113 பயணிகளுடன் விமானம்; கிளம்புமுன் தீப்பிடித்து எரிந்து பரபரப்பு!

113 பயணிகளுடன் விமானம்; கிளம்புமுன் தீப்பிடித்து எரிந்து பரபரப்பு!

சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு திபெத் தலைநகர் லாசாவிற்கு செல்வதற்காக திபெத்திய ஏர்லைன் விமானம் ஒன்று 113 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்களுடன் கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென் விமானத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அந்த விமான நிலையத்திலிருந்து வெளியானத் தகவல்;

அந்த திபெத்திய விமானம் கிளம்புவதற்குத் தயாராக ரன் வேயில் நின்றிருந்தது. விமானத்தினுள் 113 பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் இருந்தனர். அப்போது விமானத்தின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர். அதனால் உயிரிழப்பு எதுதும் ஏற்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிட்டனர்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டது. இச்சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com