காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே… எப்படி?-சீனு சந்திரா, சென்னை.கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்… ஐ மீன்ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம். கல்யாணி மங்களமான ராகம். அதனால் அம்பாள் பற்றிய கீர்த்தனைகள் பலவும் இந்த ராகத்தில் அம்சமாக அமைந்துவிடுமாம். அதுமட்டுமல்ல… கல்யாணி ராகமானது, யோகா, தியானம் போன்றவற்றுக்குச் சிறந்ததாம்..அதேபோல, சிவனைத் துதித்து மகிழ, ஏற்ற ராகம் காம்போதியாம்! சிறந்த சிவபக்தனான ராவணன் வீணையில் காம்போதி ராகத்தை வாசித்தபோதுதான் சிவபெருமான் அதில் லயித்து வரங்களைச் சும்மா அள்ளி வீசினாராம்..பார்வதிக்கும் பிடித்த, பரமனுக்கும் பிடித்த ராகங்கள் அல்லவா? அதனால்தான் பக்தி உணர்வுகள் தூண்டப்பட்டு அவற்றைக் கேட்கும்போது அலுக்காமல் ரசிக்க வைக்கின்றன போலும்!.அதுமட்டுமல்ல… இந்த இரண்டு ராகங்களுக்கும் ஹீலிங் எஃபெக்ட்டும் உண்டாம்!.(அம்மாடி… இந்த ஒற்றைக் கேள்விக்கு என்னல்லாம் ஹோம்-வர்க் பண்ண வேண்டியிருக்கு! ஈஸியா கேளுங்கம்மா… ப்ளீஸ்! வெயில் வேற!).***************************.விலைவாசி விஷம் போல ஏறி வருகிறதே… எப்படிச் சமாளிக்கிறீங்க அனு மேடம்?– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்.உங்க எல்லாரையும் போலதான்… 'சிக்கனம்' என்கிற பூஸ்டர் தடுப்பூசி போட்டு! வேற வழி?.உங்களுக்கு சிக்கன மாமியார் Vs சமத்து மருமகள் கதை தெரியுமோ? லெட் மி டெல் எ குட்டி ஸ்டோரி!.இப்படித்தான் ஒரு மருமகள், நல்ல குணவதி, சாது… ஆனா சமையல் விஷயத்துல மைனஸ் மார்க்கு வாங்குற பொண்ணு.. ஒருநாள் வழி தெரியாமல், சமையல் அறைக்குள்ள காலை வெச்சுட்டாளாம்..அப்பதான் தன்னோட மாமியார்காரி, எதையும் வீணாக்காமல் அதேசமயம் ருசியாக சமைக்குற பழக்கம் உள்ளவங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாளாம். கேரட் தோல், செளசெள தோல்ல துவையல் அரைக்கிறது, தர்பூசணியின் வெள்ளைப் பகுதியில வடாம் போடறது, ஆரஞ்சுத் தோல்ல ரசம், கொஜ்ஜு செய்வது, பலாக் கொட்டையை வேக வெச்சு வடை செய்றது, புளியம் துளிர்ல தொக்கு செய்றதுன்னு மாமியார்க்காரி அசத்தறதைப் பார்த்து நாம்பளும் அப்படி ஏதாவது புதுமையா செய்யணும்னு ஆசைப்பட்டா… ஆசை என்ன? சிக்கனத்துல அவங்களை மிஞ்சணும்னு சபதமே எடுத்துக்கிட்டா ரகசியமா….மறுநாள் மாமியார் தூங்கிக்கிட்டு இருக்குறப்போ, கிச்சனுக்குள்ள போய், கலக்கலா பஜ்ஜி செஞ்சா. சுடச்சுட ஒரு பிளேட் நிறைய அள்ளி வெச்சு,."அத்தே… பஜ்ஜி சாப்பிடுங்க…"ன்னு பரிவுடன் சொன்னா. மாமியாரும் "இதென்னடா… பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை?" ரேஞ்சுல ஒரு பஜ்ஜியை எடுத்து ஆசையா கடிச்சாங்க… "லொடக்'னு ஒரு சத்தம்! வாயெல்லாம் ரத்தம்! நம்ப சிக்கன எல்போர்ட் மருமக, தேங்காய்த் துருவிய பின் வேஸ்டாக இருக்குமே மூடி? அதுல செஞ்ச 'கொட்டாங்குச்சி பஜ்ஜி' அது!.அப்போ போனதுதான் மதர்-இன்-லாவின் பல்லும் சொல்லும் லொடக்!.***************************.உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்களைக் குறித்து…-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.