விழிப்புணர்வு.– தனுஜா ஜெயராமன்."ஒருவரை ஏமாற்றணும்னா அவர் ஆசைகளை தூண்டணும்"மிகப் பிரபலமான 'சதுரங்க வேட்டை' பட வசனம் இது. ஆனால் இன்றும்மிகச் சர்வ சாதாரணமாக நடந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் இந்த சூட்சமத் தொழில். தோழி ஒருவர் போன் செய்திருந்தார். புதியத் திட்டம் ஒன்று வந்திருப்பதாகவும் அதில் பல மடங்கு லாபம் வருவதாகவும் கூறினார். அதில் சேர்ந்து பயன் பெறவும், அந்தத் திட்டங்களை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் வேண்டினார்..'மாதம் மிகக் குறைந்தத் தொகை 2000/- கட்டி உறுப்பினரானால் போதும். அதன் பிறகு ஐந்துப் பேரை சேர்த்தால் உங்களுக்கு 1000/- உடனடியாக உங்கள் அக்கவுண்டில் வந்து சேரும். அதன் பிறகு அந்த நபர்களின் மூலம் சேரும் ஒவ்வொரு நபருக்கும் உங்களுக்கு நூறு நூறு ரூபாயாக வந்துக்கொண்டே இருக்கும். இந்தத் திட்டத்தில் சேரவேண்டும் அதேபோல் உங்கள் நண்பர்களையும் சேர்க்க வேண்டும்' என்றார்..அவர் கூறியது மிகவும் சுலபமாகப் பணம் செய்யும் ஒரு ஏமாற்று வேலைதான். மிகச் சுலபமாக பலர் தூண்டிலில் விழும் வாய்ப்புகள் அதிகம் .பேராசை கொண்ட, சுலபமாகப் பணம் சம்பாதிக்க நினைக்கும் பலரும் சுலபமாக விழுந்து விடுவர். ஆக்சுவலாக தோழியும் அதில் விழுந்து கிடக்கும் நபர்களில் ஒருவர்தான்..இதன் உள் சூட்சமம் எவ்வளவு பேருக்குப் புரியும். இதனை நடத்தும் நபர்கள் மிகப் புத்திசாலிகள்..முதலில் நீங்கள் 2000 கட்டுகிறீர்கள். பிறகு ஐந்து பேரைச் சுலபமாகச் சேர்ப்பீர்கள். அவர்கள் ஆளுக்கு 2000 என அந்தக் கம்பெனிக்கு 10000/- கட்டியிருப்பார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆயிரம் மட்டுமே உங்கள் கணக்கில் வரவு வைப்பார்கள். அவர்களுக்கு லாபம் மீதி 9000/- அதன் பிறகு அந்த ஐவர் சேர்க்கும் நபர்கள் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு நூறு மட்டுமே கிடைக்கும். சேர்த்தவருக்கு இருநூறு என்றாலும் மீதம் 1700/- ரூபாய் அவர்களுக்கு லாபமாக மட்டுமே கிடைக்கும். இது எல்லாமே இந்தச் செயின் ப்ரேக் ஆகாமல் இருக்கும் வரை மட்டுமே ஒழுங்காக நடக்கும். அதன்பிறகு அந்தத் தொழில் நடைபெறாது. பலரிடமிருந்து பணம் பெற்றதும், குறிப்பிட்ட அமௌண்ட் சேர்ந்ததும் நடையைக் கட்டி விடுவார்கள். நாம் ஏமாந்தது சிறிய தொகை என்பதால் நாமும் நகர்ந்துவிடுவோம். மேற்கூறியவற்றை நன்றாக மீண்டும் படித்துப் பாருங்கள். இந்தச் சேர்க்கை நடைபெறும் வரை அவர்களுக்கு லாபம் மட்டுமே தவிர நஷ்டமே கிடையாது. பின்னர் மொத்தமாய் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள். நபர்கள் சேரும் வரை ஓடட்டுமே. அதுவரை கூட அவர்களுக்கு முற்றிலும் கொள்ளை லாபமே. நிச்சயம் ஒருகட்டத்தில் இந்தச் சேர்க்கை நின்றுபோகும்..அதனால் நாமும் ஏமாறுவதோடு, இன்னமும் பலரை ஏமாற வைத்திருப்போம். இதனால் சுற்றமும் நட்பும் நம்மையும் ஏமாற்றுகிறார்கள் என கைநீட்டி குற்றச்சாட்டு வைக்கும் பொல்லாப்பும் உண்டு..