பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

பிரதட்சணம் என்பது இந்து சமயக் கோயில்களையும், இறைவனையும் பக்தியோடு வலம் வருகின்ற முறையாகும்.

* பிரதட்சண முறையில் அங்கப் பிரதட்சணம், அடிப் பிரதட்சணம், சோம சூக்தப் பிரதட்சணம், வேப்பிலை ஆடை பிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரதட்சணம் என்று பல வகைகள் உள்ளன.

* பிரகாரத்தை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்னென்ன பலங்கள் என்று தெரிந்து கொள்வோமா?

மூன்று முறை - விரும்பிய காரியம் நிறைவேறும்

ஐந்து முறை - காரிய வெற்றி

ஏழு முறை - நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி

ஒன்பது முறை - குழந்தைப் பேறு

பதினொரு முறை - ஆயுள் விருத்தி

பதினைந்து முறை - செல்வம் பெருகும்

108 முறை - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

1008 முறை - விரும்பிய பெண் மனைவியாகக் கிடைப்பாள்.

* "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்" என்ற பழமொழி அடித்துக் கொள்வதைக் குறிப்பதல்ல.. கோவிலில் அடி பிரதட்சணம் செய்வது வாழ்வில் வெற்றி பெற உதவும் என்பதே ஆகும்.

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

* தினமும் அரசமரம் சுற்றுவதன் பலன்கள்:

ஞாயிறு - நோய் அகலும்

திங்கள் - சுப நிகழ்வு கைகூடும்

செவ்வாய் - வெற்றி கிட்டும்

புதன் - தொழில் வளர்ச்சி அடையும்

வியாழன் - கல்வி, ஞானம் வளரும்

வெள்ளி - சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

சனி - வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள்

சனிக்கிழமை மட்டும் அரசமரத்தை தொட்டு வணங்கலாம். இதர நாட்களில், சற்று தள்ளி வலம் வரலாம். பகல் நேரத்தில் மட்டும் வலம் வருதல் நன்று.

* காஞ்சி கையிலாயநாதர் ஆலய கருவறையைச் சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதனை அவ்விதம் வலம் வருபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். இதனை 'சொர்க்கப் பிரதட்சணம்' என்று கூறுவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com