4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!

5ஜி சேவை
5ஜி சேவை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 நாட்டில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் வகையில் அதிதுரித 5-ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க்கை கடந்த 1-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் இன்று விஜய தசமி தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 -இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

நாட்டின் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தற்போது செயல்பாட்டில் உள்ள சிம் மூலமே இந்த 5ஜி சேவைகளைப் பெறலாம். புதிய சிம் தேவையில்லை.

 -இவ்வாறு ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com