வாசகியர் கவிதைகள்!

கவிதைத் தூறல்
வாசகியர் கவிதைகள்!

- ஹ்ரிஷிகேஷ்

.

ஒரு மழைத்துளியின் பயணம்!

மேகங்களின் செல்ல மோதல்களுக்கு

மெதுவாக மனமுவர்ந்து – உன்னுருவத்தை

மெலிதாக்கி மெல்ல கீழிறங்கினாய்!

நீ செய்த தியாகத்தை

நிராகரிக்க மனமின்றி

நிறங்கள் பல கொண்ட

நீளக்குடை நண்பனை துறந்தேன்!

ற்றுக்கொண்ட பயணம் – தடை

ஏதுமின்றி நிறைவேற

என் படைகளை உனக்காக

ஏவுகிறேன் காகிதக் கப்பல்களாக!

-------------

- மகாலட்சுமி சுப்பிரமணியன்

.

அமரர்

ருக்கும் போது அடாவடியாக

எல்லோராலும் வெறுக்கப்பட்டவர்

அமரர் ஆனதும்

அனைவருக்கும் கடவுள் ஆகி விடுகிறார்.

---------

பொம்மை வியாபாரி

ல கார்கள் வைத்திருந்தும்

நடந்தே செல்கிறான்

பொம்மை வியாபாரி.

---------

மழைத்துளி

முற்றத்து கைப்பிடி சரிவில்

தன்முறைக்காக காத்திருந்து

சறுக்கி மகிழ்கிறது

மழைத்துளி.

---------

கனவு கண்டவன்

திருமணத்திற்கு முன்

கல்யாணம் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுவதாக

நம்பி கனவு கண்டவன்

தொடங்குகிறான் ஒரு மேட்ரிமோனியல் சைட்டை.

---------

அனுதாபத்துக்குரியவர்

லரின் ஆசையை நிராசையாக்க

பழியும் பாவமும்

சுமந்தவர்

தண்டனைக்குப் பிறகு

அனுதாபத்துக்குரியவராகி

விடுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com