முடி, நகம் எப்போது வெட்டலாம்? வாஸ்து சொல்வது என்ன?

nail cut
nail cut

மனிதர்களுக்கு முடியும், நகமும் வளர்ந்து கொண்டே போகும். அவர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொருவரும் வெட்டி கொள்வார்கள். ஆனால் பெரியோர்கள் 6 மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது இந்த கிழமையில் வெட்டகூடாது, முடி வெட்டக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் வாஸ்து கூறுவது என்ன. எப்போது முடியும், நகமும் வெட்டலாம் என தெரிந்துகொள்ளலாம். இதை தவிர நல்ல நாட்களில் எல்லாம் நகம் வெட்டினால் பீடை பீடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

குறிப்பாக நாம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று தான் நாம் முடிவெட்டுவது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்கிறோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் இந்த காரியத்தை நிச்சயம் செய்யக்கூடாது என வாஸ்து கூறுகிறது.

திங்கட்கிழமை

திங்கள் என்றால் சோமவாரம். சோம் என்பது இந்திய ஜோதிடத்தில் சந்திரனின் மற்றொரு பெயர். திங்களன்று முடி வெட்டுவது அல்லது நகங்களை வெட்டுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திங்கட்கிழமை நகம், முடி வெட்டுவதால் நீங்கள் நோய்வாய்ப்படலாம்.

செவ்வாய் 

மத நம்பிக்கையின் படி, செவ்வாய் என்பது அனுமனுடன் தொடர்புடையது மற்றும் ஜோதிட நம்பிக்கையின் படி, செவ்வாய் கிழமை செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. செவ்வாய்கிழமையன்று நகங்கள் அல்லது முடிகளை வெட்டுவது உங்களின் கோப குணத்தை அதிகரிக்கும். செவ்வாய் கிழமைகளில் நகங்கள் அல்லது முடி வெட்டுவது உங்கள் ஆயுளை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

புதன்

சாஸ்திரங்களின்படி நகங்கள், முடி மற்றும் தாடியை வெட்டுவதற்கு புதன்கிழமை உகந்ததாக கருதப்படுகிறது. இதனால், உங்கள் குடும்ப கடவுளின் ஆசியை பெறுவீர்கள். அத்துடன், லட்சுமி தேவியின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். புதன்கிழமை முடி வெட்டுவது உங்கள் ஜாதகத்தில் புதன் நிலை வலுவாக வைத்திருக்கும். புதனின் அருளால் உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன் செல்வமும் புகழும் பெருகும்.

வியாழன்

வியாழன் கிழமை விஷ்ணுவின் நாளாகக் கருதப்படுகிறது மற்றும் இந்த நாள் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த நாளில் முடி வெட்டினால் லட்சுமி அம்மாள் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள். அதனால் தான் வியாழன் அன்று முடி மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம் என கூறுகின்றனர்.

வெள்ளி

வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியுடன் தொடர்புடைய நாள். இந்த நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வம், புகழ் இரண்டையும் பெறுவீர்கள்.

சனிக்கிழமை

சனிக்கிழமை முடி அல்லது நகங்களை வெட்டுவதற்கு உகந்த நாள் அல்ல. இந்த நாளில் நகம் அல்லது முடி வெட்டினால், அகால மரணம் மற்றும் நிதி இழப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் முடி அல்லது சவரம் செய்வது பித்ரா தோஷத்தை ஏற்படுத்தும்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக் கிழமை முடி வெட்டுவது நல்லதல்ல. மஹாபாரதத்தின் அனுஷனா பர்வாவில் சூரியனின் நாளில் நகங்களையும் முடியையும் வெட்டுவது செல்வம், ஞானம் மற்றும் மதத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com