பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தில் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தில் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழகத்தில் வரும் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,500 சிறப்புப் பேருந்துகயை இயக்க இருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பது, வார இறுதி நாட்களான இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக, தினமும் இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தின் முக்கியமான இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவுக்கும் கூடுதலாக 850 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1,500 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும், போதிய அளவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com