14-வது நாளாக ராகுல் காந்தி பாத யாத்திரை!

Rahul Gandhi
Rahul Gandhi
Published on

 நாட்டு மக்கள் அனைவரையும் காங்கிரஸுக்கு ஆதரவாக ஒன்று திரட்டும் நோக்கில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அந்த வகையில்  14-வது நாளாக அவரது நடைபயணம் இன்று கேரளாவில் நடைபெற்று வருகிறது.

 -இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது;

 ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை 13-வது நாளாக நேற்று ஆலப்புழா மாவட்டம் மயித்தாரா பகுதியிலிருந்து தொடங்கினார். அப்போது வழியில் செயின்ட் மைக்கேல் கல்லூரி வளாகத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டார். காலையில் தொடங்கிய பயணம் 14 கிலோமீட்டர் தூரம் சென்று குத்தியாதோடு பகுதியில் நிறைவடைந்தது.

 -இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் இன்று ராகுலின் 14-வது நாள் பயணம் தொடர்கிறது. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன், பவன் கேரா, வி.டி. சதீஷன் உள்ளிட்டோர் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com