6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் தடை!

பூச்சிக்கொல்லி மருந்து
பூச்சிக்கொல்லி மருந்து
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருத்துகளுக்கு தடை விதித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 60 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மஞ்சள் பாஸ்பரஸ் (3%) அதிகம் உள்ள ரடோல் எனப்படும் எலி மருந்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com