சுவையான ஜாமுக்கு 'ஜாம் ஜாம்' டிப்ஸ்கள்!

சுவையான ஜாமுக்கு 'ஜாம் ஜாம்' டிப்ஸ்கள்!
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

இப்போதெல்லாம் குழந்தைகள் டிஃபனுக்கு தொட்டுக்கொள்ள ஜாம் கேட்கிறார்கள். அந்தவகையில் பலரும் வீட்டிலேயே ஜாம் செய்கிறார்கள். அவ்வாறு ஜாம் செய்வதற்கான சில டிப்ஸ்களைப் பற்றி இங்கே காணலாம்.

* ஜாம் செய்வதற்கு பழுத்த பழங்களை பயன்படுத்த வேண்டும். பழக்கூழை (ஜாம்) நன்கு கொதிக்க விட வேண்டும். அப்பொழுதுதான் ஜாம் புளிக்காமல் இனிப்பாக இருக்கும்.

* ஜாம் செய்யும் போது சர்க்கரை சரியான அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை அளவு குறைந்தால் சுவை குறைந்து விடும். சர்க்கரை அளவு கூடினால் ஜாம் கெட்டி ஆகிவிடும்.

* ஜாம் செய்யும் பொழுது, அரை ஸ்பூன் கிளிசரின் சேர்த்தால், சர்க்கரை அளவை குறைக்கலாம்.

* ஜாம் கெட்டி ஆகிவிட்டால், பாத்திரத்தோடு சுடுநீரில் சிறிது நேரம் வைத்திருந்தால், இளகி வந்துவிடும்.

* ஜாமில் ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு கலந்து விட்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

* ஜாம் செய்யும் பொழுது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், பழங்கள் நன்கு மசிந்து விடும்.

* ஜாம் மிஞ்சிப் போனால் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்து குளிர்ந்த நீரை கலந்தால் சுவையான கூல்டிரிங்ஸ் தயார்.

logo
Kalki Online
kalkionline.com