
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
மைதா மாவு - 100 கிராம்
வெல்லம் - 3 அச்சு
தேங்காய் துருவியது - 1 கப்
நெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
2 வாழைப்பழத்தை ஆவியில் வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
½ மூடி தேங்காய் துருவியதையும் , 3 அச்சு பொடி செய்த வெல்லத்தையும் ஒன்றாக சேர்த்து பிசையவும் .
பிசரிய கலவையை மைதாமாவில் பிரட்டி உருண்டைகளாக செய்யவும் .
ஒவ்வொரு உருண்டையாக வாழை இலையில் வைத்து அடை போலத் தட்டி ஓர் சட்டியில் ஆவியில் வேக வைக்கவும் .
சுடச் சுட ஆவி பறக்க பழ போளி தயார்.
-ராமாயி ராமநாதன்