அது ஒண்ணும் பெரிய தப்பா தெரியலையே கெஜலட்சுமி மேடம்?."சம்பாதிக்கணும்'னுதானே கேட்கிறாங்க? ஓசியில எங்கிருந்தோ வந்து கொட்டணும், உழைக்காம யார் சொத்தோ மடி மேல வந்து விழணும்னு வேண்டலையே? அது ஒரு belief system. பணம் இருந்துவிட்டால், பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற மனோபாவம் உள்ள எளிய மனிதர்களிடம் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையும் ஒட்டிக் கொண்டுவிட்டது..ஆனால் ஒரு விஷயம், உண்டியலில் பணம் போட்டாலும், போடாவிட்டாலும், யாருக்கு, என்ன, எவ்வளவு எப்போ தரணும்னு அவர்கிட்ட ஒரு டைம்-ஃப்ரேம் இருக்கு! அதன்படி கண்டிப்பாகக் கொடுத்துவிடும் நேர்மையான, ஆனால் ஒரு டைப்பான புதிர் ஆசாமி அவர்! எனவே… இப்ப என்ன கிடைச்சுருக்கோ, அதுக்கு 'பிக் தாங்க்ஸ்' சொன்னாலே போதும். டீல் எல்லாம் தேவையில்ல… ஏன்னா அவரே ஒரு 'BIG FEEL.'.***************************.கிரிக்கெட்டின் விஸ்டன் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, பும்ரா…?-வாசுதேவன், பெங்களூரு.கபில்தேவ், ஸ்ரீநாத், ஸகீர்கான்க்குப் பிறகு நமக்குக் கிடைச்ச மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா! யாக்கர்கள் வீசுறதுல முடிசூடா மன்னன்..ரோஹித் சர்மா, ஒரு நாள் பந்தயப் போட்டிகளில், தலை சிறந்த ஒப்பனர்..இவங்க இரண்டு பேரும் லிஸ்ட் ஆனதுல ஆச்சரியம் லேது! சர்ப்ரைஸ் நஹி! ஆனா, மும்பை இன்டியன்ஸ் ஐ.பி.எல்ல தொடர்ந்து தோத்தாங்குளி ஆறதும் சீஸன்ல மொக்கை போடுறதும்… என்னத்த ஆடி? என்னத்த பார்த்து! அடப் போங்க சார்…
காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே… எப்படி?-சீனு சந்திரா, சென்னை.கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்… ஐ மீன்ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம். கல்யாணி மங்களமான ராகம். அதனால் அம்பாள் பற்றிய கீர்த்தனைகள் பலவும் இந்த ராகத்தில் அம்சமாக அமைந்துவிடுமாம். அதுமட்டுமல்ல… கல்யாணி ராகமானது, யோகா, தியானம் போன்றவற்றுக்குச் சிறந்ததாம்..அதேபோல, சிவனைத் துதித்து மகிழ, ஏற்ற ராகம் காம்போதியாம்! சிறந்த சிவபக்தனான ராவணன் வீணையில் காம்போதி ராகத்தை வாசித்தபோதுதான் சிவபெருமான் அதில் லயித்து வரங்களைச் சும்மா அள்ளி வீசினாராம்..பார்வதிக்கும் பிடித்த, பரமனுக்கும் பிடித்த ராகங்கள் அல்லவா? அதனால்தான் பக்தி உணர்வுகள் தூண்டப்பட்டு அவற்றைக் கேட்கும்போது அலுக்காமல் ரசிக்க வைக்கின்றன போலும்!.அதுமட்டுமல்ல… இந்த இரண்டு ராகங்களுக்கும் ஹீலிங் எஃபெக்ட்டும் உண்டாம்!.(அம்மாடி… இந்த ஒற்றைக் கேள்விக்கு என்னல்லாம் ஹோம்-வர்க் பண்ண வேண்டியிருக்கு! ஈஸியா கேளுங்கம்மா… ப்ளீஸ்! வெயில் வேற!).***************************.விலைவாசி விஷம் போல ஏறி வருகிறதே… எப்படிச் சமாளிக்கிறீங்க அனு மேடம்?– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்.உங்க எல்லாரையும் போலதான்… 'சிக்கனம்' என்கிற பூஸ்டர் தடுப்பூசி போட்டு! வேற வழி?.உங்களுக்கு சிக்கன மாமியார் Vs சமத்து மருமகள் கதை தெரியுமோ? லெட் மி டெல் எ குட்டி ஸ்டோரி!.