டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாள்ர்களை ஈர்ப்பதற்காக வினோத போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 10 அடி நீளத்தில் பேப்பெர் ரோஸ்ட் தோசை ஒன்றை விதவித சைடு-டிஷ்களுடன் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பர்களுக்கு ரூ. 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்ற போட்டியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி டம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான பதிவு இணையத்தில் வைரலாகியது.
அதில் தெரிவித்ததாவது: இந்த் உண்வகத்தில் தயாரிக்கப்படும் 10 அடி நீளமுள்ள தோசையை ஒரே நபர் 40 நிமிடத்துக்குள் முழுமையாக சாப்பிட்டு முடிக்க வேண்டும் . அப்படி சாப்பிட்டு அவருக்கு ரூ 71,000 பரிசு வழங்கப்படும்.
-இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களூக்கு மற்றுமொரு கண்டிஷன் – தோசையை முழுதாக சாப்பிடவில்லை என்றால் தோசையின் விலையான 1,500 ரூபாயை கொடுத்துவிட வேண்டும் என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் பலர் கலந்து கொண்டு தோல்வியுற்று தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.