முதலில் சேரும் நபர்களுக்குப் பணம் வந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவர்களே அந்தக் கம்பெனியின் முதற்சொத்து. கம்பெனி பற்றி பணவரவு பற்றி போகிற வருகிறவர்களிடம் அடித்துவிட்டு மற்றவர்களின் ஆசையைத் தூண்டும் வேலையை செவ்வனே செய்து வருவார்கள். அவர்களின் இலவச விளம்பரதாரர்களாக இவர்கள் செயல்படுவார்கள். அதன்பிறகு சேர்ப்பவர்களுக்கு எப்போதும் பட்டை நாமம்தான்….எப்போதுமே வெறும் பணத்தைப் பணத்தால் மட்டும் பெருக்க இயலாது. அதற்கு மிதமிஞ்சிய உழைப்பு தேவை. உழைப்பு மட்டுமே நமக்கான உயர்வைத் தரும் என்ற சாதாரண உண்மையைப் புரிந்து கொள்வோம். இது அவர்களுக்கு ஒரு சீசனல் பிஸினஸ். அவ்வப்போது வெவ்வேறு திட்டங்களாக வெவ்வேறு பெயரில், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகிற ஒரு ஏமாற்றுத் தொழில்..இவர்களுக்கு மக்களின் முட்டாள்தனங்கள் மட்டுமே மூலதனம். மக்களின் பேராசையே அவர்களின் ஏமாற்றுத் தொழில் வளம் பெற பெருங்காரணம்..உழைக்காமல் வரும் ஒரு தம்பிடிப் பணமும் நம் உடம்பில் ஒட்டாது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி என்பதும் உங்கள் ஆசையைத் தூண்டும் உத்தியே தவிர வேறில்லை..இப்படி ஏமாந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கும். பலரும் அவமானம் கருதி வெளியே சொல்வதில்லை. சிறியத் தொகை என்பதால் புகார்களும் அதிகம் எழ வாய்ப்பில்லை..இனி எங்காவது யாராவது அதிக பணம், அதிக லாபம், அதிக வட்டி வீதம் என உங்கள் ஆசையைத் தூண்டினால் கவனமாக இருங்கள். இன்னொன்று அவள்/ அவன் கட்டுகிறான்… நாமும் கட்டலாம் என்கிற ஆட்டுமந்தை மனப்பான்மையையும் விட்டு ஒழியுங்கள்!.எதுவாக இருந்தாலும் நமது ஆசையே ஏமாற்றத்திற்குக் காரணம். கவனமாக இருங்கள்! ஏமாறாதீர்கள்! ஏமாற்றாதீர்கள்!
விழிப்புணர்வு.– தனுஜா ஜெயராமன்."ஒருவரை ஏமாற்றணும்னா அவர் ஆசைகளை தூண்டணும்"மிகப் பிரபலமான 'சதுரங்க வேட்டை' பட வசனம் இது. ஆனால் இன்றும்மிகச் சர்வ சாதாரணமாக நடந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் இந்த சூட்சமத் தொழில். தோழி ஒருவர் போன் செய்திருந்தார். புதியத் திட்டம் ஒன்று வந்திருப்பதாகவும் அதில் பல மடங்கு லாபம் வருவதாகவும் கூறினார். அதில் சேர்ந்து பயன் பெறவும், அந்தத் திட்டங்களை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் வேண்டினார்..'மாதம் மிகக் குறைந்தத் தொகை 2000/- கட்டி உறுப்பினரானால் போதும். அதன் பிறகு ஐந்துப் பேரை சேர்த்தால் உங்களுக்கு 1000/- உடனடியாக உங்கள் அக்கவுண்டில் வந்து சேரும். அதன் பிறகு அந்த நபர்களின் மூலம் சேரும் ஒவ்வொரு நபருக்கும் உங்களுக்கு நூறு நூறு ரூபாயாக வந்துக்கொண்டே இருக்கும். இந்தத் திட்டத்தில் சேரவேண்டும் அதேபோல் உங்கள் நண்பர்களையும் சேர்க்க வேண்டும்' என்றார்..அவர் கூறியது மிகவும் சுலபமாகப் பணம் செய்யும் ஒரு ஏமாற்று வேலைதான். மிகச் சுலபமாக பலர் தூண்டிலில் விழும் வாய்ப்புகள் அதிகம் .பேராசை கொண்ட, சுலபமாகப் பணம் சம்பாதிக்க நினைக்கும் பலரும் சுலபமாக விழுந்து விடுவர். ஆக்சுவலாக தோழியும் அதில் விழுந்து கிடக்கும் நபர்களில் ஒருவர்தான்..இதன் உள் சூட்சமம் எவ்வளவு பேருக்குப் புரியும். இதனை நடத்தும் நபர்கள் மிகப் புத்திசாலிகள்..