இப்படித்தான் ஒரு மருமகள், நல்ல குணவதி, சாது… ஆனா சமையல் விஷயத்துல மைனஸ் மார்க்கு வாங்குற பொண்ணு.. ஒருநாள் வழி தெரியாமல், சமையல் அறைக்குள்ள காலை வெச்சுட்டாளாம்..அப்பதான் தன்னோட மாமியார்காரி, எதையும் வீணாக்காமல் அதேசமயம் ருசியாக சமைக்குற பழக்கம் உள்ளவங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாளாம். கேரட் தோல், செளசெள தோல்ல துவையல் அரைக்கிறது, தர்பூசணியின் வெள்ளைப் பகுதியில வடாம் போடறது, ஆரஞ்சுத் தோல்ல ரசம், கொஜ்ஜு செய்வது, பலாக் கொட்டையை வேக வெச்சு வடை செய்றது, புளியம் துளிர்ல தொக்கு செய்றதுன்னு மாமியார்க்காரி அசத்தறதைப் பார்த்து நாம்பளும் அப்படி ஏதாவது புதுமையா செய்யணும்னு ஆசைப்பட்டா… ஆசை என்ன? சிக்கனத்துல அவங்களை மிஞ்சணும்னு சபதமே எடுத்துக்கிட்டா ரகசியமா….மறுநாள் மாமியார் தூங்கிக்கிட்டு இருக்குறப்போ, கிச்சனுக்குள்ள போய், கலக்கலா பஜ்ஜி செஞ்சா. சுடச்சுட ஒரு பிளேட் நிறைய அள்ளி வெச்சு,."அத்தே… பஜ்ஜி சாப்பிடுங்க…"ன்னு பரிவுடன் சொன்னா. மாமியாரும் "இதென்னடா… பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை?" ரேஞ்சுல ஒரு பஜ்ஜியை எடுத்து ஆசையா கடிச்சாங்க… "லொடக்'னு ஒரு சத்தம்! வாயெல்லாம் ரத்தம்! நம்ப சிக்கன எல்போர்ட் மருமக, தேங்காய்த் துருவிய பின் வேஸ்டாக இருக்குமே மூடி? அதுல செஞ்ச 'கொட்டாங்குச்சி பஜ்ஜி' அது!.அப்போ போனதுதான் மதர்-இன்-லாவின் பல்லும் சொல்லும் லொடக்!.***************************.உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்களைக் குறித்து…-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.அது ஒண்ணும் பெரிய தப்பா தெரியலையே கெஜலட்சுமி மேடம்?."சம்பாதிக்கணும்'னுதானே கேட்கிறாங்க? ஓசியில எங்கிருந்தோ வந்து கொட்டணும், உழைக்காம யார் சொத்தோ மடி மேல வந்து விழணும்னு வேண்டலையே? அது ஒரு belief system. பணம் இருந்துவிட்டால், பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற மனோபாவம் உள்ள எளிய மனிதர்களிடம் கடவுள் தருவார் என்ற நம்பிக்கையும் ஒட்டிக் கொண்டுவிட்டது..ஆனால் ஒரு விஷயம், உண்டியலில் பணம் போட்டாலும், போடாவிட்டாலும், யாருக்கு, என்ன, எவ்வளவு எப்போ தரணும்னு அவர்கிட்ட ஒரு டைம்-ஃப்ரேம் இருக்கு! அதன்படி கண்டிப்பாகக் கொடுத்துவிடும் நேர்மையான, ஆனால் ஒரு டைப்பான புதிர் ஆசாமி அவர்! எனவே… இப்ப என்ன கிடைச்சுருக்கோ, அதுக்கு 'பிக் தாங்க்ஸ்' சொன்னாலே போதும். டீல் எல்லாம் தேவையில்ல… ஏன்னா அவரே ஒரு 'BIG FEEL.'.***************************.கிரிக்கெட்டின் விஸ்டன் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, பும்ரா…?-வாசுதேவன், பெங்களூரு.கபில்தேவ், ஸ்ரீநாத், ஸகீர்கான்க்குப் பிறகு நமக்குக் கிடைச்ச மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா! யாக்கர்கள் வீசுறதுல முடிசூடா மன்னன்..ரோஹித் சர்மா, ஒரு நாள் பந்தயப் போட்டிகளில், தலை சிறந்த ஒப்பனர்..இவங்க இரண்டு பேரும் லிஸ்ட் ஆனதுல ஆச்சரியம் லேது! சர்ப்ரைஸ் நஹி! ஆனா, மும்பை இன்டியன்ஸ் ஐ.பி.எல்ல தொடர்ந்து தோத்தாங்குளி ஆறதும் சீஸன்ல மொக்கை போடுறதும்… என்னத்த ஆடி? என்னத்த பார்த்து! அடப் போங்க சார்…