சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்...

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்...

* திப்பிலியுடன், சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.

* தயிரும், கீரையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.

* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

* தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு உணவு சாப்பிடக் கூடாது. இதனால் சுவாசக் கோளாறுகள் உண்டாகக் கூடும்.

* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களை சாப்பிட்டவுடன் பால் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.

* முருங்கை, முள்ளங்கி உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது.

* பசலைக் கீரை மற்றும் எள் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* வாழைக்காயும், கத்தரிக்காயும் ஒரே சமயத்தில் உட்கொண்டால், வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படும்.

* வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக் கூடாது.

* துளசிச் சாறு அருந்திய அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் குடிக்க கூடாது.

* கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* மாத்திரைகள் உட்கொண்டு அடுத்த இரண்டு மணி நேரம் காஃபி குடிக்கக் கூடாது. காஃபி, மருந்தின் தன்மையை முறித்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com