-செ.கலைவாணி, சேலம் .உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!.உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே,உருவானாதே இவ்வுன்னத உலகம்.உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி,உலகை எந்நாளும் இயங்கச் செய்பவனே உழைப்பாளி.உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும்உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது.உழைப்போரின் வியர்வைத்துளிகள் உருவாக்கிய உலகம்,உழைப்போரால் பசியாறுகிறது.உழைப்பவன் அழுக்காகி உலகை அழகாக்குகிறான்.உழைப்பவனின் வியர்வையால் உலகம் மணக்கிறது.உழைப்பவன் ஓய்வெடுத்தால்உலகம் சுழல்வதை நிறுத்தும்.உழைப்பவன் உழைக்க மறுத்தால்உலகம் இன்னலில் சுழலும்.உழைப்பாளரின்றேல் உலகில்லை.உலகில்லையென்றால் உயிர்களில்லை.உழைப்பாளிகளின் உருக்குக் கரங்களால் உருவான உலகம்உழைப்போரை உயர்த்திட உருவானதே உழைப்பாளர் தினம்.உலகில் சமத்துவம் மலர உழைப்போரை ஏத்துவோம்.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.உழைக்கும் தோழர்களை ஒன்றாய்த் திரட்டிஉலகம் நமதென்று சிந்து பாடுவோம்..***************************.வாசிப்பதும் தியானம்!.புத்தகம் போதிமரம்.புரட்டுவோர் புத்தர் ஆகலாம்.உலகமே இயற்கை எழுதும்வண்ணப் புத்தகம் தான்.அணிவகுத்த எண்ணங்கள் எழுத்தாணி தழுவபிறந்தது புத்தகமாய்.சைகையில் தொடக்கம், ஒலிக்குறிப்பில் வளர்ச்சிஓவிய எழுத்துகள்!அகத்தைப் புத்தாக்கம் செய்திடும்நல்லதொரு புத்தகம்.திருப்பப் பட்ட புத்தகம்,'திறக்கும்' நம் மனக்கதவை!தன்னை மறந்த நிலையில்புத்தகம் படித்தலே தியானம்!
-செ.கலைவாணி, சேலம் .உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!.உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே,உருவானாதே இவ்வுன்னத உலகம்.உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி,உலகை எந்நாளும் இயங்கச் செய்பவனே உழைப்பாளி.உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும்உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது.உழைப்போரின் வியர்வைத்துளிகள் உருவாக்கிய உலகம்,உழைப்போரால் பசியாறுகிறது.உழைப்பவன் அழுக்காகி உலகை அழகாக்குகிறான்.உழைப்பவனின் வியர்வையால் உலகம் மணக்கிறது.உழைப்பவன் ஓய்வெடுத்தால்உலகம் சுழல்வதை நிறுத்தும்.உழைப்பவன் உழைக்க மறுத்தால்உலகம் இன்னலில் சுழலும்.உழைப்பாளரின்றேல் உலகில்லை.உலகில்லையென்றால் உயிர்களில்லை.உழைப்பாளிகளின் உருக்குக் கரங்களால் உருவான உலகம்உழைப்போரை உயர்த்திட உருவானதே உழைப்பாளர் தினம்.உலகில் சமத்துவம் மலர உழைப்போரை ஏத்துவோம்.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.உழைக்கும் தோழர்களை ஒன்றாய்த் திரட்டிஉலகம் நமதென்று சிந்து பாடுவோம்..***************************.வாசிப்பதும் தியானம்!.புத்தகம் போதிமரம்.புரட்டுவோர் புத்தர் ஆகலாம்.உலகமே இயற்கை எழுதும்வண்ணப் புத்தகம் தான்.அணிவகுத்த எண்ணங்கள் எழுத்தாணி தழுவபிறந்தது புத்தகமாய்.சைகையில் தொடக்கம், ஒலிக்குறிப்பில் வளர்ச்சிஓவிய எழுத்துகள்!அகத்தைப் புத்தாக்கம் செய்திடும்நல்லதொரு புத்தகம்.திருப்பப் பட்ட புத்தகம்,'திறக்கும்' நம் மனக்கதவை!தன்னை மறந்த நிலையில்புத்தகம் படித்தலே தியானம்!