கவுனி அரிசி கீர்

 கவுனி அரிசி கீர்
ஆதிரை வேணுகோபால்

ஆதிரை வேணுகோபால் வெற்றிகரமான இல்லத்தரசி, பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமையல் போட்டிகளுக்கு நடுவர். அரசியல் ,ஆன்மீகம், சமையல் சுய முன்னற்றம் போன்ற பல கட்டுரைகளை முன்னணி தின, மாத, வார இதழ்களுக்கு எழுதுபவர். இசைஞானியின்பல (குறிப்பாக 80ஸ்) பாடல்களை இன்றைய பிள்ளைகள் விரும்பும் வகையில் அலசி ஆராய்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 'பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள்' என்ற நூலின் ஆசிரியர். தற்போது 'கொஞ்சம் யோசியுங்கள் பாஸ்' என்ற தலைப்பில் நூல் வெளியிடும் மும்முரத்தில் இருப்பவர்.

Updated on

தேவையான பொருட்கள்; 

1. பால்  4 கப்

2. கவுனி அரிசி  1/2கப்

3. தேங்காய்ப் பால் 2கப்

4. சர்க்கரை 1 1/2கப்

 5. ப்ரிஞ்சி இலை  2

6. பச்சை கற்பூரம் 1 சிட்டிகை

செய்முறை;

கவுனி அரிசியை 3 மணிநேரம் ஊறவிடவும். பின் குக்கரில் 2கப் நீர் சேர்த்து கவுனி அரிசியைப் போட்டு மூடி 4 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

பாலை அடுப்பில் வைத்து பொங்கி வந்ததும், வெந்த கவுனி அரிசி+பிரிஞ்சி இலை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தேங்காய் பால்+பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து பரிமாறவும்.   

(பி.கு) கவுனிஅரிசி நன்கு குழைய வெந்த பிறகே சர்க்கரை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சர்க்கரை சேர்ந்ததும் விறைத்து விடும்.

logo
Kalki Online
kalkionline.com