நிலைமாறும் உலகில் நிரந்தரமில்லை எதுவும்!

Nothing is permanent
Nothing is permanent

நிலையாக இருக்கும் இந்த உலகில், நிரந்தரம் என்பது யாருக்கும் எதுவும் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ள பதவி, பட்டம், அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. இவ்வளவு ஏன், நமது பெயரும் கூட அப்படித்தான். மேற்கூறியவை சில நாட்கள் மட்டுமே நம்மோடு. பிறகு வேறொருவருடன் நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும். சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள்தான் நாம். இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று அதில் மயங்காதீர்கள்.

ஒரு காவல்காரன் தினமும் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில், ‘ஜாக்கிரதை… ஜாக்கிரதை’ என்று கத்திக்கொண்டே போவான். ஒருநாள் அவன் அவசரமாக வேறு ஒரு ஊருக்குப் போக வேண்டி இருந்ததால், அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று. அவன் பிள்ளை கொஞ்சம் ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு, 'ஜாக்கிரதை… ஜாக்கிரதை' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் செய்த வேலையைச் செய்தான்.

மறுநாள் காலை அந்த நாட்டு ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். ராஜா அந்தப் பையனைப் பார்க்கத்தான் வந்தான். ‘ஐயோ, ராஜாவே வந்திருக்கிறார். என் பிள்ளை என்ன தவறு செய்து விட்டானோ? ராஜா இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ?’ என்று எண்ணி காவல்காரன் மிகவும் நடுங்கினான். ஆனால், ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ அங்கு வந்தான். எதற்காக?

முதல் நாள் இரவு அந்தப் பையன், ‘ஜாக்கிரதை… ஜாக்கிரதை’ என்று அப்பாவைப் போல் வெறுமனே கத்திக்கொண்டு போகவில்லை. சில வார்த்தைகள் சேர்த்து சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவைதான்.

“அடே, தூங்குமூஞ்சி… விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா, தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய், வீடும் பொய், சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை, எல்லாம் மாயை. இதை எல்லாம் நம்பி ஏமாறாதே. உடனே விழித்துக்கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக்கொள் ஜாக்கிரதை. ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா. அவை உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவைகள்.

இதையும் படியுங்கள்:
மன உளைச்சலைப் போக்கும் எளிய வழிகள்!
Nothing is permanent

விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே. உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடித் துரத்து. விழித்துக் கொள், ஜாக்கிரதை… ஜாக்கிரதை. மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள். இளமை, வாலிபம் நிரந்தரமல்ல. நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன? நான் என்ன? எல்லாமே மாயை. விழித்துக்கொள். ஜாக்கிரதை… ஜாக்கிரதை” என்று கூறிக்கொண்டு சென்றதுவே ராஜாவை அவனது வீட்டு வாசலில் நிற்க வைத்தது.

உங்கள் புகழை, பதவியை, அதிகாரத்தை ஒருபோதும் நம்பாதீர்கள். இது எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஏற்றம் வரும்போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com