தேவையான பொருட்கள் :
வறுத்து அரைக்க:
கொத்தமல்லி விதை :2ஸ்பூன்
நீட்டுமிளகாய் வற்றல் : 8
கருவேப்பிலை : ஒரு கொத்து
துருவிய தேங்காய் : அரை மூடி
தாளித்து வறுக்க : தேங்காய் எண்ணெய்!
எலுமிச்சை அளவு புளி
ஒரு முருங்கைக்காய்
பத்து (அ) பனிரெண்டு சின்ன வெங்காயம்
செய்முறை :
சின்ன வெங்காயத்தை உறித்து இரண்டிரண்டாகவோ தனியாக வோ சைஸுக்கு ஏற்றவாறு நறுக்கிக் கொள்ளவும் !
முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் !
புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்!
வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி 2 ஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு வறுத்து சிவந்ததும்
பின்னர் அதில் 7 அ 8 மிளகாய்வற்றலைப் போட்டு வறுக்கவும் !
ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும் !
அதே வாணலியில் இன்னொரு ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காயைப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும் !
வறுக்க வறுக்க மெல்ல கலர் மாறி ப்ரவுன் நிறம் வரும் போது இறக்கவும் ! இதுதான் தீயலோட பேஸ் !
தேங்காய் துருவலை அரைக்க வைத்திருந்த கலவையில் கொட்டி நன்கு கலக்கவும் ! அதில் நீர் கலந்து நல்ல மையான நீர்த்த பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் !
வாணலியில் மறுபடி 2 ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கடுகு போட்டு பொறிந்ததும் கொஞ்சம் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ,முருங்கைக்காய் போடவும் ! நன்கு புரட்டி , ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்! ஊறவைத்திருந்த புளியை கெட்டியாகக் கரைத்துக் கலக்கவும் ! இப்பொழுது புளித்தண்ணீர், மஞ்சள், உப்பு எல்லாம் சேர்த்து முருங்கை, சி.வெ வோடு சேர்ந்து நன்கு வேகும் வரை ஒரு 5-7 நிமிடம் மூடி வைக்கவும் !
பின்னர் திறந்து அரைத்து வைத்து இருந்த கலவையைக் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கிவிடலாம் !
தீயல் ரெடி