முதலில் நீங்கள் 2000 கட்டுகிறீர்கள். பிறகு ஐந்து பேரைச் சுலபமாகச் சேர்ப்பீர்கள். அவர்கள் ஆளுக்கு 2000 என அந்தக் கம்பெனிக்கு 10000/- கட்டியிருப்பார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆயிரம் மட்டுமே உங்கள் கணக்கில் வரவு வைப்பார்கள். அவர்களுக்கு லாபம் மீதி 9000/- அதன் பிறகு அந்த ஐவர் சேர்க்கும் நபர்கள் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு நூறு மட்டுமே கிடைக்கும். சேர்த்தவருக்கு இருநூறு என்றாலும் மீதம் 1700/- ரூபாய் அவர்களுக்கு லாபமாக மட்டுமே கிடைக்கும். இது எல்லாமே இந்தச் செயின் ப்ரேக் ஆகாமல் இருக்கும் வரை மட்டுமே ஒழுங்காக நடக்கும். அதன்பிறகு அந்தத் தொழில் நடைபெறாது. பலரிடமிருந்து பணம் பெற்றதும், குறிப்பிட்ட அமௌண்ட் சேர்ந்ததும் நடையைக் கட்டி விடுவார்கள். நாம் ஏமாந்தது சிறிய தொகை என்பதால் நாமும் நகர்ந்துவிடுவோம். மேற்கூறியவற்றை நன்றாக மீண்டும் படித்துப் பாருங்கள். இந்தச் சேர்க்கை நடைபெறும் வரை அவர்களுக்கு லாபம் மட்டுமே தவிர நஷ்டமே கிடையாது. பின்னர் மொத்தமாய் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள். நபர்கள் சேரும் வரை ஓடட்டுமே. அதுவரை கூட அவர்களுக்கு முற்றிலும் கொள்ளை லாபமே. நிச்சயம் ஒருகட்டத்தில் இந்தச் சேர்க்கை நின்றுபோகும்..அதனால் நாமும் ஏமாறுவதோடு, இன்னமும் பலரை ஏமாற வைத்திருப்போம். இதனால் சுற்றமும் நட்பும் நம்மையும் ஏமாற்றுகிறார்கள் என கைநீட்டி குற்றச்சாட்டு வைக்கும் பொல்லாப்பும் உண்டு..முதலில் சேரும் நபர்களுக்குப் பணம் வந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவர்களே அந்தக் கம்பெனியின் முதற்சொத்து. கம்பெனி பற்றி பணவரவு பற்றி போகிற வருகிறவர்களிடம் அடித்துவிட்டு மற்றவர்களின் ஆசையைத் தூண்டும் வேலையை செவ்வனே செய்து வருவார்கள். அவர்களின் இலவச விளம்பரதாரர்களாக இவர்கள் செயல்படுவார்கள். அதன்பிறகு சேர்ப்பவர்களுக்கு எப்போதும் பட்டை நாமம்தான்….எப்போதுமே வெறும் பணத்தைப் பணத்தால் மட்டும் பெருக்க இயலாது. அதற்கு மிதமிஞ்சிய உழைப்பு தேவை. உழைப்பு மட்டுமே நமக்கான உயர்வைத் தரும் என்ற சாதாரண உண்மையைப் புரிந்து கொள்வோம். இது அவர்களுக்கு ஒரு சீசனல் பிஸினஸ். அவ்வப்போது வெவ்வேறு திட்டங்களாக வெவ்வேறு பெயரில், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகிற ஒரு ஏமாற்றுத் தொழில்..இவர்களுக்கு மக்களின் முட்டாள்தனங்கள் மட்டுமே மூலதனம். மக்களின் பேராசையே அவர்களின் ஏமாற்றுத் தொழில் வளம் பெற பெருங்காரணம்..உழைக்காமல் வரும் ஒரு தம்பிடிப் பணமும் நம் உடம்பில் ஒட்டாது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி என்பதும் உங்கள் ஆசையைத் தூண்டும் உத்தியே தவிர வேறில்லை..இப்படி ஏமாந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கும். பலரும் அவமானம் கருதி வெளியே சொல்வதில்லை. சிறியத் தொகை என்பதால் புகார்களும் அதிகம் எழ வாய்ப்பில்லை..இனி எங்காவது யாராவது அதிக பணம், அதிக லாபம், அதிக வட்டி வீதம் என உங்கள் ஆசையைத் தூண்டினால் கவனமாக இருங்கள். இன்னொன்று அவள்/ அவன் கட்டுகிறான்… நாமும் கட்டலாம் என்கிற ஆட்டுமந்தை மனப்பான்மையையும் விட்டு ஒழியுங்கள்!.எதுவாக இருந்தாலும் நமது ஆசையே ஏமாற்றத்திற்குக் காரணம். கவனமாக இருங்கள்! ஏமாறாதீர்கள்! ஏமாற்றாதீர்கள்!