தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 11 பேர் பலி! எங்கே தெரியுமா?

Gold mine
Gold mine
Published on

சூடானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூடான் கனிம வள நிறுவனம் (Sudanese Mineral Resources Company - SMRC) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த விபத்து ரெட் சி மாநிலத்தின் ஹவ்ஈத் (Howeid) பகுதியில் உள்ள கிர்ஷ் அல்-ஃபில் (Kirsh al-Fil) சுரங்கத்தில் நிகழ்ந்துள்ளது. இது ஒரு பாரம்பரிய தங்கச் சுரங்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சரிவு எப்போது நடந்தது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இடிந்து விழுந்த இந்தச் சுரங்கம், ஏற்கனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக மூட உத்தரவிடப்பட்ட ஒன்று என கனிம வள நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அங்கு சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை ஓர் உத்தம பயணம் பயப்பட வேண்டாம்!
Gold mine

சூடான் தங்கம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும். ஆனால், அங்குள்ள பல சுரங்கங்கள், குறிப்பாக பாரம்பரிய முறைகளில் செயல்படும் சுரங்கங்கள், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இயங்குகின்றன. இதனால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்வது கவலை அளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில், இதுபோன்ற சுரங்க விபத்துகள் சூடானில் பல உயிர்களைப் பறித்துள்ளன. 2023-ல் நடந்த ஒரு சம்பவத்தில் 14 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2021-ல் நடந்த மற்றொரு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் சூழல் காரணமாக, சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com