""வேண்டாம். உடம்புக்குத் தைலம் தயார் செய்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."டாக்டர் தூரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் மங்கலா தெரியுது. இது எட்ட பார்வையா? கிட்ட பார்வையா?"""கெட்ட பார்வை!"-நிலா, திருச்சி.………………………………………………………….."இந்த ஏரியாவுல தண்ணி நல்லா வருமா?""வெள்ளமே வரும்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."மன்னா! போர் பீரங்கிகளுக்கு போடும் குண்டுகள் தீர்ந்துவிட்டன!""கவலை வேண்டாம் மந்திரி! மகாராணி செய்திருக்கும் குலோப்ஜாமூன் உருண்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்!-நிலா, திருச்சி.………………………………………………………….. "பதுங்கு குழிக்குள் இருந்த நம் மன்னர் எதிரிநாட்டு மன்னனிடம் எப்படி பிடிபட்டார்?""மகாராணி பதுங்குகுழியை சுற்றி மார்கழி கோலம் போட்டிருந்தாராம்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."அந்த மந்திரி வீட்டுக்கு ஏன் திருட போக வேணாம்னு சொல்ற?""நேத்துதான் அவர் வீட்டுக்கு ரெய்டு வந்தாங்க!"-நிலா, திருச்சி.………………………………………………………….."மந்திரி ஏன் சார் இவ்வளவு பெரிய மரத்தை நடறாரு?""மரம் நடு விழான்னு அறிவிச்சுட்டு செடியை நடமாட்டாராம்!-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.………………………………………………………….. "நீங்க தொடர்ந்து நாலு வாரம் ரெஸ்ட்ல இருக்கணும்.""அது முடியாதே டாக்டர்! ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் கிடையாதே?"-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.………………………………………………………….."டாக்டர் உங்க தெர்மாமீட்டர் மிகவும் சக்தி வாய்ந்தது!""எப்படி?""என் மனைவியின் வாயை மூட வைத்து விட்டதே?"-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.
ஓவியம் : பிரபுராம்."நம் மன்னர் போரிலிருந்து வருகிறாராம். நெற்றிக்கு திலகம் தயார் செய்யவா?""வேண்டாம். உடம்புக்குத் தைலம் தயார் செய்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."டாக்டர் தூரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் மங்கலா தெரியுது. இது எட்ட பார்வையா? கிட்ட பார்வையா?"""கெட்ட பார்வை!"-நிலா, திருச்சி.………………………………………………………….."இந்த ஏரியாவுல தண்ணி நல்லா வருமா?""வெள்ளமே வரும்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."மன்னா! போர் பீரங்கிகளுக்கு போடும் குண்டுகள் தீர்ந்துவிட்டன!""கவலை வேண்டாம் மந்திரி! மகாராணி செய்திருக்கும் குலோப்ஜாமூன் உருண்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்!-நிலா, திருச்சி.………………………………………………………….. "பதுங்கு குழிக்குள் இருந்த நம் மன்னர் எதிரிநாட்டு மன்னனிடம் எப்படி பிடிபட்டார்?""மகாராணி பதுங்குகுழியை சுற்றி மார்கழி கோலம் போட்டிருந்தாராம்!"-நிலா, திருச்சி.………………………………………………………….."அந்த மந்திரி வீட்டுக்கு ஏன் திருட போக வேணாம்னு சொல்ற?""நேத்துதான் அவர் வீட்டுக்கு ரெய்டு வந்தாங்க!"-நிலா, திருச்சி.………………………………………………………….."மந்திரி ஏன் சார் இவ்வளவு பெரிய மரத்தை நடறாரு?""மரம் நடு விழான்னு அறிவிச்சுட்டு செடியை நடமாட்டாராம்!-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.………………………………………………………….. "நீங்க தொடர்ந்து நாலு வாரம் ரெஸ்ட்ல இருக்கணும்.""அது முடியாதே டாக்டர்! ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் கிடையாதே?"-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.………………………………………………………….."டாக்டர் உங்க தெர்மாமீட்டர் மிகவும் சக்தி வாய்ந்தது!""எப்படி?""என் மனைவியின் வாயை மூட வைத்து விட்டதே?"-ஆர். கற்பகபூமி, திருநெல்வேலி.