பனங்கிழங்கு புட்டு

பனங்கிழங்கு புட்டு
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

செய்முறை:

தேவையான அளவு பனங்கிழங்குகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின் நாரை உரிக்கவும்.

தடிமனான பகுதியை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைக்கவும்.

நன்கு, ஈரப்பதமின்றி காய்ந்தபின் அவற்றை மிஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவும். பின் அந்த மாவை சலித்தெடுக்கவும்.

மாவில் லேசா தண்ணி தெளித்துப் பிசிறி, இட்லி தட்டில் பரத்தி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சூடா இருக்கும்போதே, தேவையான அளவு சர்க்கரை, தேங்காய்ப் பூ துருவல், ஏலக்காய் பொடி, நெய், சிவக்க வறுத்து உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

இப்போது, சத்தும் சுவையும் நிறைந்த பனங்கிழங்கு புட்டு தயார்.

logo
Kalki Online
kalkionline.com