விலங்குகள் இறைவன் சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள்!

விலங்குகள் இறைவன் சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள்!

🕉அணில், குரங்கு, காகம் -சிவபெருமானை வழிபட்ட தலம்-குரங்கணில்முட்டம்.

சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் மாமண்டூர் எனும் இடத்தில் உள்ளது.

🕉புலி சிவபெருமானை வழிபட்ட தலம் - திருப்புலிவனம்

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்.

சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன் கோவில்

நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன் கோவிலில் அம்பிகை தேவர்கள் சூழ்ந்திருக்க சிவனை வழிபட்டிருக்கிறார். கோ எனும் பசு வழிபட்டதால் அம்பிகை கோமதி என அழைக்கப்படுகிறாள்.

🕉எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவெறும்பூர்

அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் பிரசாததை எறும்புகள் எடுத்துக்கொள்கிறது.

🕉 ஈ - வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் -திருஈங்கோய்மலை.

திருச்சி மாவட்டம், தொட்டியம் to முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை).

🕉பாம்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருப்பாம்புரம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேசன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

🕉மயில்-சிவபெருமானை வழிபட்ட தலம்-மயிலாடுதுறை

சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.

🕉கழுகு சிவபெருமானை வழிபட்ட தலம்-திருக்கழுக்குன்றம்.

நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருகின்றன.

🕉வண்டு-சிவபெருமானை பூஜித்த தலம்-திருவண்டுதுறை.

திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்.

இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

🕉சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவானைக்காவல்

திருச்சிராப்பள்ளியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது.

இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது.

சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது.

யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும்.

யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன.

இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.

🕉நண்டு-சிவபெருமானை வழிபட்ட தலம்-நண்டாங்கோவில்.

சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

🕉சக்ரவாகப் பறவை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருச்சக்கராப் பள்ளி.

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

🕉யானை-சிவனை பூஜித்த தலம்-திருக்கொட்டாரம்.

துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

🕉பசு-சிவனை வழிபட்ட தலம்-பட்டீஸ்வரம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

🕉ஆமை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருக்கச்சூர்

இங்குள்ள சிவனை வழிபட்டு திருமால் மந்தார தாங்குவதற்கு (கூர்மமாக) தேவையான சக்தியை பெற்றுள்ளார்.

🕉கிளி வழிபட்ட தலம்-சேலம் சுகவனேஸ்வரர்.

கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவன் சேலத்தில் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.

🕉சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம்-வட குரங்காடுதுறை.

தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இங்குள்ள சிவன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

🕉இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல விலங்குகள்.

அதன் காரணம் தேவர்களோ, முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்க்கு விலங்காக மாறி சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள்.

இது வெறும் கதை அல்ல. உண்மையில் நடந்த சம்பவத்திற்கான வரலாறு இருக்கிறது. சில உயிரினங்கள் தன்னை அறியாமலே இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com