#BREAKING : ஆந்திர கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலி..!

andra temple stampade
andhra temple stampadesource:Samayam
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது, காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Kalki Online
kalkionline.com