ஜோக்ஸ்!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

''அந்த அருவி கீழே நகைச்சுவை எழுத்தாளர்கள் கூட்டமா நிக்கிறாங்களே… ஏன்?"
''அது ஜோக் ஃபால்ஸாம்!"
– நிலா, திருச்சி

————————

''வாளுக்கு வாள் மோதி பார்க்கலாமா என்று கேட்ட எதிரி நாட்டு மன்னரிடம் நம் மன்னர் என்ன சொன்னார்?"
"காலுக்கு கால் ஓடி பார்க்கலாமா என்று சொன்னாராம்!"
– நிலா, திருச்சி

————————

''நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்…"
"இருக்கட்டும்… அதுக்காக அரண்மனை ஆராய்ச்சி மணியாக குல்பி ஐஸ் வண்டி மணியைக் கட்டுவது சரியல்ல!"
– நிலா, திருச்சி

————————

லாக்டவுன் தமாஷ்
''வீட்ல பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலடா… கொரோனா வரக்கூடாதுன்னு கேசரியில கூட மிளகு, சீரகம் தாளிச்சுக் கொட்றா."
''உங்க வீட்ல எவ்வளவோ பரவாயில்லடா… என் மனைவி கபசுரக் குடிநீர்லதான் உப்புமாவே கிண்டறா…"
– ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

————————

"மன்னரை எங்கே மாதக்கணக்காய் அரண்மனை பக்கமே காணோம்?"
"அவர் 'ஒர்க் ஃப்ரம் அந்தப்புறம்' அதான்!
-சம்பத் குமாரி, திருச்சி

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com