வாசகர் ஜமாய்க்கிறாங்க!.தொகுப்பு : எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.கண்ணாடி, தங்கம், பஞ்சலோகம், பித்தளை என பல வகைகளில் வளையல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவையனைத்தையும் தாண்டி இன்று பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல் என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டன. இருப்பினும், பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்..மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய அனைத்துப் பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்..கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை, மகாலட்சுமி தனது கையில் அணிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்..வட மாநிலத்தவர்கள் இந்த சங்கு வளையல்களை தங்களுடைய பெண்களுக்கு சீதனமாகக் கொடுப்பார்களாம், பெண் புகுந்த வீட்டில் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக!.சங்கு வளையல் அணிந்துகொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழ வேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்..சங்கு வளையலை அணிந்து கொண்டு, அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அது ஓஹோவென பெருகும். அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சங்கு வளையல்களை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. இதனால் தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தைப் பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்..வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளையல்கள் இருப்பின், அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறை அரிசி பானையில் இந்த சங்கு வளையல்களை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்குப் பஞ்சம் வராது. சங்கு வளையல்களை அணிந்துகொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனைத் தரும்..மேலே சொல்லப்பட்டுள்ள அத்தனை நன்மைகளையும் பெற வேண்டும் என்றால், அசல் சங்கு வளையல்களை கொஞ்சம் செலவு செய்து வாங்க வேண்டி இருக்கும். போலியான சங்கு வளையல்கள் நிறைய விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து நல்ல சங்கு வளையல்கள் உங்களுக்குக் கிடைத்தால் வாங்கி அணிந்துகொள்ளலாம். மற்றவருக்கும் பரிசுப் பொருளாகக் கொடுக்கலாம். பெண்கள் தங்களுடைய கைகளில் இந்த வளையலைப் போட்டுக்கொண்டாலே போதும், நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.தொகுப்பு : எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.கண்ணாடி, தங்கம், பஞ்சலோகம், பித்தளை என பல வகைகளில் வளையல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவையனைத்தையும் தாண்டி இன்று பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல் என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டன. இருப்பினும், பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்..மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய அனைத்துப் பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்..கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை, மகாலட்சுமி தனது கையில் அணிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்..வட மாநிலத்தவர்கள் இந்த சங்கு வளையல்களை தங்களுடைய பெண்களுக்கு சீதனமாகக் கொடுப்பார்களாம், பெண் புகுந்த வீட்டில் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக!.சங்கு வளையல் அணிந்துகொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழ வேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்..சங்கு வளையலை அணிந்து கொண்டு, அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அது ஓஹோவென பெருகும். அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சங்கு வளையல்களை தானமாக வாங்கிக் கொடுப்பது மிக மிக நல்லது. இதனால் தானம் கொடுத்தவரும் நன்றாக இருப்பார்கள். தானத்தைப் பெற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்..வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளையல்கள் இருப்பின், அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறை அரிசி பானையில் இந்த சங்கு வளையல்களை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்குப் பஞ்சம் வராது. சங்கு வளையல்களை அணிந்துகொண்டு, பெண்களின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு செய்யும் பூஜை முழு பலனைத் தரும்..மேலே சொல்லப்பட்டுள்ள அத்தனை நன்மைகளையும் பெற வேண்டும் என்றால், அசல் சங்கு வளையல்களை கொஞ்சம் செலவு செய்து வாங்க வேண்டி இருக்கும். போலியான சங்கு வளையல்கள் நிறைய விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து நல்ல சங்கு வளையல்கள் உங்களுக்குக் கிடைத்தால் வாங்கி அணிந்துகொள்ளலாம். மற்றவருக்கும் பரிசுப் பொருளாகக் கொடுக்கலாம். பெண்கள் தங்களுடைய கைகளில் இந்த வளையலைப் போட்டுக்கொண்டாலே போதும், நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.